search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேகம்"

    • உ.பி., சிறைகளில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
    • கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல.

    அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22, 2024 அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவை நாடு முழுவதும் உள்ள சாவடி மட்டத்தில் நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

    கும்பாபிஷேகம் விழாவிற்கான வேத சடங்குகள் முக்கிய விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 16 அன்று தொடங்குகிறது. 

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி தெரிவித்தார்.

    இதுகுறித்து உத்தரபிரதேச சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி கூறுகையில், "தற்போது 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள். அவர்கள் இந்த நிகழ்வில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல. சில சம்பவங்கள் நடக்கும் போது அவர்கள் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். புனிதமான அந்நேரத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது" என்றார்.

    • 25 தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு லாரி மூலம் அயோத்திக்கு அனுப்பப்பட்டன.

    சென்னை:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவிலில் பொருத்தப்பட உள்ள ஆலய மணிகளை பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர் வழங்குகிறார். அவர் இந்த மணிகளை தயாரிக்க நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்திருந்தார். 25 தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முதற்கட்டமாக 48 மணிகள் தயாராகி உள்ளன. இதில் 5 மணிகள் தலா 75 கிலோ எடை கொண்டது. 6 மணிகள் தலா 60 கிலோ எடை கொண்டது. ஒரு மணி 25 கிலோ எடை கொண்டது. இதுதவிர 36 பிடிமணிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மணிகள் அனைத்தும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு லாரி மூலம் அயோத்திக்கு அனுப்பப்பட்டன.

    இதில் 12 ஆலய மணிகளும் கோவில் பிரகாரத்தில் பொருத்தப்பட உள்ளது. கும்பாபிஷேகத்தின்போது தமிழகத்தின் இந்த மணிகள் அயோத்தியில் ஒலிக்கும்.

    மணியை தயாரித்தவர்கள் கூறும்போது, "இரும்பு கலக்காமல் முழுவதும் காப்பர், வெள்ளி, துத்தநாகம் ஆகியவற்றால் செய்யப்பட்டு உள்ளது" என்றனர்.

    • தனது மகள் மீது அளவில்லா அன்பு வைத்த சவுந்தரபாண்டியன், உயிரிழந்த மகளின் நினைவால் தினமும் தவித்து வந்தார்.
    • எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலத்தைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 40). இவர் திருவாரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்கிற மனைவியும், சபரிவாசன் என்ற மகனும் உள்ளனர். சக்தி பிரக்யா என்ற மகள் இருந்தாள்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2 வயது குழந்தையாக இருந்த சக்தி பிரக்யா, வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தபோது வீட்டின் அருகே இருந்த குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாள்

    தனது மகள் மீது அளவில்லா அன்பு வைத்த சவுந்தரபாண்டியன், உயிரிழந்த மகளின் நினைவால் தினமும் தவித்து வந்தார். தனது மகளை பெண் தெய்வமாக நினைத்த அவர் தனது வீட்டு பூஜை அறையில் மகள் சக்தி பிரக்யா புகைப்படத்தை வைத்து பூஜை செய்து தினமும் வழிபாடு நடத்தினார்.

    இந்த நிலையில் தனது செல்ல மகளுக்கு கோவில் கட்ட சவுந்தரபாண்டியன் முடிவு எடுத்தார். இதனையடுத்து சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகில் கோவில் கட்டும் பணியினை தொடங்கினார். கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடத்தினார். தனது மகளை அம்மனாக பாவித்து, மகளின் சாயலில் அம்மன் சிலை வைத்து சக்தி பிரக்யா அம்மன் என்ற பெயரில் கோவில் கட்டி சவுந்தரபாண்டியன் கும்பாபிஷேகம் நடத்தினார்.

    இறந்த தனது குழந்தையை மறக்க முடியாமல் அந்த குழந்தைக்கு சவுந்தரபாண்டியன் கோவில் கட்டியது அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    இதுகுறித்து சவுந்தரபாண்டியன் கூறுகையில், அன்பே தெய்வம் என்பார்கள். நான் எனது மகள் மீது வைத்த அன்பால், 2 வயதில் உயிரிழந்த எனது மகள் என்னுள் தெய்வம் ஆனாள். எனது மகள் உயிருடன் இருந்து அவளுக்கு திருமணம் செய்தால் என்ன செலவு ஆகும் என்பதை நினைத்துத்தான் இதை நான் செய்துள்ளேன்.

    எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். என் மகள் நினைவாக கட்டிய இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்துவேன் என்றார்.

    • அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
    • அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள்.

    சென்னை:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி நடக்கிறது.

    நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி விபரங்களை கிராமங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்வதோடு அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    இதற்காக அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட 100 கிலோ அட்சதை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அட்சதையை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி சேத்துப்பட்டு ஆரிங்டன் சாலையில் உள்ள சின்மயா மிஷன் பள்ளியில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் விசுவ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கிறார்கள்.

    அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள். ஏற்கனவே 85 லட்சம் குடும்பத்தினர் தொடர்பில் இருப்பதாகவும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தெரிவித்தனர்.

    • ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள குறிச்சியார்பட்டி தெற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. சுவாமி சிலைகள் ஊர்வலமாக கேரளா செண்டை மேளதாளத்துடன் காளியம்மன் கோவில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்டு தெற்கு தெரு காளியம்மன் கோவில் வந்தடைந்தது. சுவாமி சிலைகளுக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து யாகசாலை பூஜை ஆச்சாரி யர் வர்ணம் கணபதி பூஜை யுடன் தொடங்கியது. 2 நாள் யாகசாலை பூஜையை அடுத்து கிருஷ்ணன் கோவி லில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளத்துடன் வந்தனர்.

    ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின் அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் தீப ஆராதனை வழிபாடு நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது

    சங்கரன்கோவில் சக்தி பிரியா தெம்மாங்கு குழு வினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கேரளா ராஜ்மகாதேவன் நம்பூதிரி நடத்தி வைத்தார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை பொருளாளரும், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரு மான குறிச்சியார்பட்டி மாரியப்பன் தலைமையில் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
    • சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    சேலம்:

    சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.

    சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.

    சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும் மற்றும் துவார பாலகர்கள், விநாயகர், முருகர் ஆகிய புதிய சிலை வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
    • சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணா ஹுதியும் தீபாராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓ.பி.கே. புது தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோபால சுவாமி ஆலயம் புதிதாய் நிர்மாணிக்கப்பட்டு ஆறடி உயரம் கொண்ட வேணுகோபால் சுவாமியும் மற்றும் துவார பாலகர்கள், விநாயகர், முருகர் ஆகிய புதிய சிலை வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணா ஹுதியும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று மூலவர் விமானம் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன், உப தலைவர்கள் தீனதயாளன், ராமு, செயலாளர் தயாளன், துணைச் செயலாளர்கள், கருணாமூர்த்தி, வரதன், திருவேங்கடம், பொருளாளர் துரை.கணேசன் மற்றும் அப்பகுதி வாசிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இதில் தேவராஜ் பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.

    ஆலய நிர்வாக பணியினை நந்தகோபால் ஸ்பதி சிறப்பாக செய்திருந்தார். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதில் 16-வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சாந்தி துரைராஜன், கண்ணன், சப்தகிரி, காஞ்சி காமராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேணுகோபாலின் பேரருளை பெற்று சென்றனர்.

    • புனித நீர் தெளிக்கப்பட்டது
    • பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடி அடுத்த கலித்தேரி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீரேணு காம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது விழாவை முன்னிட்டு யாக குண்டங்கள் அமைத்து கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு, 2 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, மேளதாளம் முழங்க புனித நீர் நிரப்பப்பட்ட கலசத்தை சிவாச்சாரியார்கள் எடுத்துக்கொண்டு கோயிலை வலம்வந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தினார்கள். பின்னர் பக்தர் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில், திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம் எல் ஏ., திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.அரங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நைனாக்கண்ணு, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தொப்பளான், கோவில் நிர்வாகிகள் கோபால்சாமி | கணேசன், திருமூர்த்தி, ரகுராமன், ஸ்தபதிகள் பாலாஜி, குமார் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது
    • வாசியோகி மவுனகுரு பாரதிராஜா சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்பு

    குனியமுத்தூர், 

    கோவை கெம்பட்டி காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னூற்று பத்திரகாளியம்மன் கோவில், ஸ்ரீ கருப்பண்ணசாமி கோவிலில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இறை சக்திகளை திருகுடங்களில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு முளைப்பாரி வழிபாடு, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது.

    24-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 4 மணிக்கு நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் வாசியோகி மவுனகுரு பாரதி ராஜா சுவாமிகள், கோவைபுதூர் சிவ ஸ்ரீ சிவஜோதி சித்தரையா, சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். 

    • கள்ளழகர் கோவில் ராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை விமரிசையாக நடக்கிறது.
    • இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கள்ளழகர் கோவிலில் ராஜகோபுரத்தில் 18ம் படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. காவல் தெய்வமாக விளங்கும் இங்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். வருடத்தின் ஆடி அமாவாசை நாளில் மட்டும் ராஜ கோபுரத்தின் 18-ம் படி வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்த நிலையில் 18-ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ராஜ கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2 கோடியில் பழமை மாறாமல் கோபுரத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. பணிகள் முடிந்த நிலையில் நாளை (23-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கோவில் திருமண மண்டபத்தில் முதல்கால யாகபூஜைகள் தொடங்கின. முன்னதாக நூபுர கங்கையில் இருந்து 160 குடங்களில் தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து யாகசாலையில் 8 குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் நாளை (23ந்தேதி) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்ககப்பட்டுள்ளது.

    நாளை கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கோவிலில் செய்யப்பட்டு ள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை ஆய்வு செய்தார்.

    • மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது
    • கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த மேல் நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜோதீஸ்வரி சமேத ஸ்ரீ ஜோதி நாகேஸ்வரர் கோவில் கும்பாபி ஷே கம் நடந்தது.

    இதனை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகாதீபா ராதனை காண்பி க்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சோழவந்தான் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு நகரி சாலை பிரிவில் உள்ள ராகு கேது சமேத சித்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. முரளி கிருஷ்ணா அய்யங்கார் தலைமையில் 2 நாள் யாக பூஜை நடைபெற்றது. காலை 9 மணி அளவில் குடங்களை எடுத்து வந்து மூலவர் கோபுரத்தின் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் விநாயகர் உள்பட பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது

    இவ்விழாவில் சோழ வந்தான் ஜெனகை மாரி யம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல், லட்சுமி, அருணாச்சலம், அருணா, அருணாசலம், குருசாமி, சொக்கலிங்கம், சுற்றுலாத் துறை அலுவலர் பால முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×