search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "focus"

    • சாய்ந்துள்ள மின்கம்பம் வரை மின்சார கம்பிகள் சாலை ஓரத்தில் தரையோடு தரையாக கிடக்கின்றன.
    • மின்சார கம்பிகளை பாதுகாப்பாக எடுத்து மேலே கட்டாமல், வயல்வெளியில் விடப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் திருச்செனம்பூண்டி கிராமத்தில் பிரதான சாலையில் குறுக்கே சென்ற மின்சாரக் கம்பியை அவ்வழியாக சென்ற வைக்கோல் ஏற்றி சென்ற லாரி இடித்ததில் மின்சார கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் இருந்த இரும்பு மின்சார கம்பம் வளைந்து கீழே சாய்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக லாரிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அறுந்து தொங்கிய மின்சார கம்பிகள் அப்படியே விடப்பட்டுள்ளனமின்சாரம் மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    அருகில் டிரான்ஸ்பாரம் கம்பம் உள்ளது.

    இதிலிருந்து சாய்ந்துள்ள மின்கம்பம் வரை மின்சார கம்பிகள் சாலை ஓரத்தில் தரையோடு தரையாக கிடக்கின்றன.

    இந்த வழித்தடத்தில் மணல் குவாரி இருப்பதால் மணல் லாரிகள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வந்து கொண்டிருக்கின்றன.

    இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் சாலை ஓரத்தில் செல்லும்போது அறிந்து கிடக்கும் மின் கம்பியை பார்த்து அதிர்ச்சி அடைந்து தடுமாற்றம் ஏற்படுகிறது.

    மின்சாரம் துண்டிக்க ப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும் அது குறித்து எந்தவித அறிவிப்பும் அந்த இடத்தில் செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

    மின்சார கம்பிகளை பாதுகாப்பாக எடுத்து மேலே கட்டாமல், வயல்வெளியில் விடப்பட்டுள்ளதும் பாதுகாப்பாற்ற தன்மையாக சொல்லப்படுகிறது.உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட்டு கீழே கிடக்கும் மின் கம்பியை அகற்றவும், விழுந்து கிடக்கும் மின் கம்பத்தை அகற்றி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்பு ஆலோசனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி விவேகா னந்தா மெட்ரிக்மேல்நி லைப்பள்ளியில் மயிலாடு துறை மாவட்ட காவல்துறை, சீர்காழி உட்கோட்ட காவல் நிலையத்துடன் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்புஆலோ சனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சீர்காழி டி.எஸ்.பி. லாமேக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார், மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் உளவியல் மற்றும் பாலியல் தொட ர்பான மனநல ஆலோசகர் டாக்டர் அசோக் பங்கேற்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி பேசுகையில், பருவவயதில் எதி ர்பால் ஈர்ப்பு என்பது இயல்பானது.அதற்காக அதில் மூழ்கிவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வய தில் தான் மாணவ-மாணவிகள், பள்ளி மற்றும் பொதுவெளியில் தங்களுக்கோ, தங்களை சார்ந்தவர்களுக்கோ நடந்த, பார்த்த எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் எவ்வித தயக்கமுமின்றி அன்றாடம் தங்களது பெற்றோர்களுடன் மனதை திறந்து கலந்துரையாடவேண்டும். தற்காலிக பிரச்சனைக்கு மனதை குழப்பிக்கொண்டு தற்கொலை என்னத்தை எட்டும் நிலைக்குவரக்கூ டாது. எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும் என்று பேசினார். நிறைவில் தலைமை காவலர் கவிதா நன்றி கூறினார்.

    ×