என் மலர்

    நீங்கள் தேடியது "security arrangements"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொண்டத்து காளியம்மன் கோவிலில் வருகிற 4-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
    • பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், கழிவறைகள், குடிநீர் வசதி, தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் வருகிற 4-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. குண்டம் இறங்குவதற்கு அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, திருப்பூர் மாநகர பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிய உள்ளனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், 30-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், பக்தர்களுக்கு குடிநீர் வசதி ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, தங்கும் வசதி, சிறப்பு பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு சசாங் சாய் கோவிலுக்கு வருகை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் பக்தர்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 4 கண்காணிப்பு கோபுரம், 5 பகுதிகளில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் அவினாசி தீயணைப்புத்துறையினரும் ஈடுபட உள்ளனர். ஆய்வின் போது பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேரூராட்சி கடைகள் பொது ஏலம் விடப்பட்டது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை சிங்கம்புணரி காவல்துறையினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள் ளகடைகள் 38 அலுவலக வணிகவளாக கடைகள் 38 மற்றும் அம்மா தினசரி சந்தை கடைகள், சிறுவர் பூங்கா கடைகள் உள்ளிட்ட கடைகள் ஏலதாரர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. கடை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்களிடம் இருந்து வரைவோலைகள் பெறப்பட்டன. வரை ஓலைகள் வழங்கிய ஏல தாரர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். பேருராட்சி கூட்ட அரங்கில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, இளநிலை உதவியாளர்கள் அழகர்சாமி, ராஜசேகர், மற்றும் அலுவலக பணியாளர்கள் முன்னிலையில் பொது ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு கடைகளாக கடை எண் அறிவிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் அதிக தொகை கேட்ட நபர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிங்கம்புணரி காவல்துறையினர் செய்திருந்தனர்.

    ×