search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    • 2 நாட்களாக சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நவல்பூர் கிரேட் நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 23). ராஜஸ்ரீ பி.காம் படித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்.

    கடந்த 2 நாட்களாக ராஜஸ்ரீ சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் அமுதா காய்கறி வாங்க சந்தைக்கு சென்றுள்ளார்.

    பின்னர் அமுதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜஸ்ரீ வீட்டின் பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×