search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளம்"

    • சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
    • 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும்.

    இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.

    இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.

    இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரை யில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

     

    பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார்.அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும் அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் நம்பப்படுகிறது. இந்த சங்கை சுவாமியே வழி பாட்டுக்கு வழங்கி யதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்று உள்ளது. மேலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.
    • வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தத நிலையில் நெல்லையை அடுத்துள்ள மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள குளம் நிறைந்து கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதையடுத்து வீடுகளில் உள்ள பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.

    தொடர்ந்து அங்குள்ள பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில் மணல் மூடைகள் வைத்து அடைக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்பகுதியில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.

    மழையால் சங்கரன்கோவில் டவுன் பகுதியில் ஒரு வீடும், தாலுகா பகுதியில் 2 வீடுகள் என மொத்தம் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. ஓட்டு வீடுகள் என்பதால் தொடர்ந்து பெய்த மழையால் சுவர் நனைந்து இடிந்துள்ளது. ஏற்கனவே வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    அதேபோல் அங்குள்ள அய்யாபுரம் சாய மலை வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா பகுதிகளில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.

    தற்போது பெய்து வரும் மழையால் அங்கு விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
    • 20 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயருமென எதிர்பார்ப்பு

    சரவணம்பட்டி,

    கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரகார சாமகுளம் மற்றும் கொண்டயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலிங்கராயன் குளம் என இரு குளங்கள் உள்ளன.

    இந்த குளத்திற்கு அக்ரகார சாமக்குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 2-3 வருடங்களாக மேலாக ஞாயிற்றுக்கிழமை தோறும் குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

    நீண்ட காலமாக தண்ணீர் இல்லாமல் குளம் வறண்டு கிடந்தது. தன்னால்வர்கள் அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளை எந்திரங்கள் மூலம் தூர்வாரி குளத்தின் கரைகளை பலப்படுத்தி குளத்தில் மண்மேடுகள் அமைத்து குப்பை புதர்களை அகற்றி குலத்திற்கு தண்ணீர் நிரப்பும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

    இந்தக் குளம் நீர்வள ஆதாரதுறை கட்டு ப்பாட்டில் உள்ளதால் அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் கீழ் இரு குளங்களும் இணைக்கப்பட்டு தண்ணீர் வருவதற்காக நீரூற்று நிலையங்கள் அமைத்து காத்திருக்கிறது.

    இந்த நிலையில் கோவையில் கடந்த சில தினங்களுக்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    தற்போது 2 குளங்களும் தங்களது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரு குளங்களும் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு, அக்ரஹார சாமகுளம் பாதுகாப்பு அமைப்பினர் கூறும்போது, கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரு குளங்களிலும் நீர் நிரம்பியுள்ளது என்றும் இது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதன் மூலம் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் சர்க்கார் சாம குளம் பேரூராட்சி மற்றும் கொண்டையம்பாளையம் ஊராட்சிகளுக்கான நீர் தேவையும் பூர்த்தியாகும். இதுதவிர காலிங்கராயன் குளத்தை சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உயருவதோடு, குளத்திற்கு பறவைகள் வருகையும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.

    • பனை விதைகள் விதைப்பு பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராட்சியில் அனந்தபத்மநாயக்கன் குளக்கரையில், தளிர் திப்பணம்பட்டி கிராமம் அமைப்பு சார்பில் 1,500 பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் தமிழ்ச் செல்வி, ஊராட்சி செயலர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நிலக்கிழார் ரவிசுப்பிரமணியன், முத்துராமன், வெங்கடாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடு களை தளிர் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் சதீஷ்குமார், அனீத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • விவசாயிகள், மாணவ- மாணவிகள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
    • தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுக்கா விற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும். ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் பாம்பு மற்றும் தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலத்தூர் குளத்து கரையை ஒட்டிய சாலையை விரிவுபடுத்தி தார்ச்சாலை அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது அந்த சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் காணப்படுகிறது. மேலும் ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளது. சாலைகள் சேதம் மற்றும் தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலத்தூர் கரையிலிருந்து அச்சன்புதூர் வரையிலான சாலையில் மின் விளக்கு அமைப்பதுடன், சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்

       மங்கலம்:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். பல்லடம், மங்கலம், திருப்பூர், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சாமளாபுரம் குளத்தில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.

    • 4 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக குளத்தின் மீது மண்ணை கொட்டி சாலை போடுகின்றனர்.
    • குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தில் நீரின் கொள்ளவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் கிராமத்தை சேர்ந்தவரும், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு பா.ஜ.க. மாநில செயலாளருமான மருது பாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தென்காசி-நெல்லை 4 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நாகல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தின் மீது சாலையின் இடது பக்கம் சுமார் 25 அடிகளும், வலது பக்கம் சுமார் 50 அடிகளும் சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மண்ணை கொட்டி சாலை போடுகின்றனர்.

    இந்த குளத்தின் நீர்பாசனத்தை நம்பி ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், நீர் ஆதாரத்திற்காகவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் பாலம் அமைத்து சாலை அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் முடிவடையவில்லை.
    • குளத்தில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், மெலட்டூரில் பேரூராட்சி பகுதியில் உள்ள வடக்கு குளம் சுற்று சுவர் அமைத்து நான்கு கரைகளிலும் பூங்கா அமைக்கும் பணி ரூ. 117 லட்ச மதிப்பில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    வடக்கு குளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் குளத்தில் தண்ணீர் திறந்து விடுவது தாமதமாகி வருகிறது அதனால் குளத்தில் பல மாதங்களாக தண்ணீர் இல்லாததால் வறட்சியின் காரணமாக வடக்கு குளத்தை சுற்றியுள்ள குடிநீர் ஆதாரங்கள் செயல் இழக்கும் அபாயம் உள்ளதால் வடக்கு குளத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து குளத்தில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.
    • சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னர்கோவில் பகுதியை சுற்றி பல்வேறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குளங்கள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் வட்டம் திருநாரையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று குளத்தின் கரை ஓரத்தில் கிடந்தது. இதை அந்த வழியாக கிராமத்திற்குள் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தசெய்தி கிராமத்தில் காட்டுதீ போல பரவி உடனே பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு குளத்தின் அருகே வந்து குளத்தின் ஓரத்தில் கிடந்த முதலையை பார்த்தனர். அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த வனசரக அலுவலர் வசந்த், பாஸ்கரன் தலைமையிலான வன ஊழியர்கள் விரைந்தனர். பின்னர் குளத்தின் ஓரத்தில் இருந்த முதலையை லாவகமாக பிடித்து சிதம்பரம் அருகே வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளத்தில் முதலை புகுந்தது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. 

    • வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.
    • படித்துறை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.

    இக்குளத்தில் படித்துறை இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது.

    இந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை அமைத்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அரசு கோரிக்கையை ஏற்று பொது நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளது.
    • குளம், ஏரிகளின் பரப்பளவையோ குறைக்கும் செயலில் ஈடுபடுவது சட்டவிரோத குற்றமாகும்.

    தென்காசி:

    தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை விரி வாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நாகல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தின் மீது சாலையின் இடது பக்கம் சுமார் 25 அடியும், வலது பக்கம் சுமார் 50 அடியும் சாலை அமைப்பதற்காக பணிகள் நடை பெற்று வருகிறது. இதற்காக சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவு கையகப் படுத்த ப்பட்டு மண்ணைக் கொட்டி சாலை அமைக்கின்றனர்.

    இந்த குளத்தின் நீர் பாசனத்தை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும், நீர் ஆதாரத்திற்காக ஏராளமான பொதுமக்களும் இருந்து வரும் நிலையில் தற்போது குளத்தின் மீது சாலை அமைத்தால் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளது என அப்பகுதியினர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே குளத்தின் மேலே பாலம் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என்பது அவர் களின் கருத்தாக உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு ஆக்கிரமிப்பு களில் இருந்து நீர் நிலை களை பாதுகாக்க குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிர மிப்புகள் அகற்றும் சட்ட த்தை கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாடு ஏரி களை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றல் சட்டம் 2007 -ன் படி நீர்நிலைகள் அதாவது குளம் மற்றும் ஏரிகளின் பரப்பளவையோ அல்லது நீரின் கொள்ளளவையோ குறைக்கும் செயலில் ஈடுபடுவது சட்டவிரோத குற்றமாகும்.

    எனவே இந்த சட்டவிரோத செயலில் தலையிட்டு சாலை அமைக்கும் பணியை நிறுத்தி குளத்தின் நடுவே மேம்பாலம் அமைத்து நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும், பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளருமான மருது பாண்டியன், தமிழ்நாடு கோட்ட பொறியாளர் மற்றும் சாலை மேம்பாட்டு வாரிய அலுவலகங்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    • தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்
    • ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே தோட்டியோடு பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஆந்திர மாநிலம் ஜகதி பகுதியை சேர்ந்த கோதண்ட ராமர் (வயது 51) என்பவர் வேலை பார்த்து வந்தார். காலை அவர் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

    மாலை வரை கோதண்டராவ் திரும்பவில்லை. இதையடுத்து சக தொழிலாளர்கள் அவரை குளத்தில் சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் குளத்தில் தேடி பார்த்தபோது கோதண்டராவ் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கோதண்டராவ் குளிக்கும்போது குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக மீட்கப்பட்ட கோதண்டராவ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

    இதுகுறித்து தனியார் ஆஸ்பத்திரி மேற்பார்வையாளர் அனு ரூபன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×