search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை"

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    முதுகலை ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்றிட வேண்டும். 2004- 2006 இடைப்பட்ட கல்வி ஆண்டுகளில் தொகுப்பூ தியத்தில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை கணக்கில் கொண்டு தேர்வு நிலை மற்றும் ஊதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஜோதி முத்து, சட்ட செயலாளர் பாலமுருகன், மகளிர் அணி செயலாளர் உஷா, கல்வி மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மணிவாசகன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் துணைத் தலைவர் ராமலிங்கம், துணைத்தலைவர் செல்வகணபதி, இணை செயலாளர் வேல்முருகன், விருத்தாசலம் கல்வி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் கழகம் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

    • அரியலூரில் திறப்பு விழா காணும் முன்பே மதுபான பாராக வாரசந்தை மாறிய அவலம்
    • சேறும், சகதியுமாக காணப்படும் வாரச்சந்தையை சீர்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சியில் ரூ.1.18 கோடியில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. திறப்பு விழா காண்பதற்கு முன்பே மதுபான பிரியர்களின் டாஸ்மாக் பாராக செயல்பட தொடங்கிவிட்டது. மாவட்ட, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • மின்கட்டண உயர்வு ரத்து செய்யும் கோரிக்கையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழியிடம் முறையிட்டனர்.
    • மத்திய அரசிடம் இருந்தும் தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களை நேரில் சந்தித்து முறையிட்டனர். அதன் தொடர்ச்சியாக, மின்கட்டண உயர்வு ரத்து செய்யும் கோரிக்கையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழியிடம் முறையிட்டனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தொழில் பாதிப்புகள் குறித்து அமைச்சர்களிடம் விளக்கி, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற்று, சிறு, குறு பனியன் தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தொழில்துறையினரின் பாதிப்பு குறித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் மத்திய அரசிடம் இருந்தும் தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    • அரியலூரில்பாதுகாப்பான நடை பயிற்சி சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது
    • ஏற்கனவே திட்டமிட்டுள்ள சாலை பாதுகாப்பற்றது என்று குற்றச்சாட்டு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் என்ற நடைபயிற்சி திட்டத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்எல்ஏக்கள் சின்னப்பா, கண்ணன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கல்லூரி சாலை, பள்ளேரி கரை, அரசு மருத்துவமனைசாலை, பென்னிகவுஸ் சாலை, முருகன் கோவில், சத்திரம், எம்ஜிஆர் சிலை, தேரடி, அண்ணாசிலை, செட்டிஏரிகரை, ஜெயங்கொண்டம் சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் சென்று – மீண்டும் வந்த வழியாக செல்லவேண்டும் என நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டது.

    இந்த பாதை கரடு முரடான பாதை, சாலை விபத்துகளை ஏற்படுத்தும் பாதை, இந்த வழித்தடத்தில் பேருந்து, லாரி, கனரக வாகனங்கள், வேன், ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலையாகும். இந்த பாதையில் நடைபயிற்சி மேற்கொள்வது ஆபத்தை உருவாக்கும். நடைபயிற்சி மேற்கொள்ள செட்டி ஏரிக்கரை, மாவட்ட விளையாட்டு அரங்கம், இருசுக்குட்டை, போன்ற இடங்களில் நான்கு பகுதி கரைகளையும் சீரமைத்து, மின்விளக்கு அமைத்து கொடுத்தால் ஆபத்து இல்லாமல் அமைதியாக பயமில்லாமல் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். எனவே மாவட்ட கலெக்டர் மறுபரிசிலனை செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அகலப்பாதையாக மாற்றிய பிறகு அனைத்து ரெயில்களும் பழைய நிலைக்கு திரும்பும் என்று உறுதியளிக்கப்பட்டது.
    • நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்ட ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    தென்காசி:

    தமிழக பா.ஜனதாவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலா ளராக இருந்து வரும் எம்.சி. மருதுபாண்டியன் மதுரை கோட்டை ரெயில்வே மேலாளரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வேயில் தண்ட வாளங்களை அகலப்படுத்து வதற்கு முன் மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய பழைய பாரம்பரிய ரெயில்களை மீட்டெடுக்கும் வண்ணம் பல்வேறு புதிய வசதிகளுடன் ரெயில்களை இயக்க வேண்டும்.

    5 ஜோடி பகல் ரெயில் களும், 2 ஜோடி இரவு ரெயில்களும் மீட்டர் கேஜ் பாதையில் கடந்த 2001-ம் ஆண்டு செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்க ப்பட்டன. ரெயில்வேயில் அகலப்பாதையாக மாற்றிய பிறகு அனைத்து ரெயில்களும் பழைய நிலைக்கு திரும்பும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2018-ல் அகலப்பாதை முடிந்த பிறகும் ஒரு பகல் ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதாவது மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

    செங்கோட்டை-கொ ல்லம் பகுதியின் வழக்க மான பயணிகளுக்கு வசதி யாக இப்போது முழு முன்பதிவு இல்லாத ரெயி ல்கள் இல்லை. நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு நேரடியாக இயக்கப்பட்ட ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள அனைத்து ரெயி ல்களையும் விரைவில் இயக்கு வதற்கான நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டும். செங்கோட்டை-கொல்லத்தின் பழமையான முதல் திருவாங்கூர் ரெயில் பாதை 1904-ல் திறக்கப்பட்ட பாரம்பரியத்தை பறைசாற்ற உதவும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சதீஷ்ஆசாத் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோலை மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.   

    • ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
    • ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுத்து தீர்மானம்

    பொன்னமராவதி, 

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மேலத்தானியம் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் கொன்னைப்பட்டி செல்வமணி , பொருளாளர் தேனூர் கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சேரனூர் காமராஜ், முள்ளிப்பட்டி குமார் ஆகியோர் ஊராட்சிகளின் செயல்பாடு, ஊராட்சி செயலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்ள்,தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்க்கு ஊதியம் வழங்க முடியாத நிலை மற்றும் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவை செலவினங்கள் மேற்கொள்ள புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள டி.என்.பாஸ் முறையினால் மேற்கொள்ள முடியாத நிலை மற்றும் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்து விளக்கிப்பேசினார்.

    இதனைத்தொடர்ந்து ஊராட்சிகளில் பணியாளர்கள் மற்றும் செலவினங்களுக்கு ஓ.டி.பி. முறை என்ற டி.என்.பாஸ் முறையினை ரத்து செய்து பழைய முறையினை கொண்டு வரவேண்டும். 3 மாதமாக வழங்கப்படாத மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும்.ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்களை ஊராட்சி தலைவர்களே நியமனம் செய்யவழிவகை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த கோரிக்கை அடங்கிய மனுவினை கிராம ஊராட்சி ஆணையர் கருணாகரனிடம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சித்தலைவர்கள் ராமையா, செல்வராஜ்,ராமன்,அர்ச்சுணன்,அழகுமுத்து, ராமசாமி,பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியல் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    சென்னையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் வக்பு வாரிய செயலாளர் ரபி புல்லாவை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராணம் முகைதீன் ஆண்டவர்பள்ளிவாசல் சுற்றுச்சுவரை சீரமைக்க வீராணம் ஒன்றிய கவுன்சிலர் சேக் முகமது கொடுத்த கோரிக்கையின் அடிப்படை யிலும், மத்தளம்பாறை முகைதீன் ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ ஆம்பூர் பாதுஷா பள்ளிவாசலுக்கும், பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கைகள் அடிப்படையிலும், முதலியார்பட்டி முகமது நைனார் ஜூம்மா பள்ளிவாசலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுன்சிலர் முகமது கனி கோரிக்கையின் அடிப்படையில் 11-வது வார்டு நைனா முகமது ஜூம்மா பள்ளிவாசலுக்கும், கடையநல்லூர் கிழக்கு பகுதி அல் மூப்பன் கீழத்தெரு நைனா முகம்மது ஜூம்மா பள்ளிவாசலுக்கு கவுன்சிலரும், முன்னாள் நகர செயலாளரும், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளருமான முகமது அலி கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சுவர் கட்டவும் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்று கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஏற்கனவே சிவபத்மநாபன் கொடுத்த மனுவின் அடிப்படையில் மனுவில் கூறப்பட்டுள்ள 6 பள்ளிவாசலுக்கும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான பட்டியலை சிவபத்மநாதனிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோரிக்கையினை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் மற்றும் வக்புவாரிய செயலாளருக்கு சிவபத்மநாதன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

    • விவசாயிகள், மாணவ- மாணவிகள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
    • தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுக்கா விற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும். ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் பாம்பு மற்றும் தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலத்தூர் குளத்து கரையை ஒட்டிய சாலையை விரிவுபடுத்தி தார்ச்சாலை அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது அந்த சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் காணப்படுகிறது. மேலும் ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளது. சாலைகள் சேதம் மற்றும் தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலத்தூர் கரையிலிருந்து அச்சன்புதூர் வரையிலான சாலையில் மின் விளக்கு அமைப்பதுடன், சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்தது.
    • சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.மேலும் தார் சாலையானது சற்று அகலப்படுத்தப்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே தற்பொழுது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்கம்பத்தை சாலையோரம் மறு நடவு செய்ய வேண்டும் எனவும், மின்கம்பங்களில் உரசும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது.
    • பணிகளை பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக புதிய பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

    ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை

    இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அந்த பணிகளை தாமதமாக செய்து வருவதால் தங்களுக்கு குடிநீர் முறையாக வர வில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்ததுடன் அதனை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நெடு ஞ்சாலைத்துறை அதிகாரி களை அழைத்து ஆலோ சனையில் ஈடுபட்டார்.

    ஆலோசனையின் போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து நகராட்சி அதிகாரிகள் மீதமுள்ள புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை இரண்டு துறைகளும் சேர்ந்து விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது. இதையும் நெடு ஞ்சா லைத்துறை அதிகாரி களும் கலந்து பேசி அவர்கள் வழி காட்டுத லின்படி உடனடி யாக சரி செய்ய வேண்டும்.

    இந்த பணிகளை போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது, பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்க ளுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆலோசனையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலக ம்மாள், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறி யாளர் கனகராஜ், உதவி நிர்வாக பொறியாளர் பிரிய தர்ஷினி, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபா நாயகம், நக ராட்சி மேற்பார் வையாளர் கோமதி நாயகம், நெடுஞ்சா லைத்துறை உதவி பொறி யாளர்கள் பல வேசம், முத்து மணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • தெருவிளக்கு, சாலை-கழிவுநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சாயல்குடி

    சாயல்குடி பேரூராட்சி யில் கவுன்சில் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலை வர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். பேரூராட்சி கூட்டத்தில் துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், மகளிர் உரிமைத் தொகை வழங்கிய முதல்- அமைச்ச ருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பேரூராட்சி தலைவர் மாரி யப்பன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சாயல்குடி பகுதியில் போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் கால்நடை களை பிடித்து உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பேரூராட்சி உறுப்பினர் காமராஜ், சாயல்குடி பேரூ ராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் புதிய மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரணி பகுதியில் நடைபாதை அமைக்க விரைந்து பணிகள் மேற்கொ ள்ள வேண்டும் என பேசினார்.

    துணைச் சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வி.வி. ஆர் .நகர் பேருந்து நிறுத்தத்தில் விபத்து ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் மாணிக்கவேல், சீனி ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்.

    பேரூராட்சி உறுப்பினர் அழகர் வேல் பாண்டியன், 8-வது வார்டில் 6-வது தெருவில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் இந்திராணி, 12-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் கோவிந்தன், சாயல்குடி பேரூராட்சி 5-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். இதேபோல் பேரூராட்சி உறுப்பினர்கள் மாணிக்க வள்ளி பால் பாண்டியன், ஆபிதா அனிபா அண்ணா, இந்திரா செல்லத்துரை , சண்முகத் தாய் சுப்பிரமணியன், அமுதா, குமரையா உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார்.

    • கலைஞர் உரிமைத்தொகை பலருக்கு கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • தொலைபேசி எண்கள் இல்லாமல் முதியவர்கள் பலருக்கும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தமிழ்நாடு அரசின் சார்பில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    ரூ. 1000 உரிமைத்தொகை

    இருப்பினும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பெண்கள் அந்நிறுவனங்களின் சார்பில் ஓய்வு தொகையைப் பெற்று வந்தாலும் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பலருக்கும் கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக எவ்வித ஓய்வூதிய மும் பெறாமல் இருந்து வரும் வயதான முதியவர்கள் பலருக்கும் தொலைபேசி எண்கள் எதுவும் இல்லாமல் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    மூதாட்டி கோரிக்கை

    அதன்படி நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மந்தியூர் ஊராட்சி பிள்ளை யார்குளம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள், முன்னர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டதன் காரணமாக அதற்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 700 பெற்று வருகிறோம்.

    ஆனால் தற்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பெறுவதற்கு பதிவு செய்தி ருந்தும் கிடைக்கவில்லை. எனவே பீடி தொழிலாளர்க ளாகிய வயதான எங்களுக்கு ஆயிரம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.

    ×