search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் கட்டிட பணிக்காக அகற்றப்பட்ட மரங்கள் மறுநடவு
    X

    தென்காசியில் கட்டிட பணிக்காக அகற்றப்பட்ட மரங்கள் மறுநடவு

    • காலிமனையில் மரங்கள் இருந்ததால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டது.
    • ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியின் மரத்தை மறு நடவு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சக்திநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் தங்கள் காலிமனையில் வீடு கட்டும் பணி தொடங்க இருந்தனர். அந்த காலி மனையில் மரங்கள் இருந்ததால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டது. மரங்களை விறகிற்காக வெட்டுவதற்கு மனமின்றி அதனை வேருடன் அகற்றி மறு நடவு செய்வதற்கு முடிவு செய்தனர்.

    இதற்காக ஆலங்குளத்தில் உள்ள பசுமை இயக்கம் தன்னார்வலர்களை தொடர்பு கொண்டனர். இதனையடுத்து தென்காசி சென்ற தன்னார்வலர்கள் அங்கிருந்த வேம்பு, புங்கை என காலிமனையில் இருந்த 3 மரத்தை வேருடன் எடுத்து ஆலங்குளம் கொண்டு வந்தனர். ஆலங்குளம் தீயணைப்பு நிலையம் முன்பு ஆலங்குளம் மருத்துவர் புஷ்பலதா ஜான் ஏற்பாட்டில் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியின் மரத்தை மறு நடவு செய்தனர். மரம் நடும் நிகழ்வில் பசுமை இயக்கம் தன்னார்வலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×