search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருவிளக்குகள்"

    • விவசாயிகள், மாணவ- மாணவிகள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
    • தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுக்கா விற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும். ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் பாம்பு மற்றும் தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலத்தூர் குளத்து கரையை ஒட்டிய சாலையை விரிவுபடுத்தி தார்ச்சாலை அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது அந்த சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் காணப்படுகிறது. மேலும் ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளது. சாலைகள் சேதம் மற்றும் தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலத்தூர் கரையிலிருந்து அச்சன்புதூர் வரையிலான சாலையில் மின் விளக்கு அமைப்பதுடன், சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமங்கலத்தில் தெருவிளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும்.
    • நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆதவன் அதியமான், ஆணையாளர் டெரன்ஸ் லியோன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் முத்து வரவேற்றார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை தெரிவித்தனர். தலைவர் ரம்யா முத்துக் குமார் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தின்படி திருமங்கலம் நகரில் 1,952 தெருவிளக்குகளை பொது மக்களின் நலன்கருதியும், நகராட்சி நிதி நிர்வாகத்தை கருதியும் எல்.இ.டி. தெரு விளக்குகளாக மாற்ற வேண்டும் என்றார்.

    இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். திருமங்கலம் நகரில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் விரைவில் எல்.இ.டி.தெரு விளக்குகளாக மாற்றுவது எனவும், இதற்கு ரூ.2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்வதும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதேபோல் நகரின் விரிவாக்கப்பகுதிகளில் 534 எல்.இ.டி. தெரு விளக்குகள் புதிதாக அமைக்க ரூ.1 கோடியே 7லட்சத்து 70 ஆயிரம் மாநில நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் அமைப்பதும் என்றும் முடிவு செய்யப் பட்டது.

    இந்த திட்டத்தின் நிதியை நகராட்சிக்கு கடனாக வழங்குவதுடன், இந்த கடனை 6 ஆண்டுகளுக்குள் 5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சுகாதாரத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ரூ.64.60 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் அகற்றுதல் உறிஞ்சு வாகனம் வாங்குவது, 15-வது நிதிக்குழு மானியத்தில் 2022-23-ல் ரூ.10.60 லட்சம் மற்றும் ரூ.13.40 லட்சம் மதிப்பீட்டில் முறையே பேவர் பிளாக்சாலை மற்றும் தார்சாலை பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக திருமங்கலம் ெரயில்வே பீடர் ரோட்டில் யூனியன் அலுவலகம் முதல் ெரயில்வேகேட் வரையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மாலை நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று அங்கு நேரத்தை கழிக்க கூடிய அளவில் அழகு படுத்தப்பட்டுள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவையில் உள்ள அனைத்து குளங்களும் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவு பெற்று வருகிறது.

    மாலை நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று அங்கு நேரத்தை கழிக்க கூடிய அளவில் அழகு படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளக்கரையில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து வருவதையும் காணமுடிகிறது.

    இந்நிலையில் குறிச்சி குளக்கரையில் அமைந்துள்ள தெருவிளக்குகள் ஏதும் எரியாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    குறிப்பாக குறிச்சி பிரிவிலிருந்து குனியமுத்தூர் செல்வதற்கு பெரும்பாலும் குறிச்சி குளக்கரையை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

    ஏனெனில் குறிச்சி பிரிவிலிருந்து குனியமுத்தூர் செல்வதற்கு ஆத்துப்பாலம் வழியாக சென்றால் தூரம் அதிகமாக உள்ளது. ஆனால் இத்தகைய குளக்கரையை உபயோகப்படுத்தினால் மிகவும் குறைவான தூரமே ஆகும். இந்நிலையில் குறிச்சி குளக்கரையில் தெரு விளக்குகள் எரியாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    விளக்கு எரியாத பட்சத்தில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விளிம்பிற்கு சென்று குளத்திற்குள் விழும் அபாய நிலை உள்ளது. இருட்டு காரணமாக ஒரு சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் குளத்திற்குள் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் அரங்கேறி உள்ளது. மேலும் வழிப்பறி சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.

    இந்த சம்பவங்கள் காரணமாக அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனே குறிச்சி குளக்கரையில் உள்ள விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எடுத்து வருகின்றனர். 

    ×