என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "focus"

    • அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும்
    • இயற்கை சூழல் மன அமைதியை அளிக்கிறது.

    கிராமத்தில் இருப்பவர்களோடு ஒப்பிட்டால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு மன அழுத்தம், கவலை அதிகமாக இருக்குமாம். காரணம் நாம் வாழும் சூழல். நாம் நகர்ப்புற சூழல்களிலோ அல்லது அலுவலகத்திலோ நாள் முழுவதும் இருக்கும்போது, ஏதோ ஒன்றை தாங்கிக்கொண்டு இருப்பதுபோலவே ஒரு மன ஓட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். இதன் விளைவாக எப்போதும் ஒரு மனசோர்வு இருக்கும். ஒருநிலையில் மிகவும் அழுத்தமாக இருக்கிறது வெளியே போகலாம் எனக்கூறி, பூங்கா அல்லது ஷாப்பிங் மால்களுக்கு செல்வோம். அல்லது வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வோம். ஏன் பூங்காவிற்கு செல்கிறோம்? சுற்றுலாவிற்கு செல்கிறோம்? கொஞ்சம் நன்றாக உணர்வோம் என்பதற்காக. இதன்மூலம் நமது மனமும், உடலும் இயற்கையான சூழலில் இளைப்பாறுகின்றன என்பதை உணரலாம். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இயற்கையோடு ஒன்றிருப்பது என்னென்ன நன்மைகளை மனதிற்கும், உடலுக்கும் வழங்கும் என்பதை பார்க்கலாம்.  

    மனத்திறன்களை மேம்படுத்தும்

    இயற்கை சூழலில் இருப்பது நம் கவலைகள் அனைத்தையும் மறக்கச்செய்து, ஒருவித அமைதியை கொடுக்கும். எந்த சிந்தனையும் ஓடாது. மனம் தெளிவாக இருக்கும். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இது உங்கள் படைப்பாற்றல் மற்றும் பிரச்சினைகளை கையாள கற்றுக்கொள்ளும் திறனையும் அதிகரிக்கும். இயற்கை சூழல் மகிழ்ச்சியான உணர்வுகளை அதிகரிக்கிறது. மேலும் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்த உதவுகிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஏதேனும் மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும். 


    மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள்

    மனஆரோக்கியம் மேம்படும்

    அடிக்கடி வெளியே செல்வது இதய நோய்களை குறைக்க வழிவகுக்கும். அடிக்கடி வெளியே சென்றால் உங்கள் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து பெறலாம். பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, கவனச்சிதறலை தடுக்க உதவும். நாம் வெளியே இருக்கும்போது நன்றாக தூக்கம் வருவதை கவனிக்கலாம். இயற்கை ஒளியில் தினமும் வெளிப்படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. டென்மார்க்கில் 1985 மற்றும் 2003 க்கு இடையில் பிறந்த 900,000 குழந்தைகளை ஆய்வு செய்ததில், அதிக பசுமையான இடங்களைக் கொண்ட சுற்றுப்புறங்களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மனநல கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

    என்ன செய்யவேண்டும்? 

    ஒரு நாளைக்கு ஒரு 5 நிமிடமாவது உங்கள் முகத்தில் சூரிய ஒளி படும்படி வெளியே நில்லுங்கள். இயற்கையை உணர காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு புல்லில் நடங்கள். வானிலை நன்றாக இல்லாவிட்டால், வீட்டில் ஜன்னலை திறந்துவைத்து இயற்கையை ரசியுங்கள். காற்றோட்டமாக வெளியில் நடந்து செல்லுங்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு சுற்றுலாவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். உங்கள் நாயை அருகிலுள்ள பூங்காவிற்கு ஒரு நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் விரும்புவதைப் போலவே அவைகளும் இயற்கையை ரசிக்கும். ஒரு புத்தகத்தை எடுத்துட்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில உட்காருங்க. வீட்டின் முற்றத்தில் ஒரு படரும் கொடியோ அல்லது ஏதேனும் ஒரு செடியை வளருங்கள். அடிக்கடி பூங்காக்களுக்கு செல்லுங்கள். இயற்கையோடு இணைந்து வாழுங்கள்.

    • சாய்ந்துள்ள மின்கம்பம் வரை மின்சார கம்பிகள் சாலை ஓரத்தில் தரையோடு தரையாக கிடக்கின்றன.
    • மின்சார கம்பிகளை பாதுகாப்பாக எடுத்து மேலே கட்டாமல், வயல்வெளியில் விடப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் திருச்செனம்பூண்டி கிராமத்தில் பிரதான சாலையில் குறுக்கே சென்ற மின்சாரக் கம்பியை அவ்வழியாக சென்ற வைக்கோல் ஏற்றி சென்ற லாரி இடித்ததில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் இருந்த இரும்பு மின்சார கம்பம் வளைந்து கீழே சாய்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக லாரிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அறுந்து தொங்கிய மின்சார கம்பிகள் அப்படியே விடப்பட்டுள்ளனமின்சாரம் மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அருகில் டிரான்ஸ்பாரம் கம்பம் உள்ளது.

    இதிலிருந்து சாய்ந்துள்ள மின்கம்பம் வரை மின்சார கம்பிகள் சாலை ஓரத்தில் தரையோடு தரையாக கிடக்கின்றன.

    இந்த வழித்தடத்தில் மணல் குவாரி இருப்பதால் மணல் லாரிகள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வந்து கொண்டிருக்கின்றன.

    இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் சாலை ஓரத்தில் செல்லும்போது அறிந்து கிடக்கும் மின் கம்பியை பார்த்து அதிர்ச்சி அடைந்து தடுமாற்றம் ஏற்படுகிறது.

    மின்சாரம் துண்டிக்க ப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும் அது குறித்து எந்தவித அறிவிப்பும் அந்த இடத்தில் செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

    மின்சார கம்பிகளை பாதுகாப்பாக எடுத்து மேலே கட்டாமல், வயல்வெளியில் விடப்பட்டுள்ளதும் பாதுகாப்பாற்ற தன்மையாக சொல்லப்படுகிறது.உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட்டு கீழே கிடக்கும் மின் கம்பியை அகற்றவும், விழுந்து கிடக்கும் மின் கம்பத்தை அகற்றி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்பு ஆலோசனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி விவேகா னந்தா மெட்ரிக்மேல்நி லைப்பள்ளியில் மயிலாடு துறை மாவட்ட காவல்துறை, சீர்காழி உட்கோட்ட காவல் நிலையத்துடன் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்புஆலோ சனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சீர்காழி டி.எஸ்.பி. லாமேக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார், மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் உளவியல் மற்றும் பாலியல் தொட ர்பான மனநல ஆலோசகர் டாக்டர் அசோக் பங்கேற்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி பேசுகையில், பருவவயதில் எதி ர்பால் ஈர்ப்பு என்பது இயல்பானது.அதற்காக அதில் மூழ்கிவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வய தில் தான் மாணவ-மாணவிகள், பள்ளி மற்றும் பொதுவெளியில் தங்களுக்கோ, தங்களை சார்ந்தவர்களுக்கோ நடந்த, பார்த்த எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் எவ்வித தயக்கமுமின்றி அன்றாடம் தங்களது பெற்றோர்களுடன் மனதை திறந்து கலந்துரையாடவேண்டும். தற்காலிக பிரச்சனைக்கு மனதை குழப்பிக்கொண்டு தற்கொலை என்னத்தை எட்டும் நிலைக்குவரக்கூ டாது. எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும் என்று பேசினார். நிறைவில் தலைமை காவலர் கவிதா நன்றி கூறினார்.

    ×