பேரூராட்சி கடைகள் பொது ஏலம்

பேரூராட்சி கடைகள் பொது ஏலம் விடப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிங்கம்புணரி காவல்துறையினர் செய்திருந்தனர்.
பேரூராட்சி கடைகள் பொது ஏலம்
Published on

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள் ளகடைகள் 38 அலுவலக வணிகவளாக கடைகள் 38 மற்றும் அம்மா தினசரி சந்தை கடைகள், சிறுவர் பூங்கா கடைகள் உள்ளிட்ட கடைகள் ஏலதாரர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. கடை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்களிடம் இருந்து வரைவோலைகள் பெறப்பட்டன. வரை ஓலைகள் வழங்கிய ஏல தாரர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். பேருராட்சி கூட்ட அரங்கில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, இளநிலை உதவியாளர்கள் அழகர்சாமி, ராஜசேகர், மற்றும் அலுவலக பணியாளர்கள் முன்னிலையில் பொது ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு கடைகளாக கடை எண் அறிவிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் அதிக தொகை கேட்ட நபர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிங்கம்புணரி காவல்துறையினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com