search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    • இளைஞர்களை ஏமாற்றி கையெழுத்து இயக்கம் நடத்துகிறது தி.மு.க. என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி உள்ளார்
    • ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற யாத்திரையின் போது பொதுமக்கள் மத்தியில் பேசினார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர், மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 104-வது பாத யாத்திரையை தொடங்கினார். புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை, நான்கு ரோடு சந்திப்பு வரை அவர் யாத்திரை மேற்கொண்டார்.

    அவர் சென்ற வழி அனைத்திலும் ஏராளமான பொதுமக்கள் குறை கேட்டு அவர்களுடைய மனுக்களை பெற்றுக்கொண்டார். யாத்திரையின் முடிவில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகு கொலை கொள்ளை அதிகரித்து உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்கள் பதவியேற்கும் போது தமிழ்நாடு எப்படி இருந்ததோ அதேபோல்தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு எந்த வகையிலும் முன்னேறவில்லை இளைஞர்களுக்கு சரியான முறையில் கல்வி இல்லை விவசாயிகளுக்கு. விவசாயத்தில் எந்த பயனும் இல்லை.

    மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், தனது மகன் குடும்பமும், மருமகன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளார்.

    நாம் எல்லா ஏழை குழந்தைகளுக்கும் டொனேஷன் இல்லாமல் பணத்தை கொடுக்காமல் நேரடியாக மருத்துவ கல்லூரிலே சேர வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, தி.மு.க .இளைஞர்களை ஏமாற்றும் விதமாக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வந்து கொண்டிருக்கிறது.

    இளைஞர்களை முன்வைத்து நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக எப்படிப்பட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் ஏராளமான கிராமங்களில் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. 23 வருடங்களாக ஏமாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டிலே தீபாவளி அன்று மட்டுமே சாராயம் டாஸ்மாக்-ல் விற்கப்பட்ட சாராய மூலமாக 11 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளனர்.

    மதுவிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்துதான் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? என்கின்ற கேள்வியை மக்கள் எல்லாரும் முன் வைக்கின்றனர். அதேபோல்இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், இது போன்ற ஊழல் அமைச்சர்களை பார்த்தது கிடையாது. தமிழ்நாட்டில் அவர்கள் வாக்குறுதியான 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்கள்.மேலும் இவர்கள் வாங்கிய கடனை ஏழை விவசாயிகள் நீங்கள் தான் கட்ட வேண்டும்.

    ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டம் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் எஸ்.கே.ஐயப்பன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் ராமர் உள்ளிட்ட மாநில, மாவட்ட மகளிர் அணி சார்ந்த நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்
    • கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கூட்டிக்கல் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரால் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

    அவர் பேசும்போது, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். கேரளாவில் செயல்படுத்தப்பட்டு வரும் லைப் மிஷன் வீட்டுத் திட்டத்தை, மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி சிலர் இழிவுபடுத்த முயல்கின்றனர். அவர்கள் லைப்மிஷன் திட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், திட்டத்தின் நம்பகத் தன்மையை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார். கேரளாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச பாரதிய ஜனதா தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

    • இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.
    • பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மணப்பாறை பகுதியில் யாத்திரை சென்றார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மணப்பாறை தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    இந்த கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் ஒரே வேலை பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான். இந்த கட்சியை மனிதநேய மற்ற கட்சி என்றுதான் அழைக்க வேண்டும்.

    மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் பணியின் போது கிடைக்கும் சரளை மண்ணுக்காக கல்லூரியை காலனி வாசல் பட்டிக்கு மாற்றிவிட்டார்கள். இது வரை கல்லூரி கட்டவில்லை. சொந்த கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூட கட்டிடத்தில் கல்லூரி செயல்படுகிறது. எய்ம்ஸ் பற்றி பேச தி.மு.க. வுக்கு என்ன தகுதி இருக்கிறது?

    புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும் என்று, டாஸ்மாக்கில் மது விற்பனை செய்பவர், அறிவுரை கூறுவார் என்றார் அமைச்சர் முத்துசாமி.

    மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். சென்ற ஆண்டு டாஸ்மாக்கில் சராசரியாக மது குடிப்போர் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது, தற்போது 90 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.

    தமிழ்நாட்டை முழுவதுமாக குடிகார மாநிலமாக மாற்றும் வரை அமைச்சர் முத்துசாமி ஓயமாட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில், இத்தகைய மக்கள் விரோத தி.மு.க. கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ள பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பட்டுள்ளார்.

    • கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.
    • பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார்

    கரூர்

    கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, தோகை மலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடைபெற்றது.

    முன்னதாக தோகைமலை மணப்பாறை மெயின் ரோட்டில் பாளையம் பிரிவு சாலையில் இருந்து தோகைமலை பஸ் நிலையம் வரை அண்ணாமலை பாதயாத்திரை வந்தார். அப்போது மேளதாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மகளிர் அணி சார்பாக மலர்கள் தூவப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் மத்தியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு கொட்டும் மழையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பு 513 வாக்குறுதிகளை அளித்து 20 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. கருணாநிதியின் முதல் தொகுதி குளித்தலை. அப்போது, தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து குடகனாறு மூலமாக தோகைமலை பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது வரை அதை செய்யவில்லை. அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதிகள் 20 சதவீதம் கூட செய்து முடிக்கவில்லை.

    ஏழை மக்களுக்கு எதிராக தி.மு.க. ஆட்சி நடத்தி வருகிறது. மக்கள் பணத்தை தி.மு.க. கொள்ளை அடித்து வருகிறது. இன்று அமைச்சர் எ.வ.வேலு கண்டக்டராக தொடங்கிய வாழ்க்கை தற்போது பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாக மருத்துவக் கல்லூரி முதற்கொண்டு அனைத்து கல்லூரிகள் நடத்தி வருகிறார். எங்கிருந்து சம்பாதித்தார். தற்போது உள்ள அமைச்சர்கள் அனைவரும் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள்.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை தொகுதியில் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் செந்தில்பாலாஜி அவரது சகோதரர் ஊழல்வாதிகள் என்று கூறி அவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று பேசினார்.தமிழகத்திலே 3-வது பெரிய ஏரி பஞ்சபட்டி ஏரி. சுமார் 1356 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், அந்த ஏரியின் மூலமாக 15,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயனடைவர்.

    காவிரியில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஏரியில் நிரப்பி விவசாயிகள் பயனடையும் வகையில் வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசு செய்யவில்லை. அதற்கு பதிலாக டாஸ்மாக்கில் தண்ணீராக ஓடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக ஆட்சியை நடத்தி வருகிறார்.பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உள்ள மக்களே குடும்பம் என அவர்களுக்காக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக தற்போது 26 கட்சிகள் இந்தியா கூட்டணி என அமைத்து குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் அனைத்து கட்சிகளும் அந்த மாலை யாருக்கு விழும் என நினைத்து இருக்கிறார்கள். அப்படி நினைத்தால் ஒவ்வொருத்தரும் பூவை பிச்சி எடுப்பது போல் இந்தியா நாடு ஆகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார், குளித்தலை நகரத்தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், சக்திவேல், மாநில விவசாய அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச்செயலாளர் செல்வம், தோகைமலை மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் ராஜ்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜா பிரதீப், தெற்கு மாநகர தலைவர் ரவி, கவுன்சிலர் சரண்யா, கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த வரவேற்பை திட்டமிட்டு மறைக்க முயன்றவர்களுக்கு தோல்வியடைந்து விட்டார்கள்.
    • ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

    மதுரை

    மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் கூறி யதாவது:-

    தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டி ருக்கிற தெய்வீக திரு மகனாரின் குரு பூஜையில், அ.தி.மு.க. பொதுசெயலா ளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற போது வரலாறு காணாத வரவேற்போடு, ஒட்டுமொத்த தேவர் தொண்டர்களும், குறிப்பாக தாய்மார்களும் அவரை வரவேற்ற காட்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஷமி கள் சிலர், தெய்வீக திருமக னார் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயற்சி செய்தனர்.

    அந்த சுயநலவாதி களிடம் இருந்து, அவர் ஒரு சுதந்திர போராட்டத் தலைவர், தேசிய தலைவர், சர்வ சமய, சர்வ ஜாதி என அனைத்து பிரிவிற்கும் சொந்தமானவர் என்பதை நிரூபித்துக் காட்டு கின்ற வகையில், அந்த புண்ணிய பூமியில் அஞ்சாத மன உறுதியோடு, உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என தேவருக்கு மரியாதை செலுத்தி னார். எடப்பாடி பழனிசாமி.

    மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு 80 கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்ற பாதையில் பொதுமக்கள் எல்லாம் அவரை வரவேற்றதை திட்டமிட்டு மறைத்து விட்டு, சில கயவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாங்கிய கூலிக்கு கூவியர்கள் இதில் தோல்வியடைந்து விட்டார்கள்.

    தேவர் சில பேருக்கு மட்டுமே சொந்தம் என்று குறுகிய வட்டத்தில், அவரது புகழை ஒரு கூண்டுக்குள்ளே அடக்க நினைக்கிறார்கள், அதையெல்லாம் தகர்த்து எறிந்து அவரின் புகழ், தியாக வரலாறு, சர்வ மதம் சர்வ ஜாதிகளுக்கும் பாடு பட்டவர் என்பதை இன்றைக்கு மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

    எல்லோரும் வரவேற்ற புண்ணிய பூமி இன்றைக்கு சமீபகாலமாக சில கயவர்கள், அரசியலில் முகவரி அற்றவர்கள், அரசியலில் காணாமல் போனவர்கள் தேவரின் கவசத்தை முக மூடியாக அணிந்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு தேடுவது குற்றமல்ல, ஆனால் பிறரை இழிவுபடுத்த வேண்டும், சிலரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.

    பசும்பொன் பூமிக்கு வருகை தந்து வெற்றி கொடி பறக்க விட்டு, தேவரின் புகழை எட்டுதிக்கும் எடுத்துச் சென்று இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள் ளார்.

    எடப்பாடி பழனிசாமி வருகை ஒரு வரலாற்று வருகையாக தென் மாவட்ட மக்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
    • மக்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நரிமேடு பகுதியில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை யில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற் றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். அப்போது வரை திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். நடித் தார். எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய பின்பு புது கட்சியை தொடங்கினார். அதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் சூட்டினார் இரட்டை இலையை சின்னமாக அறி வித்தார். தற்போது இறந்தும் இறைவனாக எம்.ஜி.ஆர். வாழ்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தில் உழ வர் மகனாக பிறந்தவர் அரசு பள்ளியில் படித்த வர். அ.தி.மு.க. ஆட்சியில் 100 நாட்கள் தாண்டாது என பேசினார். மு க ஸ்டாலின். அந்தப் பேச்சுக்களை தவிர்ப்படியாக்கிவிட்டு 4 1/2 வருஷம் சிறப்பாக ஆட்சி அமைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது இரண்டரை கோடி தொண் டர் களை அ.தி.மு.க.வில் வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

    மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்வேன், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என கூறினார்கள். அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் எனது தந்தை ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறி னார். ஆனால் எதையும் செய்யவில்லை.

    மாணவி அனிதா மரணத்தை வைத்து தி.மு.க. நாடகம் ஆடினார்கள்.

    தி.மு.க. இதுவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை, மக்கள் வரிப்பணத்தில் திமுக தலைவர் கலைஞர் இலவச டி.வி. கொடுத்தார். கேபிள் கனெக்சனை கொண்டு வந்து ஐந்து வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள்.

    மதுக்கடைகளில் குவாட் டருக்கு ரூ. 10 அதிகமாக கொடுத்தால் தான் கிடைக் கும். இந்த பத்து ரூபாய் கரூர் கம்பெனிக்கு போனது தற் போது முதல்வருக்கு அந்த பத்து ரூபாய் செல்கிறது.

    ஊழல் செய்வதில் சிறந்த கட்சி தி.மு.க., தற்போது விலைவாசியை கட்டுப் படுத்தவில்லை.விலைவாசி உயர்வு அதிகரித்து மக்கள் திண்டாட்டத்தில் இருக்கி றார்கள்.

    தற்போது எங்கு பார்த் தாலும் போதை கஞ்சா தலை விரித்து ஆடுகிறது. கஞ்சா கடத்தலை தடுக்கி றோம் என காவல்துறை சொல்கிறது ஆனால் தடுக்க முடியவில்லை. தி.மு.க. கட்சிக்காரர்களே கஞ்சா விற்கிறார்கள். மதுரைக்கு எந்த ஒரு நல்ல திட்டமும் தி.மு.க. செயல் படுத்த வில்லை.

    1,296 கோடி மதிப்பில் மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்கு சிறப்பு திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதை 2023 நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் பேசினேன். என்னை தெர்மாகோல் என நக்கல் செய்தார்கள். அமைச்சர் துரைமுருகன் என்னை கிண்டல் செய்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது.

    இந்தியாவிலேயே முதல்முறையாக மாணவர் களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் ஜெயலலிதா.பெண்களுக்கு மாணவி களுக்கு மாதவிடாய் காலங் களில் துணியை வைக்கிறார் கள் அதனால் இலவசமாக நாப்கின் வழங்கினார்.பெண் குழந்தைகள் 12-வது படிக்கும் போது இலவசமாக லேப்டாப் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. பெண் திருமணத்திற்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம் கொடுத்தார். பெண்கள் 10-ம் வகுப்பு படித்தால் 25 ஆயிரம் ரூபாய் பட்டப் படிப்பு படித்தால் 50 ஆயி ரம் ரூபாய் திருமண உதவித் தொகை கொடுத்தது ஜெயல லிதா. அதன் பின்பு பெண் களுக்கு சமுதாய வளை காப்பு நடத்தி சீர்வரிசை கொடுத்தவர் ஜெயலலிதா.

    அதனைத் தொடர்ந்து குழந்தை பிறக்கும்போது சத்தான புராத பவுடர்கள் கொடுத்து 18,000 பணம் கொடுத்தார்.குழந்தை பிறந்த பின்பு 16 வகையான பொருட்கள் அடங்கிய தாய் சேய் நல பெட்டியை கொடுத்தவர் ஜெயலலிதா.

    பெண்களுக்கு இலவச மாக மிக்ஸி கிரைண்டர் மின்விரிசி கொடுத்தவர் ஜெயலலிதா.

    வேலைக்கு பணி புரியும் பெண்களுக்கு இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் கொடுத்தார்.மகளிர் பிரச்சினையை தீர்ப் பதற்கு மகளிர் காவல் நிலை யங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.பெண்கள் கமெண்ட்டோ படை கொண்டு வந்தார்.உள் ளாட்சித் தேர்தலில் பெண் கள் 50 சதவீதம் போட்டியிட வேண்டும் என சட்டம் நிறைவேற்றியவர் ஜெயலலி தா.

    நாட்டில் பசி இருக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கும் விலை யில்லா அரிசி கொடுத்தார்.இது போன்ற ஏதாவது ஒரு திட்டத்தை திமுக கொண்டு வந்ததா?

    எனவே மீண்டும் எடப் பாடியார் தலைமையில் நல்லாட்சி விரைவில் அமை யும். அப்போது இந்த திட்டங் கள் எல்லாம் மக்களுக்கு மீண்டும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஷேர் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 8-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து கல்லூரி நேரத்தில் கூடுதலாக அரசு பஸ் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கூடுதல் பஸ் இயக்கப்படுமென உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து ஷேர் ஆட்டோக்களை தவிர்த்த மாணவர்கள், கடந்த சில தினங்களாக அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    இன்று காலை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்காக மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாக மாணவர்கள் காத்திருந்தும் அரசு பஸ் வரவில்லை. நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த பகுதி பரபரப்பானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ் வரவில்லை என மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்தது. அப்போது ஒரு மணி நேரம் தாமதமாக அரசு பஸ் வந்தது. அதில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். வருங்காலங்களில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்.
    • தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    கோவை,

    அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி சார்பில் செல்வபுரம் தெலுங்குபாளையம் முத்துமாரியம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு 76-வது வட்ட செயலாளர் கேபிள் கருப்புசாமி தலைமை தாங்கினார்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் டி.கருப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் டிபி.வேலுசாமி, ராஜா என்ற ராமமூர்த்தி, டி.சக்திவேல், பகுதி செயலாளர்கள் தி.மதனகோபால், வி.குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் கொள்கை பரப்பு துணை செயலாளரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ரவி மரியா, பழக்கடை மூர்த்தி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டி.லட்சுமி–காந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முன்னதாக விழாவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-

    எடப்பாடியார் பழனி சாமி முதல்-அமைச்சராக இருந்த போது கோவை மாவட்டத்திற்கு கேட்ட திட்டங்களை எல்லாம் தந்தார்.

    அ.தி.மு.க ஆட்சியில் கோவைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் 2½ ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களையும் கோவைக்கு கொண்டு வரவில்லை.

    தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர்.காவிரி பிரச்சினைக்காக திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராடாமல் உள்ளனர்.

    கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஏமாந்து வாக்களித்ததாக மக்கள் கூறுகிறார்கள். தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் வென்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் என்.கே.செல்வ துரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, ஜிகே.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் டி.சி.பிரதீப், பொதுக்குழு உறுப்பினர் சுசிலா மாணிக்கராஜ், பேரூராட்சி கழக செயலாளர்கள் ஜெகநாதன், கே.கிருஷ்ணராஜ், ஏ.சுந்தர் ராஜ், ரவி(எ) காளிச்சாமி, ஆடலரசு, கே.எஸ்.ஷங்கர், ஏ.விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.மோகன்ராஜ், ஏ.செல்வராஜ், டி.கே.கார்த்திகா பிரகாஷ், பி.கனகராஜ், மற்றும் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சிவகுமார், மாணிக்கராஜ், பாசறை நிஷ்கலன், ஆவின் எஸ்.முருகன், செபி செபாஸ்டியன், முத்துஇள ங்கோவன், சுரேஷ்குமார், அப்துல்ரகுமான், வட்ட கழக செயலாளர்கள் சித்திரை செல்வராஜ், ஏ.செல்லப்பன், ஜூனியர் ராஜா, எம்.புல்கான், கே.பி.பாஸ்கரன், எம்.ஜெகதீசன், விவேகானந்தன், எஸ்.ஜெகதீஷ், மணல் நாராயணன், எஸ்டி.கதிரேசன், ரவி நடராஜன், கே.சுப்பிரமணியம், சி.ஜனார்த்தனன், எஸ்.சி.செல்வராஜ், ஹரி, பிரகாஷ், வினோத், கே.ஏ.காட்டுத் துரை, கேபிள் ஐ.பஷீர், என்.வேலுமயில், மு.குஞ்சாலி, கரும்புக்கடை முஜி, தங்கம் ரகூப், கேபிள் சரவணன், சி.கே.விஸ்வநாதன், பத்மநாபன், டி.கே.கண்ணையன், சி.தர்மராஜ் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பகுதி துணை செயலாளர் கவுதம் நன்றி கூறினார்.

    • ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.
    • மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது?

    திருப்பதி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்துள்ளது.

    இதற்கு பா. ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறியதாவது:-

    கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கும் இந்துக்களின் உணர்வுகளை திருப்பதி தேவஸ்தானம் புண்படுத்துகிறது.

    திருப்பதி கோவிலின் புனிதத்தைப் பாதுகாத்து ஆன்மீக மையமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, கோவிலை பணம் புரளும் பொருளாக மாற்ற கூடாது. பக்தர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் ஒரு நாளும் கழிவதில்லை.

    தேவஸ்தான விதிகளின்படி 1 சதவீதம் செலவழிக்க வாய்ப்பு இல்லை.

    இப்போது 1 சதவீதம் என்கிறார்கள், நாளை அது 10 அல்லது 50 சதவீதமாக அதிகரிக்கும். திருமலையில் தூப தீப நைவேத்யத்திற்கான செலவுகளைச் சமாளிக்க தேவஸ்தானகருவூலம் வறண்டுவிடும்.

    அதன் வசம் எந்த நிதியும் இருக்காது என்று பக்தர்கள் அஞ்சுகின்றனர். இதே போக்கு மற்ற கோவில்களிலும் தொடர்ந்தால், பக்தர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு யார் பொறுப்பு?

    ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.

    ஆனால், கோவில் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும்? மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் நிதியை விடுவித்து வருகிறது.

    மேலும், மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது? பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கோவில் நிதியை ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக அரசு வாதிடுகிறது.

    உண்மையில், திருப்பதியில் ஆயிரக்கணக்கான கோடி வணிகம் மற்றும் அது வசூலிக்கும் வரிகளை கருத்தில் கொள்ள வேண்டு மானால், அரசாங்கம் தான் பணம் கோவிலுக்கு செலுத்த வேண்டும்.

    திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அறக்கட்டளை வாரிய நியமனங்கள் அரசியல் மறுவாழ்வு மையங்களாக மாறிவிட்டன. மேலும் அவர்களின் முடிவுகள் ஏற்கத்தக்கதாக இல்லை.

    பா.ஜனதா இந்த முடிவுகளை எதிர்க்கும், அதற்கு எதிராக போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சென்னை:

    கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு சமுதாய கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

    மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகே உள்ள சமுதாய கூடத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 300 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு கழிவறையில் தண்ணீர் வரவில்லை. குடிப்பதற்கு குடிநீர் இல்லை என ஆசிரியர்கள் மனம் குமுறினர்.

    இதுபற்றி மாநில துணை செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

    அதிகாலையில் கைது செய்து இங்கு அழைத்து வந்தனர். பெண்கள் கைக் குழந்தைகள் உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் கூட இங்கில்லை. கழிவறையில் தண்ணீர் இல்லை.

    பெண்கள் கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆசிரியர்களை தரம் தாழ்த்தி வழிநடத்துகின்றனர். நாங்கள் உணவு கேட்கவில்லை. 300 பேர் உள்ள இடத்தில் 30 பேருக்கு மட்டும் உணவு கொடுத்தால் எப்படி? அதனால் தான் நாங்கள் யாரும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.

    குழந்தைகளுக்கு மட்டும் பிஸ்கெட் வாங்கி கொடுத்தோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இந்த சமுதாய கூடத்திலும் 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல புதுப்பேட்டை சமுதாய கூடத்திலும் தண்ணீர் வசதி இல்லை என ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • அரசியல் செய்வதற்காக கர்நாடக பா.ஜ.க. காவிரி பிரச்சினையை தூண்டி விடுகிறது.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி யின் 155-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தெற்குத்தெரு பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். காவிரி பிரச்சினைக்கு முதல் கார ணம் பா.ஜ.க. குழந் தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி வருகின்றனர். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல் 15 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கொடுத்து வந்தார். ஆனால் போராட்டத்தை தூண்டியது பா.ஜனதா தான்.

    கர்நாடக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் தருவது அம்மாநில மக்களி டையே பெரும் வரவேற்பினை பெற்று உள்ளது. இதை திசை திருப்புவதற்காக பா.ஜனதா அரசியல் செய்கிறது. இங்குள்ள பா.ஜனதா இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்?. தற்போது டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை காவிரி பிரச்சினையில் கர்நாடக முன்னாள் முத லமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் தலை யிடக்கூடாது என்று கட்சி மேலிடத்தில் கூறுவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மா பட்டி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், நகர் காங்கிரஸ் தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தேசிங், நகர்மன்ற கவுன்சிலர் அமுதா சரவணன், பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பி னர்கள் உலகநாதன், ராஜ்குமார், பழனிக்குமார், வட்டார தலைவர்கள் முரு கேசன், தளபதி சேகர், கள்ளிக்குடி பாண்டியன், வீரபத்திரன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பணி செய்த போது ஒரு பணியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    • கூட்டத்தில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகராட்சி விக்டோரியோ அரங்கில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன், துணை கமிஷனர் செல்வ சுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு வேலைகளையும் சரியாக செய்வதில்லை என குற்றச்சாட்டை எழுப்பினர்.

    வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பணி செய்த போது ஒரு பணியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இதுவரை அவரை எந்த அதிகாரியும் சென்று பார்க்கவில்லை.

    குப்பை கிடங்கில் என்ன சம்பவங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை என்ற குற்றச்சாட்டையும் கவுன்சிலர்கள் எழுப்பினர்.

    இதற்கு மேயர் பதிலளித்து பேசியதாவது:-

    வெள்ளலூர் குப்பை கிடங்கில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கே தெரியவில்லை.

    அது கோவை மாநகராட்சி குப்பை கிடங்கா அல்லது வேறு மாநகராட்சி குப்பை கிடங்கா. அதிகாரிகள் யாருமே சரியாக தகவல் தெரிவிப்பதில்லை.

    எனவே அந்த குப்பை கிடங்கு ஒப்பந்ததாரரை உடனடியாக மாற்ற வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக தமிழகத்தில் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை அறிவித்து செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×