என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
- ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
- உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரை மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வாழை இலைகளின் பார்சல் செய்து கொடுத்த பல ஓட்டல்களில் தற்போது பிளாஸ்டிக் பாக்ஸ்களில் உணவுப்பொருட்களை அடைத்து விற்பனை செய்கின்றனர்.
இதேபோல் சாம்பார் உள்ளிட்ட குழம்பு மற்றும் டீ, காபி ஆகியவையும் பிளாஸ்டிக் கவர்களில் தான் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் மனிதர்க ளுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆண்டுதோறும் விழிப்புணர்வு பிரசாரங் களை மேற்கொள்ளும் நிலையில் எங்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பல ஓட்டல்களில் விலை பட்டியல் வைக்கப்படா ததால், அவைகளை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் பல ஓட்டல்களில் நல்ல குடிநீரும் கொடுப்ப தில்லை. கேன் தண்ணீர் வழங்காமல் ஆர்.ஓ. வாட்டர் என்று எதையோ கொடுக்கின்றனர். பாட்டில் தண்ணீருக்கும் விலை வைத்து தனியாக பணம் வாங்கிக் கொள்கின்றனர்.
எனவே ஓட்டலில் சாப்பிடும் மக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்குவதில்லை. அவைகளை கவனிக்க உணவு பாதுகாப்பு அதிகாரி கள் இருந்த போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்