search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரியில் தண்ணீர் திறக்க கோரி சீமான் தலைமையில் போராட்டம்
    X

    காவிரியில் தண்ணீர் திறக்க கோரி சீமான் தலைமையில் போராட்டம்

    • நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிர்வாகிகள் அன்பு தென்னரசன், கதிர் ராஜேந்திரன், பாக்கியராஜன், செந்தில்குமார், பாத்திமா பர்கானா, இடும் பவனம் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் இனியன் ஜான், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈரா மகேந்திரன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் நாக நாதன், தலைவர் மகேந்திர வர்மன், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் கோபிதேவா, கரு.அருண் குமார், தென்றல் அரசு, பொன்.குமார், பசும்பொன் அன்பரசன், விஸ்வநாத், ஷேக், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி தலைமையில் 150-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்களான செல்வமணி, அருண் குமார், அருள் பிரகாசம், ராஜாமணி, ஸ்ரீதர், மணிகண்டன், ஆறுமுகம், சமத்துவ நேயன், புருஷோத்தமன், குமரன், அன்பு, பிச்சை, முத்து, கிருட்டிணமூர்த்தி, பொன்னி சரவணன், சுமதி, சீலாதேவி, வாசுகி, பர்வீன் பானு, ஞானசெல்வி, அமுதினி மற்றும் ஆவடி தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×