search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yaga Puja"

    • கள்ளழகர் கோவில் ராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை விமரிசையாக நடக்கிறது.
    • இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கள்ளழகர் கோவிலில் ராஜகோபுரத்தில் 18ம் படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. காவல் தெய்வமாக விளங்கும் இங்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். வருடத்தின் ஆடி அமாவாசை நாளில் மட்டும் ராஜ கோபுரத்தின் 18-ம் படி வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்த நிலையில் 18-ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ராஜ கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2 கோடியில் பழமை மாறாமல் கோபுரத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. பணிகள் முடிந்த நிலையில் நாளை (23-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கோவில் திருமண மண்டபத்தில் முதல்கால யாகபூஜைகள் தொடங்கின. முன்னதாக நூபுர கங்கையில் இருந்து 160 குடங்களில் தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து யாகசாலையில் 8 குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் நாளை (23ந்தேதி) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்ககப்பட்டுள்ளது.

    நாளை கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கோவிலில் செய்யப்பட்டு ள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை ஆய்வு செய்தார்.

    • யாகபூஜைகளுடன் நடந்தது
    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கணணமங்கலம் அடுத்த சந்தவாசல் புஷ்பகிரி காட்ரோடு பகுதியில் ராஜகணபதி, மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு நேற்றுமுன்தினம் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் இரவு முதல் கால யாகபூஜைகளும் நடைபெற்றது.

    கோபூஜை, தம்பதி சங்கல்பம், 2-ம் கால யாகபூஜைகளுடன், காலை 10.15 மணிஅளவில் மகாகும்பாபிசேக விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    • 3000 பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட்டுள்ளது
    • நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் விழுப்புரம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளன. முன்னதாக யாகசாலைகள் அமைத்து பூஜைகள் நடந்து வருகிறது.

    இன்று காலை ஸ்ரீபுரம் சக்தி அம்மா ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஜலகண்டேஸ்வரரை தரிசனம் செய்து யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார்.

    நாளை காலை கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு ஒட்டி வேலூர் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள் டிஎஸ்பிக்கள் மற்றும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    நாளை காலை அபிஷேக விழாவின் போது கோவிலுக்குள் 3000 பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் விஐபி பாஸ் வழங்கப்பட்டு உள்ள கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கீழ்பென்னாத்தூர் அங்காளம்மன் கோவிலில் நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அங்காளம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் துவங்கிட யாக பூஜை நடத்தப்பட்டது. கீழ்பென்னாத்தூரில் மிகவும் பழமையான வாய்ந்த ஆலயமான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதியதாக கருவறை அம்மன் அமைத்திடவும், கோவில் சுற்றுசுவர்கள் அமைத்திடவும் கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு பணிசெய்திட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, புனரமைப்பு பணிகள் துவங்கும் பணிக்காக அங்காளம்மன் கோவில் வளாகத்தில் 11 கலசங்கள் அமைக்கப்பட்டு அஸ்திரயாகபூஜை நடத்தப்பட்டது.

    பின்னர், அங்காளம்மன் கருவறை அமையும் இடத்திலும், சுற்றுசுவர் அமையும் இடத்திலும் வாஸ்து பூஜைமுறைப்படி பூமிபூஜை போடப்பட்டது. ஆலய நிர்வாகிகள், திருப்பணி குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

    ×