search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல்"

    • இதனால் பன்றிகளின் நடமாட்டம் அதிகம் ஆகி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

     விழுப்புரம்:

    விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் ரோட்டில் உள்ள ஸ்ரீராம் நகர், மஞ்சு நகர் போன்ற பகுதிகளில் பன்றிகளுக்கான உணவுகளை ஓட்டலில் இருந்து கொண்டு வந்து தினந்தோறும் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் பன்றிகளின் நடமாட்டம் அதிகம் ஆகி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார்.
    • பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). இவர் தனது காரில் மனைவி சூரியசந்திரகலா மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு சென்றார். மீண்டும் திருப்பதியில் இருந்து திண்டிவனம் வந்தார். திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார். காரிலேயே குழந்தையின் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு ஓட்டலுக்குள் குடும்பத்துடன் சாப்பிட சென்றார்.

    சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து பார்த்த போது காரின் வலதுபுறம், பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் உள்ளே பார்த்த போது ஒரு பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை காரின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து காரின் கண்ணாடியை உடைத்து நகை, பணம், செல்போனை திருடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ராஜேந்திரன் வயது (64). ஓட்டல் உரிமையாளர் இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ரோட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார்.
    • அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோமுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (64).

    ஓட்டல் உரிமையாளர்

    இவர் அயோத்தியாப் பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஆத்தூர் மெயின் ேராட்டில் ஓட்டல்நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் வழக்கம் போல தனது ஓட்டலில் இருந்து எதிரே உள்ள டீக்கடைக்கு டீ வாங்க ஆத்தூர் மெயின்ரோட்டை வடக்கில் இருந்து தெற்காக கடக்க முயன்றார்.

    அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் தலை உள்பட பல இடங்களில் படுகாயம் அடைந்தார்.

    பரிதாப சாவு

    அவரை மீட்டு அந்த பகுதியினர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்ககாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஆகியோர் உத்திரவின் கீழ் மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்துதலின் படி பவானி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை பவானி நகர அலுவலர் சதீஷ்குமார், வட்டார அலுவலர் லட்சுமி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    15-க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முறை யான லேபிள் விபரம் இல்லாத பிரட் வகைகள் சுமார் 3.5 கிலோ கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

    முட்டை பப்ஸ் வகைகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டி கவர்கள் 1.2 கிலோ கைப்பற்றப்பட்டது.

    இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க செயற்கை நிறம் பயன்படுத்தக்கூடாது எனவும், உரிமம் பெறாத கடைகள் உடனடியாக உரிமம் பெற அறிவுறுத்தப் பட்டு 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு தரம் குறைவு பற்றிய புகாருக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஏ.டி.எம். மையத்தில் எந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
    • அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    செங்குன்றம்:

    சென்னை புழல் பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓட்டலும், அதன் அருகே தனியார் ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகின்றன. நேற்று இரவு ஓட்டலில் வியாபாரத்தை முடித்துவிட்டு அதன் உரிமையாளர் பூட்டிவிட்டு சென்றனர்.

    இன்று அதிகாலை தனியார் ஏ.டி.எம். மையமும், ஓட்டலும் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் தனியார் ஏ.டி.எம். எந்திரம், ஓட்டலில் இருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. ஏ.டி.எம். மையத்தில் எந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே எந்திரத்தில் இருந்து தீயில் கருகிய பணத்தின் மதிப்பு தெரியவரும்.

    இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனியார் ஏ.டி.எம். மையத்தில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி ஏ.டி.எம். மையத்தில் பற்றிய தீ அருகில் இருந்த ஓட்டலுக்கு பரவியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    • ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
    • தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது50). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஓட்டலில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு தரும்படி அடிக்கடி ஓட்டல் நடத்திவரும் பச்சையம்மாளிடம் கேட்டார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று மாலையும் ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.

    இதனை ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்த காஞ்சிபுரம் ரெயில்வே சாலை, சன்னதி தெருவை சேர்ந்த ராமு என்கிற ராமச்சந்திரன்(40) என்பவர் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் திருமலையை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே கொலையாளி ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
    • சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு கடந்த 19-ந்தேதி இரவு குடிபோதையில் 2 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் அசைவ உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அதில் ஒருவர் சாப்பிட்டு முடிக்கவும் கடையின் மேசை மீது தலை வைத்து அப்படியே போதையில் மயங்கிவிட்டார்.

    மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.

    அப்போது கடையில் இருந்து புறப்பட்டு செல்லுங்கள் என உரிமையாளர் கூறினார். அதற்கு காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.

    இது பற்றி அம்மாப்பேட்டை போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் ஏட்டு செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

    இந்த ரகளையை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வைரலாக பரவியது.

    இதனிடையே சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விசாரணை நடத்தி ஓட்டலில் ரகளை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சிவ சக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    தொடர்ந்து துறை ரீதியான விசாரணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லப் பாண்டியன் நடத்தினார். இந்த விசாரணை அறிக்கையை அவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்பித்தார். அந்த அறிக்கையை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவ டிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிரபல உணவகத்தில் விற்பனை ஆகாத உணவை பதப்படுத்தி மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது விற்பனை ஆகாத உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்ய வைத்திருந்ததும், மேலும் ஓட்டலை உரிய பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு நாள் உணவு விற்பனைக்கு தடை விதித்து உணவகத்தை தூய்மைப்படுத்திய பின்னர் மீண்டும் விற்பனையை தொடங்க உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதேபோல் சுகாதார அதிகாரிகள், உரிய அனுமதியின்றியும் சுகாதார மில்லாமலும் செயல்படும் சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 5 வருட ஓப்பந்த அடிப்படையில் ஓட்டல் நடத்தி வருகிறார்
    • குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள செறுவாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் அன்சாத். இவர் அந்த பகுதியில் கடந்த 3 வருடங்களாக கனகராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 5 வருட ஓப்பந்த அடிப்படையில் ஓட்டல் நடத்தி வருகிறார். தகராறு

    இந்த நிலையில் 3 வருடங்கள் முடிந்ததும் கனகராஜ், கூடுதல் பணம் வேண்டும் இல்லை யென்றால் ஓட்டலை காலி செய்ய வேண்டும் என்று அன்சாத்திடம் கூறினாராம். இது தொடர்பாக அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டு களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. மேலும் குழித்துறை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அன்சாத் 5 வருடம் கடை நடத்தலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்சாத் ஓட்டலை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒரு கும்பல் ஓட்டலுக்குள் திடீரென புகுந்துள்ளது. அவர்கள் அங்கிருந்த பொருட்களை சூறை யாடியதோடு, உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதலும் நடத்தியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் திரண்டதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த தாக்குதலில் ஓட்டல் ஊழியர் அப்துல் சலாம் படுகாயமடைந்தார். அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டது யார்? தாக்கு தலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
    • அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருணைபள்ளி உருளை தொட்டி பகுதியைச் சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இன்று காலை காய்கறி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதனை பார்த்த உடன் வேலை பார்த்தவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். பின்னர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அரசு ஆஸ்பத்தி ரியில் பரிசோதித்த டாக்டர் கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் சேலம் விரைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் ஓட்டல் ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து சேலம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பராமரிப்பு பணி நடப்பதால் 4 நாட்களாக ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அடுத்துள்ள ஸ்ரீரெங்கராஜ புரம் கருப்பூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 47). இவர் பந்தநல்லூர் மெயின் சாலை அரச மரத்தடி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஓட்டலில் தொழிலா ளியாக வேலை செய்து வந்தார். பராமரிப்பு பணி நடப்பதால் 4 நாட்களாக ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜாகிர் உசேன் சம்பவதன்று ஓட்டலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு சுவிட்ச் போர்டு பிளக்கில் இருந்த ஒயரை எடுத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஜாகீர்உசேன் உடல்நிலை பாதிக்கப்ப ட்டார். அவரை குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள், ஜாகீர் உசேன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைய டுத்து ஜாகிர் உசேனின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.
    • கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் நிலைய வளாகத்தில் ஓட்டல்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி. இவர் வழக்கம் போல் உணவகத்தில் இருந்தபோது குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென ஒரு வாலிபர் ஆம்லேட் கேட்டால் உடனே தரமுடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் சொல்லவே இல்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் 3 பேரும் கடையில் இருந்த பொருட்களை வீசி எறிந்தும், சுப்ரமணியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபடியே அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கினர். இதைப்பார்த்ததும் சுப்ரமணியின் மகன் தினேஷ் தடுக்க வந்தார். அவரையும் இந்த கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுப்ரமணியின் மனைவி லட்சுமி, மகன் தினேஷ் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    இதில் தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட அசோக், நவீன், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் ஓட்டலில் ஆம்லேட் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×