search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொத்தனூர் பேரூராட்சியில் தூய்மை பணி முகாம்
    X

    பொத்தனூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் வெள்ளாளர் தெரு பகுதியில் தூய்மை பணிமுகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பொத்தனூர் பேரூராட்சியில் தூய்மை பணி முகாம்

    • பொத்தனூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 4-வது வார்டு வெள்ளாளர் தெரு பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • தூய்மைப்பணி முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 4-வது வார்டு வெள்ளாளர் தெரு பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப்பணி முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் அன்பரசு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர்,வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட் டவர்கள் இதில் பங்கேற்றனர்.

    அவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின் விளக்கு கள் மற்றும் மின் இணைப் புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பணிகளும், வார்டு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×