search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleanliness"

    • பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை தவிர்க்க வேண்டும்.

    சீர்காழி:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி சீர்காழி அருகே காரைமேடு பகுதியில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 100,க்கும் மேற்பட்டோர் பூம்புகார் கடற்கரையில் தூய்மை பணியை தொடங்கினர்.

    பூம்புகார் பீச் மணல் பரப்பில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், ஐஸ்கிரீம் கப், பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள், போன்றவற்றை ஒவ்வொ ன்றாக எடுத்து சுத்தம் செய்தனர்.

    இதுகுறித்து ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் கூறுகையில்:

    நம் பாரத பிரதமரின் முக்கிய நோக்கம் தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள 14 மையத்தில் சேர்மன் சாமி தலைமையில் அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    காரைமேடு ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திலும், அதனைத் தொடர்ந்து பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இம்மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களிலும் அகில இந்திய அளவில் இப்பணி நடைபெற உள்ளது.

    குறிப்பாக கடற்கரை பகுதியில் வீசப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறி கடலில் கலந்து மீன்கள் உண்ணும் பொழுது அந்த மீன்களை சாப்பிடும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    பீச் பகுதியில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

    • மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை நகராட்சி ஆணையர் வெங்கடலெட்சுமணன் தொடங்கி வைத்தார்.

    இதில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன், ஆசிரியர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற கட்டணமில்லா தொலை பேசி எண். 14420 பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இணையலாம்.
    • 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நீர் நிலைகள் பாதுகாப்புக்குழு செயல் திட்டக்கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் பணிகள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்று தல், தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    நீர் நிலைகளில் கொள்ள ளவினை நிலை நிறுத்துதல் போன்ற பணிகளில் தொடர் நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகளை பாதுகாத்தல் பணியில் தொடர்புடைய துறைகள் மட்டுமன்றி, பொது தொண்டு நிறுவ னங்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நீர் நிலைகள் பாதுகாப்பு நடவ டிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வரும் பொது அமைப்புக்கள், விவசாய சங்க கூட்டமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகி யோர்களை ஒருங்கிணைத்து நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதன்படி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில், நீர் நிலைகள் குழு மூலம் மாவட்டத்தில் 2 நீர் நிலைகள் தேர்ந்தெடுக் கப்பட்டு, அதில் மாபெரும் தூய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமி டப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், வருகின்ற செப்டம்பர் 9-ந் தேதியன்று திருப்புவனம் நகரை ஒட்டியுள்ள வைகை நகர் பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் பணியாற்றிட ஆர்வமுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர தன்னார்வ தொண்டு அமைப்புக்களை சார்ந்தோர்கள், மாவட்ட நிர்வாக தொலைபேசி எண்ணான 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இய்குநர் சிவராமன், செயற் பொறியாளர்கள் (சருகனியாறு, மணிமுத்தாறு, பெரியாறு வடிநிலக் கோட்டங்கள்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (நில அளவை), சிவகங்கை வன சரக அலுவலர், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் இதர குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.
    • அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சம்பளம் தரவில்லை என வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இது குறித்து நேற்று அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்களையும், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மகளிர் சுய உதவி குழு மூலம் துப்புரவு பணியை மேற்கொள்ளும் ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் தூய்மை பணியாளர்கள் அனைவருமே சம்பள பாக்கி எதுவும் இல்லை. சம்பள தொகை வங்கிக் கணக்கில் கடந்த 5-ந் தேதி வந்துவிட்டது என தெரிவித்தனர்.

    இதனால் பணியாளர்க ளுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என சம்பள பாக்கி உள்ளதாக வாட்ஸ் அப் குழுவில் வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு விடம் கேட்டபோது:-

    வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சம்பள பாக்கி என வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் . அது முற்றிலும் தவறான தகவல். தூய்மை பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பள பாக்கி நிலுவையில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

    தர்ணா போராட்டம்

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 50-க்கும்

    மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகை யில், எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.720 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.320 என்ற அடிப்படையிலேயே சம்பளம் வழங்குகின்றனர்.

    மேலும் விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனர்.

    எங்களுக்கு நிர்ண யிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும். பி.எப். பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    தர்ணா

    தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு ரூ.720 என தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இப்போது ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை பிடித்தம் செய்கின்றனர். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்து வமனையில் தூய்மை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காகாபாளையம்:

    சேலம் இடங்கணசாலை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.

    ஒப்பந்த தொழிலாளர்

    இந்த பகுதியில் சேரும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து, குறிப்பிட்ட ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுகிறது.

    மறியல்

    இந்த நிலையில், தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதனை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால், அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • பொத்தனூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 4-வது வார்டு வெள்ளாளர் தெரு பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • தூய்மைப்பணி முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 4-வது வார்டு வெள்ளாளர் தெரு பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப்பணி முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் அன்பரசு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர்,வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட் டவர்கள் இதில் பங்கேற்றனர்.

    அவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின் விளக்கு கள் மற்றும் மின் இணைப் புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பணிகளும், வார்டு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சிறப்பு பயிற்சி 3 நாட்கள் வழங்கப்பட்ட உள்ளது
    • சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருவாரூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளி வளாகங்களில் முளைத்துள்ள புல், பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

    பள்ளியின் கட்டடம் மற்றும் கழிப்பிடங்கள், குடிநீர் வசதிகளை கண்காணித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள், கழிப்பிடம் மற்றும் கட்டிட சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பள்ளி திறப்பதை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்தும் பள்ளிகளுக்கும், புத்தகங்கள் குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி திறந்த அதே நாளில் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பிரிண்டர் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் பணி நடைபெற உள்ளதால் ஆசிரியர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்ச்சியும் மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித்துறை அலு வலர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

    • தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கழிவை அகற்றி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை கோவில் நகரமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சாமி தரிசனம் செய்யவும், சுற்றுலா இடங்களை பார்வையிடமும் வருகின்றனர். ஆனால் மதுரை நகரை தூய்மையாக பராமரிப்பதில் தொடர்ந்து மெத்தனம் காட்டப்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை மேடுகளும், கழிவுநீர் தேங்கியிருப்பதையும் காணமுடியும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக பஸ் நிலையங்களை தூய்மைப்ப டுத்தும் பணிகள் தினமும் காலையில் தாமதமாகவே தொடங்குகிறது. மக்கள் நடமாட்டம் அதிகரித்த பின் சரியாக பணிகளை மேற்கொள்ளாமல் சென்று விடுகின்றனர். இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியும் கழிவுகள் தேங்கியும் கிடக்கின்றன.

    நகரின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்யாமலேயே விட்டு விடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மேம்பாலங்களின் அடிப்பகுதிகளில் சரியான தூய்மைப் பணிகள் நடப்பதில்லை. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதே போல் பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் பகுதிகளிலும் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது.

    மேலும் இந்தப் பகுதிகளை சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பகுதியை சுத்தமாக பராமரித்து மரக்கன்றுகளை நட்டால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இங்கு மர்ம நபர்களின் நடமாட்டத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நகரில் ஆங்காங்கே கூடு தலாக சுகாதார வளாகங்கள் கட்டப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி வரலாற்று சிறப்பு வாய்ந்த திருமலை நாயக்கர் மகாலை சுற்றி குப்பைகள், கழிவுகள் கொட்டும் இடமாக மாறி உள்ளது. மகாலை ஓட்டியுள்ள பந்தடி தெரு வில் அசுத்தம் நிலவுகிறது. தெப்பக்குளத்தில் அண்மையில் பெய்த கோடை மழை மற்றும் வைகையில் திறந்தவிடப்பட்ட நீர் மூலம் மாரியம்மன் தெப்பக்குளம் நிரப்பப்பட்டது. ஆனால் அங்கு நிரம்பிய தண்ணீரில் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தெப்பக்குளத்தில் தேங்கியிருப்பதால் தண்ணீர் மாசுபட்டுள்ளதோடு, துர்நாற்றம் காரணமாக தெப்பக்குளம் பகுதிக்கு மக்கள் செல்வதை தற்போது தவிர்த்து வருகின்றனர். எனவே தெப்பக்குளத்தில் உள்ள கழிவை அகற்றி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் குளியல் சோப், சலவை சோப், பற்பசை, பல் துலக்கும் பிரஷ், தலைக்கு எண்ணெய், நாப்கின் அடங்கிய 'ஹெல்த் கிட்' எனப்படும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், தொண்டி பகுதி மேலாண்மைக்குழு உறுப்பினர் கமாலுதீன், கவுன்சிலர் அபுதாகிர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

    • மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் 99 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்ற பணியாளர்களு டன் சேர்ந்து தூய்மைப் பணியினை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த ஒப்பந்த பணியா ளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு இன்று பணி வழங்கப்படவில்லை என தெரிய வருகிறது.

    இதனை கண்டித்து மேட்டூர் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதற்கு மாற்றாக புதிய ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

    அல்லது பழைய ஒப்பந்ததாரருக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும். ஆனால் இது எதுவுமே நடந்ததாக தெரியவில்லை என்றனர்.

    இதற்கிடையே, ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணியினையும் நிரந்தர பணியாளர்களே மேற்கொண்டு வருவதால், மேட்டூரில் துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    ×