search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டலில் ரூ.36 லட்சம் பொருட்கள் திருடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    ஓட்டலில் ரூ.36 லட்சம் பொருட்கள் திருடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

    • ராமநாதபுரத்தில் ஓட்டலில் ரூ.36 லட்சம் பொருட்கள் திருடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன், முகமது ஷரீப் சேட் இடையே கடை நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் சேக் முகம்மது மகன் முகமது அசாருதீன். இவர் தேவிபட்டினம் முகமது ஷரீப் சேட் என்பவருடன் இணைந்து ராமநாதபுரம் அரசு பஸ் டெப்போ எதிரே ஓட்டல் நடத்திவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன், முகமது ஷரீப் சேட் இடையே கடை நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் தேவிபட்டினம் பெரிய கடை தெருவை சேர்ந்த முகமது ஷரீப் சேட், வாணி இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அசரப் அலி, ராமநாதன், ஜகுபர் பரக்கத் ஆகியோர் கடையில் இருந்த சுமார் ரூ.36 லட்சம் மதிப்புள்ள மின்சாதனங்கள், டேபிள் சேர், குளிர்சாதன பெட்டி, சமையல் பாத்திரங்கள், தளவாடப் பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் தனக்கு சொந்தமான பொருட்களை அபகரித்துக் கொண்டதாகவும், தனக்கு செலுத்த வேண்டிய பங்குத்தொகை ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் கூட்டுச்சதி செய்ததாகவும் ராமநாதபுரம் கோர்ட்டில் அசாருதீன் வழக்கு தாக்கல் செய்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் முகமது ஷரீப் சேட், வாணி இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அசரப் அலி, ராமநாதன், ஜகுபர் பரக்கத் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×