search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெம்பட்டி காலனி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கெம்பட்டி காலனி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது
    • வாசியோகி மவுனகுரு பாரதிராஜா சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்பு

    குனியமுத்தூர்,

    கோவை கெம்பட்டி காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னூற்று பத்திரகாளியம்மன் கோவில், ஸ்ரீ கருப்பண்ணசாமி கோவிலில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இறை சக்திகளை திருகுடங்களில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு முளைப்பாரி வழிபாடு, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது.

    24-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 4 மணிக்கு நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் வாசியோகி மவுனகுரு பாரதி ராஜா சுவாமிகள், கோவைபுதூர் சிவ ஸ்ரீ சிவஜோதி சித்தரையா, சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×