search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை வாலிபர்கள்"

    • மதுபோதையில் வாலிபர்கள் இருந்ததால் உதவி போலீஸ்சூப்பிரண்டுடன் வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
    • போதை வாலிபர்கள் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    திருவள்ளூர்:

    மதுபோதையில் போதை ஆசாமிகள் செய்யும் ரகளை ஒவ்வொரு ரகமாக இருக்கும். சில நேரங்களில் யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் வசமாக சிக்கிக்கொண்டு வாங்கி கட்டி செல்வார்கள்.

    இதேபோல் திருவள்ளூர் அருகே போதை வாலிபர்கள் ரோந்து சென்ற உதவி போலீஸ்சூப்பிரண்டிடம் அவரது வாகனத்தில் லிப்ட் கேட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

    திருவள்ளூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் விவேகானந்த சுக்லா. இவர் தனது வாகனத்தில் திருப்பாச்சூர் அருேக ரோந்து பணியில் இருந்தார்.

    அப்போது சாலையோரத்தில் மதுபோதையில் இருந்த 3 வாலிபர்கள் திடீரென உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்த வாகனத்தை வழிமறித்தனர். பின்னர் நாங்களும் இந்த வாகனத்தில் வருவோம் லிப்ட் வேண்டும் என்று கேட்டனர்.

    மதுபோதையில் வாலிபர்கள் இருந்ததால் உதவி போலீஸ்சூப்பிரண்டுடன் வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர்கள், போலீசார் உங்கள் நண்பன் என்று சொல்கிறீர்கள்... லிப்ட் கொடுக்க மாட்டீர்களா... என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டு வாகனத்தில் செல்ல அடம் பிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து போதை வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் பிறையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. போதை தெளிந்ததும் அவர்களிடம் போலீசார் தங்களது பாணியில் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.
    • கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் நிலைய வளாகத்தில் ஓட்டல்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி. இவர் வழக்கம் போல் உணவகத்தில் இருந்தபோது குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென ஒரு வாலிபர் ஆம்லேட் கேட்டால் உடனே தரமுடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் சொல்லவே இல்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் 3 பேரும் கடையில் இருந்த பொருட்களை வீசி எறிந்தும், சுப்ரமணியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபடியே அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கினர். இதைப்பார்த்ததும் சுப்ரமணியின் மகன் தினேஷ் தடுக்க வந்தார். அவரையும் இந்த கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுப்ரமணியின் மனைவி லட்சுமி, மகன் தினேஷ் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    இதில் தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட அசோக், நவீன், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் ஓட்டலில் ஆம்லேட் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • திண்டுக்கல்லில் டீக்கடை ஊழியரை மிரட்டி பணம் பறித்த போதை வாலிபர்கள் நாளிதழ் வினியோகிப்பாளருக்கு அரிவாள் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • டீக்கடை ஊழியர், நாளிதழ் வினியோகிப்பாளருக்கு கொலை மிரட்டல்

    திண்டுக்கல் :

    திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள டீக்கடையில் இன்று காலை குடிபோதையில் 2 வாலிபர்கள் வந்து சிகரெட் கேட்டுள்ளனர். அதனை வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றதால் ஊழியர் கேட்டபோது எங்களிடமே பணம் கேட்கிறாயா என அவர்களை மிரட்டி கல்லாவில் இருந்த ரூ.10ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

    அதனைதொடர்ந்து ஆர்.எம்.காலனி 12-வது கிராஸ் பகுதியில் அபிராமி சூப்பர் மார்க்கெட் பின்புறம் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனிக்குமார்(65) என்பவர் நாளிதழ் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரை வழிமறித்த அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. பணம் இல்லை என்று கூறவே அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த பழனிக்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நகர் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பணம் பறிப்பு மற்றும் அரிவாள் வெட்டில் ஈடுபட்டது மருதாணிகுளத்தை சேர்ந்த வேல்முருகன்(30), மொட்டணம்பட்டியை சேர்ந்த கோகுல்ராஜ்(23) என தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவந்த போதிலும் பல்வேறு இடங்களில் மறைமுகமாக கஞ்சா விற்கப்படுகிறது. குறிப்பாக ஆர்.எம்.காலனி மயானம், வேடபட்டி, ஒத்தக்கண்பாலம் போன்ற இடங்களில் எந்தநேரம் சென்றாலும் கஞ்சா கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதனால் கஞ்சா போதையில் சுற்றும் நபர்கள் தங்களிடம் பணம் இல்லாத சமயத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, அவ்வப்போது நடந்து வருகிறது.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனிசாலையில் உள்ள பிரபல ஷோரூமில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நடைபெற்றது. தற்போது அதே இடத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அதிகாலையில் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×