என் மலர்
நீங்கள் தேடியது "mental stress"
- அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும்
- இயற்கை சூழல் மன அமைதியை அளிக்கிறது.
கிராமத்தில் இருப்பவர்களோடு ஒப்பிட்டால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு மன அழுத்தம், கவலை அதிகமாக இருக்குமாம். காரணம் நாம் வாழும் சூழல். நாம் நகர்ப்புற சூழல்களிலோ அல்லது அலுவலகத்திலோ நாள் முழுவதும் இருக்கும்போது, ஏதோ ஒன்றை தாங்கிக்கொண்டு இருப்பதுபோலவே ஒரு மன ஓட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். இதன் விளைவாக எப்போதும் ஒரு மனசோர்வு இருக்கும். ஒருநிலையில் மிகவும் அழுத்தமாக இருக்கிறது வெளியே போகலாம் எனக்கூறி, பூங்கா அல்லது ஷாப்பிங் மால்களுக்கு செல்வோம். அல்லது வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வோம். ஏன் பூங்காவிற்கு செல்கிறோம்? சுற்றுலாவிற்கு செல்கிறோம்? கொஞ்சம் நன்றாக உணர்வோம் என்பதற்காக. இதன்மூலம் நமது மனமும், உடலும் இயற்கையான சூழலில் இளைப்பாறுகின்றன என்பதை உணரலாம். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இயற்கையோடு ஒன்றிருப்பது என்னென்ன நன்மைகளை மனதிற்கும், உடலுக்கும் வழங்கும் என்பதை பார்க்கலாம்.
மனத்திறன்களை மேம்படுத்தும்
இயற்கை சூழலில் இருப்பது நம் கவலைகள் அனைத்தையும் மறக்கச்செய்து, ஒருவித அமைதியை கொடுக்கும். எந்த சிந்தனையும் ஓடாது. மனம் தெளிவாக இருக்கும். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இது உங்கள் படைப்பாற்றல் மற்றும் பிரச்சினைகளை கையாள கற்றுக்கொள்ளும் திறனையும் அதிகரிக்கும். இயற்கை சூழல் மகிழ்ச்சியான உணர்வுகளை அதிகரிக்கிறது. மேலும் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்த உதவுகிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஏதேனும் மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும்.

மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள்
மனஆரோக்கியம் மேம்படும்
அடிக்கடி வெளியே செல்வது இதய நோய்களை குறைக்க வழிவகுக்கும். அடிக்கடி வெளியே சென்றால் உங்கள் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து பெறலாம். பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, கவனச்சிதறலை தடுக்க உதவும். நாம் வெளியே இருக்கும்போது நன்றாக தூக்கம் வருவதை கவனிக்கலாம். இயற்கை ஒளியில் தினமும் வெளிப்படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. டென்மார்க்கில் 1985 மற்றும் 2003 க்கு இடையில் பிறந்த 900,000 குழந்தைகளை ஆய்வு செய்ததில், அதிக பசுமையான இடங்களைக் கொண்ட சுற்றுப்புறங்களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மனநல கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
என்ன செய்யவேண்டும்?
ஒரு நாளைக்கு ஒரு 5 நிமிடமாவது உங்கள் முகத்தில் சூரிய ஒளி படும்படி வெளியே நில்லுங்கள். இயற்கையை உணர காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு புல்லில் நடங்கள். வானிலை நன்றாக இல்லாவிட்டால், வீட்டில் ஜன்னலை திறந்துவைத்து இயற்கையை ரசியுங்கள். காற்றோட்டமாக வெளியில் நடந்து செல்லுங்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு சுற்றுலாவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். உங்கள் நாயை அருகிலுள்ள பூங்காவிற்கு ஒரு நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் விரும்புவதைப் போலவே அவைகளும் இயற்கையை ரசிக்கும். ஒரு புத்தகத்தை எடுத்துட்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில உட்காருங்க. வீட்டின் முற்றத்தில் ஒரு படரும் கொடியோ அல்லது ஏதேனும் ஒரு செடியை வளருங்கள். அடிக்கடி பூங்காக்களுக்கு செல்லுங்கள். இயற்கையோடு இணைந்து வாழுங்கள்.
- 2 நாட்களாக சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நவல்பூர் கிரேட் நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 23). ராஜஸ்ரீ பி.காம் படித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்.
கடந்த 2 நாட்களாக ராஜஸ்ரீ சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் அமுதா காய்கறி வாங்க சந்தைக்கு சென்றுள்ளார்.
பின்னர் அமுதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜஸ்ரீ வீட்டின் பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லி சூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. வேரூன்றி இருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள் ஆகியோரின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள். உளவியல் நிறுவனம் ஒன்று, 198 மனநோயாளிகளுக்கான சிகிச்சைகள் குறித்து செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
இந்தியாவின் மிக மிக குறைந்த அளவிலான நிதியே மனநலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. ஒரு லட்சம் மக்களுக்கு 0.036 சதவீதம் என்ற அளவில்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். 2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை ஆகியவற்றை காரணமாக உயர்கல்வி பெற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். படிக்காதவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பேய், பிசாசு இவற்றை காரணமாக காட்டுகிறார்கள். மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.
மனநோயாளிகள் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஆண்டாண்டு காலமாக நம்முள் பதிந்துள்ள மூட நம்பிக்கைகள், அறியாமை இவையே காரணம். ஆரம்பத்திலேயே அறிகுறிகளை கண்டுபிடித்து தரமான சிகிச்சை அளிப்பதை தடுப்பதும் இவையே. மனநோய் ஓர் அவமான சின்னமாக கருதப்படுவதால், பல தருணங்களில் மனநோயாளிகள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றனர்.
அதிலும் பெண் நோயாளிகள் இருந்தால் குடும்பத்தினர் அவமானமாக கருதி அவர்களை மறைத்துவைக்கிறார்கள். மனநோய் சிகிச்சையில் முக்கியமான விஷயம், சில மாதங்கள் கழித்தே பலனை அறிய முடியும் என்பதால், மனநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து தொடர்ந்து வெகுநாட்களுக்கு, நாள் தவறாமல் உட்கொள்ள கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மிக வேகமாக பலனை எதிர்பார்க்கும் பலர், பாதியிலேயே சிகிச்சையை கைவிடுகின்றனர். குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
அதற்கு மாறாக, பிரபலமான பள்ளி ஒன்றில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டு அது நடக்காமல் போகும்போது அங்கே எதிர்பார்ப்பிற்கும்- யதார்த்தத்திற்கும் இடைவெளி தோன்றி, அது அந்த பெற்றோருக்கு மனஅழுத்தத்தை கொடுக்கும். ஆக நமக்கு மனஅழுத்தம் உருவாக யாரோ, எதுவோ காரணமில்லை. நாம்தான் காரணம். நாம் யதார்த்தத்திற்கு தக்கபடியான எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொண்டால், மனஅழுத்தமின்றி நிம்மதியாக வாழலாம்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இரண்டு விதமான மனிதர்களை சந்தித்திருப்பீர்கள். ஒரே மாதிரியான சோகம், வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும் இரண்டு மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஒருவர் அதை தாங்கிக்கொள்ளும் சக்தியை பெற்றிருப்பார். இன்னொருவர் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் நிலைகுலைந்துபோய் கடும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பார்.
ஒரே மாதிரியான சம்பவம்தானே! ஏன் ஒரு மனிதரால் அதை தாங்கிக்கொள்ள முடிகிறது? இன்னொரு மனிதரால் அதை ஏன் தாங்கிக்கொள்ள முடியவில்லை? இது பற்றி சர்வதேச அளவில் ஆய்வு ஒன்று நடந்தது. அதில், ‘ஒரு மனிதரின் மனோபலத்தை அவரது பாரம்பரியம் 50 சதவீதம் அளவுக்கு தீர்மானிக்கிறது. வளரும் சூழல், சமூகம், கலாசாரம், நண்பர்கள், வளர்ப்புமுறை, கல்வி போன்றவை இன்னொரு 50 சதவீதத்தை தீர்மானிக்கிறது’ என்று கண்டறிந்தார்கள். இதை வைத்து பார்க்கும்போது பாரம்பரியத்தில் இருந்து என்ன கிடைத்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் வளர்ப்பு முறை, வளரும் சூழல், நண்பர்கள், கலாசாரம், கல்வி போன்றவைகளால் பெறும் மனோபல அளவை நம்மால் அதிகரித்துக்கொள்ள முடியும். அதன் மூலம் மனஅழுத்தமின்றி வாழவும் முடியும்.
காலையில் நீங்கள் விழிக்கிறீர்கள். படுக்கையில் இருந்து நீங்கள் கண்களை திறக்கும்போதே மிக உஷாராக இருக்கவேண்டும். நான்கு முனை தாக்குதல் போன்று, நாலாபுறமும் இருந்தும் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் உங்களை நோக்கி ஏவப்பட்டுக்கொண்டிருக்கும். வீட்டில் இருந்தும், பக்கத்து வீட்டில் இருந்தும், டெலிவிஷன் வழியாகவும், செல்போன் வழியாகவும் நீங்கள் பார்ப்பதும்- கேட்பதும் உங்களை விடாமல் துரத்தி மனஅழுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கும். நீங்கள் இரண்டு காதுகள் இருக்கிறதே என்று எல்லாவற்றையும் கேட்க முன்வந்தால், இரண்டு கண்கள் இருக்கிறதே என்று எல்லாவற்றையும் பார்க்க முன்வந்தால், உங்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டு மன அழுத்தம் உருவாகிவிடும். இதில் இருந்து தப்பிக்க எதை பார்ப்பது, எதை கேட்பது, எதை பேசுவது என்று சிந்தித்து முடிவெடுத்து உங்களுக்கு நீங்களே கடிவாளம் போட்டுக்கொள்ள வேண்டும்.
சோஷியல் மீடியாக்கள் இப்போது தனி மனிதர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கின்றன. சைபர் கிரைம்களும், நிச்சயமற்ற அரசியல் சூழல்களும், இயற்கை இடர்பாடுகளும்கூட மனஅழுத்தத்தை உருவாக்குவதில் பங்கு வகிக்கிறது.
ஒருவருக்கு மன அழுத்தம் ஏற் படும்போது அவரது முடிவெடுக்கும்திறன் குறையும். அவர் மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தடுமாறுவார். அவரது செயல்பாட்டுத்திறன் குறையும். நினைவாற்றல், தூக்கம், நிம்மதி, வேலை ஈடுபாடு போன்றவை குறைந்துபோகும். அதோடு மனஅழுத்தத்தால் பல்வேறு நோய்களும் தோன்றும். குறிப்பாக ஜீரணமண்டல நோய்கள் தாக்கும். வயிற்று தொந்தரவுகள், அசிடிட்டி பிரச்சினை, ஜீரண கோளாறு, நரம்பு மண்டல பாதிப்பு போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை.
அளவுக்கு மீறி வியர்த்தல், பதற்றம் உருவாகுதல், இதய துடிப்பு அதிகரித்தல், உயர்ரத்த அழுத்தம் தோன்றுதல் போன்றவைகளும் உருவாகும். ‘செர்விகல் ஸ்பான்டிலோசிஸ்’ எனப்படும் கழுத்து தொடர்புடைய பாதிப்புக்கு நிறைய பேர் கழுத்தில் ‘செர்விகல் காளர்’ பொருத்தியிருக்கிறார்கள். இந்த பாதிப்பிற்கு மனஅழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. மனஅழுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து மீண்டால்தான், இந்த நோய்க்கு தரப்படும் மருந்தும், பயிற்சிகளும் முழுமையாக பலன்தரும்.
மனஅழுத்தத்திற்கு சரியான முறையில், சரியான நேரத்தில் தீர்வுகண்டு அதை கட்டுப்படுத்தாவிட்டால் அது தற்கொலை சிந்தனையை உருவாக்கிவிடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதில் 8 முதல் 10 ஆயிரம் பேர் வரை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவும், தமிழ்நாடும் இதில் முன்னிலை வகிக்கிறது. தற்கொலை செய்துகொள்கிறவர்களில் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். வேலையின்மை, உறவுச்சிக்கல், தொடர் தோல்விகள், மனம்விட்டுப் பேச நண்பர்கள் இல்லாமை, குடும்பத்தினரின் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய முடியாமை போன்ற பல காரணங்கள் ஆண்களின் தற்கொலைலை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.






