விழிப்புணர்வு பேரணி

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி சார்பில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை நகராட்சி ஆணையர் வெங்கடலெட்சுமணன் தொடங்கி வைத்தார்.

இதில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன், ஆசிரியர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற கட்டணமில்லா தொலை பேசி எண். 14420 பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com