search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் உளவியல் ரீதியிலான கருத்தரங்கு
    X

    உளவியல் ரீதியிலான கருத்தரங்கு நடைபெற்றது.

    பள்ளியில் உளவியல் ரீதியிலான கருத்தரங்கு

    • பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்பு ஆலோசனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி விவேகா னந்தா மெட்ரிக்மேல்நி லைப்பள்ளியில் மயிலாடு துறை மாவட்ட காவல்துறை, சீர்காழி உட்கோட்ட காவல் நிலையத்துடன் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்புஆலோ சனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சீர்காழி டி.எஸ்.பி. லாமேக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார், மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் உளவியல் மற்றும் பாலியல் தொட ர்பான மனநல ஆலோசகர் டாக்டர் அசோக் பங்கேற்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி பேசுகையில், பருவவயதில் எதி ர்பால் ஈர்ப்பு என்பது இயல்பானது.அதற்காக அதில் மூழ்கிவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வய தில் தான் மாணவ-மாணவிகள், பள்ளி மற்றும் பொதுவெளியில் தங்களுக்கோ, தங்களை சார்ந்தவர்களுக்கோ நடந்த, பார்த்த எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் எவ்வித தயக்கமுமின்றி அன்றாடம் தங்களது பெற்றோர்களுடன் மனதை திறந்து கலந்துரையாடவேண்டும். தற்காலிக பிரச்சனைக்கு மனதை குழப்பிக்கொண்டு தற்கொலை என்னத்தை எட்டும் நிலைக்குவரக்கூ டாது. எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும் என்று பேசினார். நிறைவில் தலைமை காவலர் கவிதா நன்றி கூறினார்.

    Next Story
    ×