search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு ஏற்பாடு"

    • சோழவந்தான் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு நகரி சாலை பிரிவில் உள்ள ராகு கேது சமேத சித்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. முரளி கிருஷ்ணா அய்யங்கார் தலைமையில் 2 நாள் யாக பூஜை நடைபெற்றது. காலை 9 மணி அளவில் குடங்களை எடுத்து வந்து மூலவர் கோபுரத்தின் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் விநாயகர் உள்பட பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது

    இவ்விழாவில் சோழ வந்தான் ஜெனகை மாரி யம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல், லட்சுமி, அருணாச்சலம், அருணா, அருணாசலம், குருசாமி, சொக்கலிங்கம், சுற்றுலாத் துறை அலுவலர் பால முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.
    • விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை போலீஸ் சூப்பிரண்ட் நேரில் ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு

    மகா கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.

    இதை முன்னிட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடை பெற்றது வருகிறது.

    விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து நாகப்பட்டினம் மாவட்டபோலீஸ் சூப்பிரண்ட்ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வருகின்ற 5-ந்தேதி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படயுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

    • பேரூராட்சி கடைகள் பொது ஏலம் விடப்பட்டது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை சிங்கம்புணரி காவல்துறையினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள் ளகடைகள் 38 அலுவலக வணிகவளாக கடைகள் 38 மற்றும் அம்மா தினசரி சந்தை கடைகள், சிறுவர் பூங்கா கடைகள் உள்ளிட்ட கடைகள் ஏலதாரர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. கடை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்களிடம் இருந்து வரைவோலைகள் பெறப்பட்டன. வரை ஓலைகள் வழங்கிய ஏல தாரர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். பேருராட்சி கூட்ட அரங்கில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, இளநிலை உதவியாளர்கள் அழகர்சாமி, ராஜசேகர், மற்றும் அலுவலக பணியாளர்கள் முன்னிலையில் பொது ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு கடைகளாக கடை எண் அறிவிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் அதிக தொகை கேட்ட நபர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிங்கம்புணரி காவல்துறையினர் செய்திருந்தனர்.

    ×