search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    ஆக்கிரமிப்புகள் அகற்றம் பணி நடைபெற்றது.

    வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • நீர் பாசன வாய்க்காலை 80 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
    • சங்கினி குளத்தையும் விரைவில் மீட்க வேண்டும்.

    மதுக்கூர்:

    பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றியத்தில் புலவஞ்சி கிராமம்கிராமத்தில் கல்யாண ஓடை வாய்க்காலி யில் ஆக்கிரமிப்பு செய்யபட்டு உள்ளதாகவும், இதனால் நீர் செல்வதில் தடை ஏற்பட்டு ள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை, பொது ப்பணித்துறை செயல்பட்டாலும் மற்றும் வருவாய் துறையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் மற்றும் வருவாய் கோட்டா ட்சியர் சாந்தகுமார் மூலம் பொதுப்பணித்துறை இணைந்து பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றிய த்தில் புலவஞ்சி கிராமம் கிராமத்தில் கல்யாண ஓடை வாய்க்காலியின் விவசாயத்தை பயன்படுத்தும் கூடிய மதகு எண் 19 என்ற நீர் பாசன வாய்க்காலை 80 ஆண்டுகளுக்குப் பிறகு பொது பணியும் வருவாய்த்துறையும் இணைந்து வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வாய்காலை மீட்டெடுத்து கொடுத்ததற்கு காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சிபி போஸ் நன்றி தெரிவித்தனர்.

    இது குறித்து காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சிபி போஸ் கூறுகையில், இதுபோன்று சமூகத்திற்கு வேண்டிய செய்திகளை தொடர்ந்து மாலை மலர் செயது வருவதனால் மாலை மலர் உடைய வாசகர் என்ற முறையில் மாலை மலருக்கு நன்றி கடந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அதே போன்று மதுக்கூர் பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மதுக்கூர் காவல் நிலையம் அருகாமையில் உள்ள சங்கினி குளத்தையும் கூடிய விரைவில் மாவட்ட நிர்வாகமும் வருவாய் துறையும் மீட்டு தரும் என்று நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் என்றார்.

    Next Story
    ×