search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burnt down"

    • முருகன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
    • தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னதாகவே வீடு முழுவதும் எரிந்து நாசமாயின.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள அக்கறைபாளையம் காந்தி நகரை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (வயது 40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சின்னசாமி படுத்து உறங்கினார். நள்ளிரவு நேரத்தில் சின்னசாமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்கம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதனைப் பார்த்து கூச்சலிட்டு வீட்டில் இருந்த அனைவரையும் சின்னமணி வெளியேற்றினார். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னதாகவே வீடு முழுவதும் எரிந்து நாசமாயின. இதில் வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 22 ஆயிரம், 25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன், பீரோ, கட்டில், டிவி உள்பட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாயின. சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் எரிந்து போன வீட்டை பார்வையிட்டார். தீவிபத்து குறித்து கச்சராயபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது.

    இந்த குடியிருப்பில் 6 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழே உள்ள தளத்தில் ஸ்ரீ வள்ளிபுத்தூரை சேர்ந்த முருகன் (வயது19), வடுகப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(20), வெங்கடேஷ்(20) ஆகிய 3 வாலிபர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த குடியிருப்பில் வாலிபர்கள் வசிக்கும் தரை தளம் அருகே குடியிருப்பு வாசிகள் தங்களது மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டுகளை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.

    நேற்று இரவு வழக்கம் போல நிறுத்தி விட்டு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த தீ வாலிபர்கள் வசித்த வீட்டின் கதவின் மீது பரவி வீடு முழுவதும் புகை மூட்டமானது. இதனால் அந்த வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தீ வேகமாக பரவியதால் வாலிபர்கள் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் மூலம் ஜன்னலை உடைத்து தப்பி வெளியே வந்தனர்

    பின்னர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ராமநாதபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இருந்தபோதிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் 4 மொபட்டுகள் எரிந்து நாசமானது. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது
    • அக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம்பழைய காலனி சேர்ந்தவர் அய்யப்பன் (52)கூலி தொழிலாளி இவரது கூரை வீடு நேற்றுநள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டி நிலைய தீயணைப்புநிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள்விரைந்து சென்றுஅக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பழனிக்குமார் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டிலிருந்து சேலம் சாலையில் கரூரைச் சேர்ந்த பழனிக்குமார்,(வயது 49.) இவர் வேப்பூரில் தங்கி, சேலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிநாடு என்னும் பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். . நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டு பூட்டி இருந்து.

    இந்நிலையில், எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டுஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இது குறித்து வேப்பூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×