என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீரட்டேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் குறித்து எம்.எல்.ஏ. ஆய்வு
- பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.
- சிங்காரவேலவர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் விற்குடி வீரட்டேசுவர சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால், அங்குள்ள ஏற்பாடுகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அந்தக் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.
அப்போது தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து சிக்கல் சிங்காரவேலவவர் கோவிலுக்கு சென்று, கந்தசஷ்டி விழா ஏற்பாடு களை பார்வையிட்டார்.
மேலும், சிங்காரவேலவர் கோவில் குளத்தை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆனந்த், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்