search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நீர் பிரச்சனை"

    • தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
    • வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    காவிரியில் உரிய தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் , கர்நாடகாவில் போராட்டத்தை தூண்டி விடும் பா.ஜ.க. மற்றும் கன்னட அமைப்பு நிர்வாகிகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் உருவப்படம் அடங்கிய பேனருக்கு மலர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது பேனர் முன்பு நின்று ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த நூதன போராட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தியும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 8 டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்தது.

    இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், இயக்கத்தினர், அமைப்பினர், வணிகர் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர் முழு ஆதரவு தெரிவித்தனர்.

    அதன்படி இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் காய்கறி, மளிகை, ஓட்டல், செல்போன், பேன்சி, அரிசிக்கடை உள்பட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டன.

    தஞ்சையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பர்மா பஜார், கீழவாசலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் நகரில் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டன. காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை மூடப்பட்டதால் வெறிச்சோடின.

    கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பூதலூர், வல்லம், திருவையாறு உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. அதே போன்று ஆட்டோக்களும் ஓடவில்லை. ஆட்டோக்கள் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

    திருவாரூர் விஜயபுரம் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதனால் திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று காவல்துறை வாகனங்களும் திருவாரூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் 45 அரசு பஸ்களும் இன்று இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம், திருப்பூண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கடைகள், 3000 உணவகங்களை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13 மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார் கோவில், திருக்கடையூர், சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் 11,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பால், மருத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.

    உணவகம், பேக்கரி, டீக்கடைகள், ஸ்டேஷனரி என மொத்தம் 54 கடைகளில் 53 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது.

    திருச்சி மாநகரின் பிரதான மார்க்கெட் ஆன காந்தி மார்க்கெட் இன்று வழக்கம் போல் இயங்கியது. பஸ்கள், ஆட்டோ, கார்கள் வழக்கம் போல் இயங்கியது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டங்கள் டெல்டா பாசனத்தில் காவிரி நதிநீர் மூலம் பாசனம் பெரும் பகுதியாக இருந்து வருகிறது.

    இதில் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீரமங்கலம் மற்றும் கடைமடை பகுதியான மேற்பனைக்காடு உள்ளிட்ட 2 ஊர்களில் மட்டும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    கீரமங்கலம் பேரூராட்சியில் டீக்கடைகள், உணவகங்கள், பூ கமிஷன் கடைகளை தவிர்த்து 80 சதவீத வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே போல மேற்பனைகாடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் சுமார் 210 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புத்தூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பு காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருச்சியில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்டா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. அரசு, தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. ஆட்டோ, வேன்களும் இயக்கப்பட்டது.

    மேலும் டெல்டா மாவட்டங்களில் மருந்து, பால் கடைகள் மட்டும் இயங்கின. பெட்ரோல் பங்குகளும் செயல்பட்டது.

    எனினும் கடைகள் அடைக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்கள் முடங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 13 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.
    • காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

    புதுடெல்லி:

    காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளையே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    13 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது. காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

    • காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால் பகுதிகளிலும் திட்டமிடப்பட்டு தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை மேட்டூர் அணை நீர் சென்றது.
    • அரசு பொறுப்பேற்ற பிறகு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மேட்டூர் அணையை சீராக திறந்து விடப்பட்டு வருகிறது.

    சென்னை :

    தமிழக சட்டசபையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2021 ஆம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட ஜூன் 12-ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் நாள் அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதனால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன. இதன் பயனாக 2021- 22 ஆம் ஆண்டில் 46.2 லட்சம் டன் அளவில் 202-23 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் செலவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம் உற்பத்தியும் பெருகியது.

    காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால் பகுதிகளிலும் திட்டமிடப்பட்டு தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை மேட்டூர் அணை நீர் சென்றது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மேட்டூர் அணையை சீராக திறந்து விடப்பட்டு வருகிறது.

    காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் எப்பொழுதும் எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும் என்ற உறுதி மொழியை இந்த மாமன்றத்திற்கு முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிர்வாகிகள் அன்பு தென்னரசன், கதிர் ராஜேந்திரன், பாக்கியராஜன், செந்தில்குமார், பாத்திமா பர்கானா, இடும் பவனம் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் இனியன் ஜான், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈரா மகேந்திரன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் நாக நாதன், தலைவர் மகேந்திர வர்மன், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் கோபிதேவா, கரு.அருண் குமார், தென்றல் அரசு, பொன்.குமார், பசும்பொன் அன்பரசன், விஸ்வநாத், ஷேக், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி தலைமையில் 150-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்களான செல்வமணி, அருண் குமார், அருள் பிரகாசம், ராஜாமணி, ஸ்ரீதர், மணிகண்டன், ஆறுமுகம், சமத்துவ நேயன், புருஷோத்தமன், குமரன், அன்பு, பிச்சை, முத்து, கிருட்டிணமூர்த்தி, பொன்னி சரவணன், சுமதி, சீலாதேவி, வாசுகி, பர்வீன் பானு, ஞானசெல்வி, அமுதினி மற்றும் ஆவடி தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வருகிற 12-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் தமிழகம்-கர்நாடக அதிகாரிகள் மீண்டும் முறையிட உள்ளனர்.

    சென்னை:

    காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து தேவையான தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது.

    கடந்த 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டதையும் கர்நாடகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வருகிற 12-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம்-கர்நாடக அதிகாரிகள் மீண்டும் முறையிட உள்ளனர்.

    • குஜராத்தில் நதி நீர் பிரச்சனை தொடர்பாக, இதுவரை எந்தவித பிரச்சனையும் எழவில்லை.
    • ராஜஸ்தான் முதல்-மந்திரி தனது பதவியை காப்பாற்றுவதில் தான் குறியாக உள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்கள் சண்டை போட்டு வருகின்றன. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்குள் உள்ள இரு ஆளும் கட்சிகளுக்கு இடையே காவிரி பிரச்சனைக்காக மோதி வருகிறார்கள் . குஜராத்தில் நதி நீர் பிரச்சனை தொடர்பாக, இதுவரை எந்தவித பிரச்சனையும் எழவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தை கடந்த 5ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு சீரழித்து விட்டது. குற்றங்கள் இங்கு அதிகமாக நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது. இதற்காகவா நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட்டீர்கள். ராஜஸ்தான் முதல்-மந்திரி தனது பதவியை காப்பாற்றுவதில் தான் குறியாக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி நீரை பெறுவதற்காக நமது ஒன்று பட்ட உணர்வை காட்ட வேண்டும்.
    • தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் பிரச்சனையில் 55 ஆண்டுகளாக கண் துடைப்பு நாடகம் தான் நடக்கிறது.

    தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரையும் கர்நாடக அரசு கொடுக்கவில்லை. அந்த மாநில அரசும், அங்குள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மொத்தமாக ஒன்றிணைந்து போராடுகின்றன.

    தமிழகத்திலும் அனைவரும் ஒருங்கிணைந்து போராடும் சூழலை உருவாக்காதது ஏன்? உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி நீரை பெறுவதற்காக நமது ஒன்று பட்ட உணர்வை காட்ட வேண்டும்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. சோனியா மூலம் அந்த மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பது நதிகளை இணைப்பதுதான். இதுபற்றி கவர்னரை சந்தித்தபோதும் வற்புறுத்தினோம்.

    தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்க போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது.
    • மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையில் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு, இரண்டு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    அந்தந்த மாநில நிலவரத்திற்கு ஏற்ப கருத்து பரிமாற்றங்கள் இருக்கும். இதில் வன்முறைக்கு எந்த விதத்திலும் இடமில்லை. கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது. இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்புவர்கள் மீது கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது.
    • கர்நாடகத்தின் நிலையை ரஜினிகாந்த் எடுத்துக் கூற வேண்டும்.

    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

    இந்த முழு அடைப்புக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. இதனால் தலைநகர் பெங்களூரு மீண்டும் முடங்கும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள முதல்-மந்திரி சித்தராமையாவின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், 'எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது. இதை கண்டித்து 29-ந்தேதி (நாளை) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்துகிறோம். கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்துகிறோம். நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு வந்து செல்கிறார். அவா் இங்கு இருந்தபோது காவிரி நீர் குடித்துள்ளார். அதனால் அவர் காவிரி பிரச்சனையில், கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்' என்றார்.

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலை உணவு ஓட்டல்களில் தயார் செய்து வழங்கப்பட்டது.
    • செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.

    பெங்களூரு:

    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை கண்டித்து பெங்களூருவில் நேற்று விவசாய சங்கங்கள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலை உணவு ஓட்டல்களில் தயார் செய்து வழங்கப்பட்டது. இதில் பெங்களூரு யஷ்வந்தபுரம் யார்டு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு மதிய உணவாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. இதில் யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கிய தக்காளி சாதத்தில் செத்த எலி கிடந்தது.

    இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சாப்பாட்டை சாப்பிடாமல் தூக்கி வீசினர். இந்த தகவல் போலீசாருக்கு பரவியதால், மற்ற போலீசாரும் உணவை சாப்பிடாமல் குப்பையில் போட்டுள்ளனர். இந்த தக்காளி சாதம் யஷ்வந்தபுரத்தில் உள்ள அசோக் டிபன் சென்டரில் இருந்து போலீசாருக்கு வழங்கப்பட்டதும், அதில் தான் செத்த எலி கிடந்ததும் தெரியவந்தது. இந்த டிபன் சென்டரில் இருந்து 180 போலீசாருக்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து அறிந்ததும் யஷ்வந்தபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளை, பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுஜித் கடுமையாக கடிந்து கொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.200 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் போலீசாருக்கு தரமான உணவு வழங்கவில்லை என சரமாரி கேள்வி எழுப்பி டோஸ் விட்டுள்ளார். சம்பவம் பற்றி போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித் நிருபர்களிடம் கூறுகையில், யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் செத்த எலி கிடந்துள்ளது. முழுஅடைப்பையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கிய உணவிலேயே செத்த எலி கிடந்துள்ளது. நல்ல வேளையாக அந்த உணவை யாரும் சாப்பிடவில்லை. அந்த உணவை யாராவது சாப்பிட்டு இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டியிருக்கும். எனவே செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக யஷ்வந்தபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு, மாநகர போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.

    • கர்நாடக அணைகளில் இருந்து நேற்று முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3061 கனஅடியாகவும், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6156 கனஅடியாகவும் உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டத்தில் உள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.

    அதன்படி காவிரி ஒழுங்காற்று குழு, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் கர்நாடகா தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது.

    இதைதொடர்ந்து நடந்த காவிரி மேலாண்மை அவசர கூட்டத்திலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் கர்நாடகா தண்ணீர் திறக்காமல் இருந்து வந்தது.

    கடந்த 21-ந்தேதி இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நேற்று முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து 5473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3838 கனஅடியும் என மொத்தம் 6 ஆயிரத்து 338 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3061 கனஅடியாகவும், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6156 கனஅடியாகவும் உள்ளது.

    ×