search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே வாகனம் மோதி சலூன் தொழிலாளி பலி
    X

    விபத்தில் பலியான விஜயன்.

    செங்கோட்டை அருகே வாகனம் மோதி சலூன் தொழிலாளி பலி

    • விஜயன் கேரள மாநிலம் கொல்லத்தில் சலூன் கடை நடத்தி வந்தார்.
    • திருவிழாவில் பங்கேற்க விஜயன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசையை சேர்ந்தவர் விஜயன்(வயது 28). இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கணக்கப்பிள்ளை வலசையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக விஜயன் நேற்று மாலையில் கொல்லத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவர் தென்மலை அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று விஜயன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×