என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கெம்பட்டி காலனி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது
- வாசியோகி மவுனகுரு பாரதிராஜா சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்பு
குனியமுத்தூர்,
கோவை கெம்பட்டி காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னூற்று பத்திரகாளியம்மன் கோவில், ஸ்ரீ கருப்பண்ணசாமி கோவிலில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இறை சக்திகளை திருகுடங்களில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இரவு 8 மணிக்கு முளைப்பாரி வழிபாடு, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது.
24-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 4 மணிக்கு நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் வாசியோகி மவுனகுரு பாரதி ராஜா சுவாமிகள், கோவைபுதூர் சிவ ஸ்ரீ சிவஜோதி சித்தரையா, சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்