search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hotel worker dies"

    • வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
    • அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருணைபள்ளி உருளை தொட்டி பகுதியைச் சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இன்று காலை காய்கறி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதனை பார்த்த உடன் வேலை பார்த்தவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். பின்னர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அரசு ஆஸ்பத்தி ரியில் பரிசோதித்த டாக்டர் கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் சேலம் விரைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் ஓட்டல் ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து சேலம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×