search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல்"

    • டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
    • தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கே.கே. நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த "டிப் டாப்" வாலிபர் ஒருவர் ரூ.760-க்கு பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் உள்ளிட்ட டிபன் வகைகளை பார்சல் வாங்கினார் அப்போது பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக கூறிய வாலிபர் கடை ஊழியரை அனுப்பி வைத்தால் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மோகன் ராஜ், கடையில் வேலை பார்த்து வரும் சிறுவனை அனுப்பி வைத்தார். டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    கடையின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிற்குள் சென்று ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் ஓட்டல் ஊழியரின் செல்போனை கேட்டு வாங்கினார்.

    மேலும் 2-வது தளத்தில் உள்ள நண்பரிடம் கூறி விட்டேன். போய் பணத்தை வாங்கி கொண்டு வா" என்று கூறி அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பிய ஓட்டல் ஊழியர் அந்த வீட்டின மேல் தளத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

    அவர் கீழே இறங்கி வருவதற்குள் டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து செல்போனுடன் தப்பி சென்றுவிட்டார். சினிமா பாணியில் அவர் ஏமாற்றி டிபன் வாங்கி சென்று இருப்பது தெரிந்தது.

    டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு நூதனமான முறையில் செல்போனையும் பறித்து தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
    • வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

    மதுரை:

    மதுரை சோலையழகு புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது உணவில் பாதி உடைந்த ஒரு பிளேடு துண்டு ஒன்று இருந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்த தோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.

    மேலும் விசாரணை நடத்தியதில் பணியாளர்களுக்கு மருத்துவசான்று பெறாமல், தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

    மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவில் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை.
    • தென்காசி மாவட்டத்திலும் பொது மக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நெல்லை-ராஜபாளையம் சாலையில் ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். நேற்று சங்கரன்கோவிலை சேர்ந்த ஒருவர் அங்கு சிக்கன் வாங்கி சென்றுள்ளார். பின்னர் அதனை உண்ணும் போது சிக்கன் கிரேவி உள்ளே பல்லி கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சங்கரன்கோவில் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை. உணவு பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொண்டால் மாவட்டம் முழுவதும் நான் சோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் தனக்கு நேரமில்லை என கூறுகிறார். எனவே சங்கரன்கோவில் நகருக்கு என தனி உணவு பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்.

    மேலும் பிரபல உணவங்களுக்கு அதிகாரி செல்லும் தகவல் முன்கூட்டியே உணவகத்திற்கு தெரிந்து விடுவதால் எந்தவித சோதனையிலும் அவர்கள் பிடிபடுவதில்லை. தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தரமற்ற, கலப்பட உணவு பற்றிய புகார்களுக்கு புகார் செய்ய புதிய இணையதளம் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோன்று தென்காசி மாவட்டத்திலும் பொது மக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
    • உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வாழை இலைகளின் பார்சல் செய்து கொடுத்த பல ஓட்டல்களில் தற்போது பிளாஸ்டிக் பாக்ஸ்களில் உணவுப்பொருட்களை அடைத்து விற்பனை செய்கின்றனர்.

    இதேபோல் சாம்பார் உள்ளிட்ட குழம்பு மற்றும் டீ, காபி ஆகியவையும் பிளாஸ்டிக் கவர்களில் தான் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் மனிதர்க ளுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆண்டுதோறும் விழிப்புணர்வு பிரசாரங் களை மேற்கொள்ளும் நிலையில் எங்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    பல ஓட்டல்களில் விலை பட்டியல் வைக்கப்படா ததால், அவைகளை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் பல ஓட்டல்களில் நல்ல குடிநீரும் கொடுப்ப தில்லை. கேன் தண்ணீர் வழங்காமல் ஆர்.ஓ. வாட்டர் என்று எதையோ கொடுக்கின்றனர். பாட்டில் தண்ணீருக்கும் விலை வைத்து தனியாக பணம் வாங்கிக் கொள்கின்றனர்.

    எனவே ஓட்டலில் சாப்பிடும் மக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்குவதில்லை. அவைகளை கவனிக்க உணவு பாதுகாப்பு அதிகாரி கள் இருந்த போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டது,
    • பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கே.கே.நகர் 3-வது கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலவைரவன் (40). ஓட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் அறிமுகமான கார்த்திகை ராஜன், கீதா, சாந்தி, ராஜசேகரன் ஆகிய 4 பேரும், தாங்கள் பழைய இரும்பு வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.

    இதை நம்பிய பாலவைரவன் ரூ.15 லட்சம் முதலீடு செய்தார். அதன்பிறகு லாபத்தில் பங்கு தரவில்லை, முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்கள் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவுநீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோடையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது.
    • பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம் மனு கொடுத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம்அருகே மாதப்பூரில் கோவை- திருச்சி தேசிய நெடு ஞ்சாலை, சிங்கனூர் பிரிவு அருகே தனியார் ஓட்டல் ஒன்றுசெயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோ டையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அருகில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் கழிவு நீரை ஓடையில் விடும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம்மனு கொடுத்தனர்.அந்த மனுவில்அவர்கள் கூறியிருப்பதாவது:- ஓட்டலில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு குழாய்அமைத்து நீரோடையில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இந்தகழிவுநீரானது நீரோடையில் கட்டப்ப ட்டுள்ள தடுப்பணைகளில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர்ம ட்டமும் பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள விவசாய நிலங்களில்உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்ஆழ்துளை குழாயில் இருந்து வரும் குடிநீரை மக்கள் குடிக்க முடியவில்லை. துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ஓட்டல் நிர்வாகம் ஒருவித ரசாயனத்தை பயன்படு த்துவதாக தெரிகிறது. இந்த ரசாயனம் கலந்த நீர் அருகில் உள்ள கிணறுகளில் கலந்து அந்த நீரை குடிக்கும் மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வளர்த்து வந்த மீன்களும் இறந்து விட்டது. ஓட்டல் நிர்வாகம் ஏற்கனவே அந்த பகுதியில் உள்ளஆழ்துளை கிணறுகளிலும் கழிவுநீரை கலந்து விடுவதாக தெரி கிறது. சுத்தகரிக்கப்படாத இந்த கழிவுநீரை அப்படியே நீரோடையில் விடுவதால் பெரும்சுற்றுச்சூழல் மாசுபாடுஏற்பட்டு வருகிறது.

    நீரோடைகளில் கழிவு நீரை கலக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தும்அதனை மதிக்காமல் செயல்படும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்ப ட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் பெற்று தர வேண்டும். இந்த சட்டவிரோத செயலை உடனடியாக தடுக்க ஒன்றிய நிர்வாகமும்,அரசு அதிகாரிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்தெரிவித்து ள்ளனர்.

    • அழுகிய உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை
    • அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த ஆற்றூர் புல்லாணி விளையை சேர்ந்தவர் ராஜேஷ், ஓட்டல் மேலாளர்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 19 வயது மகள், 14 வயது மகன் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேசுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு ராஜேசின் மனைவி சென்று விட்டார். அதன்பிறகு தாயார் தங்கத்துடன் ராஜேஷ் வசித்து வந்தார்.

    பல்வேறு ஓட்டல்களில் மேனேஜராக வேலை பார்த்து வந்த ராஜேஷ், மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்த பின்னர் சரியாக வேலைக்குச்செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமை யானார்.

    இந்த நிலையில் அவரது தாயார் தங்கத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருநந்திக்கரையில் உள்ள சகோதரி வசந்தாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இதனால் ராஜேஸ் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்து உள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், தங்கத்துக்கு தகவல் கொடுத்தார்.

    அதனையடுத்து தங்கம் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்புற அறையில் உள்ள சோபா வில் ராஜேஸ் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தி வரு கிறார். ராஜேசை கடந்த 15-ந்தேதி மாலை வீட்டில் வைத்து பார்த்ததாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சசிகுமார் கூறியுள்ளார். எனவே அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரி கிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் ஓட்டலில் ரூ.36 லட்சம் பொருட்கள் திருடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன், முகமது ஷரீப் சேட் இடையே கடை நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் சேக் முகம்மது மகன் முகமது அசாருதீன். இவர் தேவிபட்டினம் முகமது ஷரீப் சேட் என்பவருடன் இணைந்து ராமநாதபுரம் அரசு பஸ் டெப்போ எதிரே ஓட்டல் நடத்திவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன், முகமது ஷரீப் சேட் இடையே கடை நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் தேவிபட்டினம் பெரிய கடை தெருவை சேர்ந்த முகமது ஷரீப் சேட், வாணி இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அசரப் அலி, ராமநாதன், ஜகுபர் பரக்கத் ஆகியோர் கடையில் இருந்த சுமார் ரூ.36 லட்சம் மதிப்புள்ள மின்சாதனங்கள், டேபிள் சேர், குளிர்சாதன பெட்டி, சமையல் பாத்திரங்கள், தளவாடப் பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் தனக்கு சொந்தமான பொருட்களை அபகரித்துக் கொண்டதாகவும், தனக்கு செலுத்த வேண்டிய பங்குத்தொகை ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் கூட்டுச்சதி செய்ததாகவும் ராமநாதபுரம் கோர்ட்டில் அசாருதீன் வழக்கு தாக்கல் செய்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் முகமது ஷரீப் சேட், வாணி இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அசரப் அலி, ராமநாதன், ஜகுபர் பரக்கத் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனிக்குமார் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டிலிருந்து சேலம் சாலையில் கரூரைச் சேர்ந்த பழனிக்குமார்,(வயது 49.) இவர் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். . நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டு பூட்டி இருந்து.

    இந்நிலையில், எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டுஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இது குறித்து வேப்பூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
    • 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டை பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றும் முயற்சியாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்த 01.01.2019 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது கன்னி யாகுமரி மாவட் டத்தில் நன்கு குறைந்து வருகிறது. இருப்பினும், சில உணவகங்கள், டீ கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கும் கடைகள் ஆகியவற்றில் அரசின் தடை ஆணையை மீறி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவது தெரியவருகிறது.

    அனைத்து உணவகங்கள் டீ கடைகள் , மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், பேக்கரிகள், இனிப்பு மற்றும் காரவகைகள் முதலிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ஒருமுறை பயன்ப டுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக்கூடாது என இதன்மூலம் எச்ச ரிக்கப்படுகிறது. ஆய்வின் போது, தடையை மீறி அவ்வாறு உபயோகப்படுத்துவது கண்டறியப்பட்டால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும் என்பது இதன்மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    செய்தித்தாள் முதலிய அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொருட்களை பாதுகாக்கவோ, பொட்டல மிடவோ பயன்படுத்தக்கூ டாது. சூடான வடை, சம்சா போன்ற தின்பண்டங்களை செய்திதாளில் வைத்து எண்ணெய்யை பிழிந்து சாப்பிடும் பொழுது செய்தித்தாளில் படிந்தி ருக்கும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கார்பன், காட்மியம் . தாலேட் போன்ற கடின உலோகங்களும் சேர்ந்து உண்ணும்பொழுது உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

    அவை தொடர்ச்சியாக உடலில் சேரும்பொழுது ஜீரண மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன .

    எனவே செய்தித்தாள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுப்பொ ருள்களை சேமித்து வைப்பதோ , பொட்டலமிட்டு வழங்குவதோ மற்றும் உணவு பொருள்களை உண்ண வழங்குவதோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது .

    அவ்வாறு உபயோ கப்படுத்துவது கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப் படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும்.

    டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது, அச்சிடப் பட்ட தாள்களில் வடை, சம்சா கொடுப்பது போன்றவை தொடர்பாக பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம் .

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
    • செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள வெட்டிகோணம் பகுதியை சேர்ந்தவர் சாலினி. இவருக்கும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் அய்யப்பன், கடந்த 15-ந்தேதி தனது மனைவி சாலினியுடன் வெட்டி கோணத்தில் வந்து தங்கினார். மறுநாள் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற அய்யப்பன் இரவில் வீடு திரும்பவில்லை.

    அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை தேடி வரு கின்றனர்.

    • காரைக்குடியில் காலித் பிரியாணி ஓட்டலை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • முன்னாள் அமைச்சர் தென்னவன்,நகர்மன்ற தலைவர் முத்து துரை கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    தமிழகத்தின் பிரபல ஓட்டல்களில் ஒன்றான காலித் பிரியாணி ஓட்டல் கிளை திறப்பு விழா காரைக்குடியில் நடந்தது. எஸ்.ஏ.எம். குழும சேர்மன் சித்திக் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி ஓட்டலை திறந்து வைத்தார்.

    முன்னாள் அமைச்சர் தென்னவன்,நகர்மன்ற தலைவர் முத்து துரை, துணைத்தலைவர் குணசேகரன், புதுவயல் பேரூராட்சி தலைவர் முகம்மது மீரா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

    காரைக்குடியில் முதன்முறையாக அரேபியன் மந்தி பிரியாணி விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.ஆனந்த்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சத்யா ராஜா,அரசு வழக்கறிஞர் பாலசுப்பிர மணியன்,புதுவயல் பேரூராட்சி துணை தலைவர் பகுர்தீன் அலி,நகர்மன்ற உறுப்பினர்கள் கலா காசிநாதன்,சொ.கண்ணன்,முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ்,தொழிலதிபர் ஜெரா ல்டின் தாமஸ்,புதுவயல் சித்திக்,ஆப்பிள் மொபைல் உரிமையாளர்கள் செல்வம், வெங்கட்,அனைத்து கட்சி நிர்வாகிகள்,தொழிலதிபர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.எச்.ஏ.எம் குழும மேனேஜிங் டைரக்டர் எஸ்.முகம்மது பாசில் நன்றி கூறினார்.

    ×