search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாள் கோவில்கள்"

    • சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • விழாவையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று செங்கோட்டை அழகிய மனவாள பெருமாள் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலில்களில் கருட சேவை மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, மாலையில் கொட்டும் மழையிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதைமுன்னிட்டு கோவிலின் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை அலங்காரம், தீபாராதனை பிரார்த்தனை, பஜனை நடைபெற்றது. பிரானுர் பார்டர்ஆஞ்சநேயர், செங்கோட்டை சிவன் கோவில், இலத்தூர் சனிஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை–யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • விராலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா விராலூர் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

    இதில் விராலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருமயத்தில் பழமை வாய்ந்த குடவரை கோவிலான சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைெபற்றது. முன்னதாக சத்தியமூர்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    • புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • இந்த மாதத்தில் பஜனை செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது ஆகியவை வழக்கத்தில் உள்ளன.

    மதுரை

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் பஜனை செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது ஆகியவை வழக்கத்தில் உள்ளன.

    புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பெருமாளுக்கு உரிய பூஜைகளை செய்து வழிபடுவதோடு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கள்ளழகர் பெருமாள் கோவில், ஒத்தகடை யோக நரசிம்ம பெருமாள் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், திருகோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில், உள்ளிட்ட ஆலயங்களில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்று கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

    ×