search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது-செல்லூர் ராஜூ
    X

    அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது-செல்லூர் ராஜூ

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
    • மக்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நரிமேடு பகுதியில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை யில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற் றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். அப்போது வரை திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். நடித் தார். எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய பின்பு புது கட்சியை தொடங்கினார். அதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் சூட்டினார் இரட்டை இலையை சின்னமாக அறி வித்தார். தற்போது இறந்தும் இறைவனாக எம்.ஜி.ஆர். வாழ்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தில் உழ வர் மகனாக பிறந்தவர் அரசு பள்ளியில் படித்த வர். அ.தி.மு.க. ஆட்சியில் 100 நாட்கள் தாண்டாது என பேசினார். மு க ஸ்டாலின். அந்தப் பேச்சுக்களை தவிர்ப்படியாக்கிவிட்டு 4 1/2 வருஷம் சிறப்பாக ஆட்சி அமைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது இரண்டரை கோடி தொண் டர் களை அ.தி.மு.க.வில் வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

    மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்வேன், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என கூறினார்கள். அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் எனது தந்தை ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறி னார். ஆனால் எதையும் செய்யவில்லை.

    மாணவி அனிதா மரணத்தை வைத்து தி.மு.க. நாடகம் ஆடினார்கள்.

    தி.மு.க. இதுவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை, மக்கள் வரிப்பணத்தில் திமுக தலைவர் கலைஞர் இலவச டி.வி. கொடுத்தார். கேபிள் கனெக்சனை கொண்டு வந்து ஐந்து வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள்.

    மதுக்கடைகளில் குவாட் டருக்கு ரூ. 10 அதிகமாக கொடுத்தால் தான் கிடைக் கும். இந்த பத்து ரூபாய் கரூர் கம்பெனிக்கு போனது தற் போது முதல்வருக்கு அந்த பத்து ரூபாய் செல்கிறது.

    ஊழல் செய்வதில் சிறந்த கட்சி தி.மு.க., தற்போது விலைவாசியை கட்டுப் படுத்தவில்லை.விலைவாசி உயர்வு அதிகரித்து மக்கள் திண்டாட்டத்தில் இருக்கி றார்கள்.

    தற்போது எங்கு பார்த் தாலும் போதை கஞ்சா தலை விரித்து ஆடுகிறது. கஞ்சா கடத்தலை தடுக்கி றோம் என காவல்துறை சொல்கிறது ஆனால் தடுக்க முடியவில்லை. தி.மு.க. கட்சிக்காரர்களே கஞ்சா விற்கிறார்கள். மதுரைக்கு எந்த ஒரு நல்ல திட்டமும் தி.மு.க. செயல் படுத்த வில்லை.

    1,296 கோடி மதிப்பில் மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்கு சிறப்பு திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதை 2023 நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் பேசினேன். என்னை தெர்மாகோல் என நக்கல் செய்தார்கள். அமைச்சர் துரைமுருகன் என்னை கிண்டல் செய்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது.

    இந்தியாவிலேயே முதல்முறையாக மாணவர் களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் ஜெயலலிதா.பெண்களுக்கு மாணவி களுக்கு மாதவிடாய் காலங் களில் துணியை வைக்கிறார் கள் அதனால் இலவசமாக நாப்கின் வழங்கினார்.பெண் குழந்தைகள் 12-வது படிக்கும் போது இலவசமாக லேப்டாப் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. பெண் திருமணத்திற்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம் கொடுத்தார். பெண்கள் 10-ம் வகுப்பு படித்தால் 25 ஆயிரம் ரூபாய் பட்டப் படிப்பு படித்தால் 50 ஆயி ரம் ரூபாய் திருமண உதவித் தொகை கொடுத்தது ஜெயல லிதா. அதன் பின்பு பெண் களுக்கு சமுதாய வளை காப்பு நடத்தி சீர்வரிசை கொடுத்தவர் ஜெயலலிதா.

    அதனைத் தொடர்ந்து குழந்தை பிறக்கும்போது சத்தான புராத பவுடர்கள் கொடுத்து 18,000 பணம் கொடுத்தார்.குழந்தை பிறந்த பின்பு 16 வகையான பொருட்கள் அடங்கிய தாய் சேய் நல பெட்டியை கொடுத்தவர் ஜெயலலிதா.

    பெண்களுக்கு இலவச மாக மிக்ஸி கிரைண்டர் மின்விரிசி கொடுத்தவர் ஜெயலலிதா.

    வேலைக்கு பணி புரியும் பெண்களுக்கு இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் கொடுத்தார்.மகளிர் பிரச்சினையை தீர்ப் பதற்கு மகளிர் காவல் நிலை யங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.பெண்கள் கமெண்ட்டோ படை கொண்டு வந்தார்.உள் ளாட்சித் தேர்தலில் பெண் கள் 50 சதவீதம் போட்டியிட வேண்டும் என சட்டம் நிறைவேற்றியவர் ஜெயலலி தா.

    நாட்டில் பசி இருக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கும் விலை யில்லா அரிசி கொடுத்தார்.இது போன்ற ஏதாவது ஒரு திட்டத்தை திமுக கொண்டு வந்ததா?

    எனவே மீண்டும் எடப் பாடியார் தலைமையில் நல்லாட்சி விரைவில் அமை யும். அப்போது இந்த திட்டங் கள் எல்லாம் மக்களுக்கு மீண்டும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    Next Story
    ×