கோவில் புனரமைப்பு பணி தொடக்க யாக பூஜை

கீழ்பென்னாத்தூர் அங்காளம்மன் கோவிலில் நடந்ததுபொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
யாக பூஜை நடந்த காட்சி.
யாக பூஜை நடந்த காட்சி.
Published on

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அங்காளம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் துவங்கிட யாக பூஜை நடத்தப்பட்டது. கீழ்பென்னாத்தூரில் மிகவும் பழமையான வாய்ந்த ஆலயமான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதியதாக கருவறை அம்மன் அமைத்திடவும், கோவில் சுற்றுசுவர்கள் அமைத்திடவும் கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு பணிசெய்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, புனரமைப்பு பணிகள் துவங்கும் பணிக்காக அங்காளம்மன் கோவில் வளாகத்தில் 11 கலசங்கள் அமைக்கப்பட்டு அஸ்திரயாகபூஜை நடத்தப்பட்டது.

பின்னர், அங்காளம்மன் கருவறை அமையும் இடத்திலும், சுற்றுசுவர் அமையும் இடத்திலும் வாஸ்து பூஜைமுறைப்படி பூமிபூஜை போடப்பட்டது. ஆலய நிர்வாகிகள், திருப்பணி குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com