search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் ஆய்வு"

    • ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளதால் நடவடிக்கை
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவு

    போளூர்:

    போளூரில் வருகிற 19-ந் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேரணி நடைபெறும் தெருக்களை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீரென்று ஆய்வு செய்தார்.

    மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் தலைமையில் தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு நகரப்பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    கிருஷ்ணகிரி, விருநகர் மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தை தொடர்ந்து, வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் இதர வெடி மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்திடவும், வெடி மருந்து உரிமம் பெற்ற இடங்களில் முறையான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்திடவும், மாநில, மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இக்குழுக்களானது தீ தடுப்பு மற்றும் தொழில் பாதுகாப்பினை உறுதி செய்யும் நடவடிக்கைகளை கண்காணிக்கும். மேற்படி அரசாணையின்படி ஈரோடு மாவட்டதில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வெடி மருந்து உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் உரிமதாரர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்று வதை உறுதி செய்திடவும், வெடி மருந்து உரிமம் பெற்ற இடங்களில் முறை யான பாதுகாப்பு அம்ச ங்களை உறுதிசெய்தி டவும், வருவாய் துறை, காவல்து றை, தீயணைப்பு துறை மற்றும் தொழிற்பாது காப்புதுறை அலுவலர்களை உள்ள டக்கிய தணிக்கை குழு வருவாய் கோட்டா ட்சியரின் மேற்பா ர்வை யின்கீழ் தாசில்தார் தலை மையில் 10 வட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தணிக்கை குழுவா னது அந்தந்த வட்டங்களில் உள்ள வாணம் மத்தாப்பு தயாரிப்பு நிறுவனங்கள், நிரந்தரமாக, தற்காலிக பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றை தணிக்கை செய்யும்.

    நேற்று கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டஅலுவலர் தலைமையிலான குழுவினர் கோபிசெட்டிபாளையம் கோட்டத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் நகரப்பகுதி, உக்கரம், மற்றும் கோபி செட்டிபாளையம் நகர ப்பகுதிகளிலும், ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான குழுவினர் ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட வீரப்பன்சத்திரம், பளையபாளையம், ஈரோடு நகரப்பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அரசு விதியின்படி செயல்படாத கடைகளின் உரிமையாளர்கள், உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் உரிமத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ள அளவினைவிட அதிகமாக பட்டாசு இருப்பு வைத்து ள்ளவர்கள் மீதுவெடி பொருள் சட்டம், 1884 மற்று ம் வெடிபொருள் விதிகள், 2008-ன்படி கடும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.

    • பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஆகியோர் உத்திரவின் கீழ் மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்துதலின் படி பவானி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை பவானி நகர அலுவலர் சதீஷ்குமார், வட்டார அலுவலர் லட்சுமி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    15-க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முறை யான லேபிள் விபரம் இல்லாத பிரட் வகைகள் சுமார் 3.5 கிலோ கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

    முட்டை பப்ஸ் வகைகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டி கவர்கள் 1.2 கிலோ கைப்பற்றப்பட்டது.

    இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க செயற்கை நிறம் பயன்படுத்தக்கூடாது எனவும், உரிமம் பெறாத கடைகள் உடனடியாக உரிமம் பெற அறிவுறுத்தப் பட்டு 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு தரம் குறைவு பற்றிய புகாருக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2 பேக்கரி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி கடைகள், அசைவ உணவகங்கள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்த 2 பேக்கரி கடைகளுக்கு தலா 1000 வீதம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    பிறந்தநாள் கேக் தரம் குறைவு மற்றும் இனிப்பு, காரவகைகளில் தயாரிப்பு தேதி இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் பேக்கரி கடைகளில் உள்ள பிறந்தநாள் கேக்கில் அளவுக்கு அதிகமான கலர் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை பரிசோதனை செய்வதற்காகவும், மிச்சர் மற்றும் கார கடலையில் செயற்கை கலர் சேர்க்கப்ப ட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும் உணவு மாதிரி சேகரிக்கப் பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய பழமுதிர் நிலையத்திற்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதேபோல் அசைவ உணவகங்களில் சில்லி சிக்கன், காலிபிளவர் சில்லி போன்றவற்றிற்கு செயற்கை வண்ணம் பயன்படுத்தக் கூடாது.

    சூடான உணவு பொருள்களை தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் கவர், கேரி பேக் போன்றவற்றில் பார்சல் செய்து கொடுக்க கூடாது.

    துரித உணவு உணவு கடைகள், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் விற்பனை செய்யும் எண்ணெய் பலகாரங்கள் ஆன பஜ்ஜி, போண்டா மற்றும் மீன் சில்லி, சிக்கன் சில்லி வகைகளை நேரடியாக அச்சிட்ட பேப்பரில் வைத்து உண்பதற்கும், பார்சல் செய்தும் கொடுக்க கூடாது எனவும் கடைகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அவ்வாறு பார்சல் செய்து கொடுக்கும் கடை களுக்கு அபராதம் விதிக்க ப்படும் என அறிவுறுத்த ப்பட்டது.

    உணவுப்பொருள் குறைகள் சம்பந்தமான புகாரை 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • ஓசூர் வார்டு பகுதிகளில் மேயர் சத்யா ஆய்வு மேற்கொண்டார்
    • ரூ. 3.86 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுகிறது

    ஓசூர் மாநகராட்சி 31-வது வார்டிற்குட்பட்ட இமாம் பாடா, தாசரப்பேட்டை, ஏழு வீதி தெரு, ராஜு வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 3.86 லட்சம் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? எனவும் அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் பொதுமக்களின், குறைகளையும் கேட்ட றிந்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
    • குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் திருவள்ளூரில் 63 இடங்களிலும், திருத்தணி 98, ஊத்துக்கோட்டை 204, கும்மிடிப்பூண்டி 67, பொன்னேரி 20 உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 452 சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தெரிவித்து உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருத்தணி, வெங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் திருவள்ளூர் - ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது விநாயகர் சிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகின்றனவா என ஆய்வு செய்தனர்.

    • சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    தொடர்ந்து அவர் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரம், பயன்படுத்தப்படும் காய்கறி அளவு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த உதவி இயக்குனர் அங்கிருந்த சமையல் பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தார். குழந்தைகளுக்காக இந்த உணவினை மிகுந்த கவனத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்திட வேண்டுமென உத்தரவிட்டார்.

    இந்த திடீர் ஆய்வின்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் முரளி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்த ப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.
    • குறிப்பாக தருமபுரி ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்த ப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

    தருமபுரி,

    தென் மேற்கு ரெயில்வே து றை சார்பில் தருமபுரி, சிவாடி, தொப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நிலை யங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் நவீன வசதிகள் குறித்து பெங்க ளுரு தென் மேற்கு ரெயில்வே கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அந்தந்த ரெயில் நிலைய ங்களில் உள்ள நடை மேடைகள், பயணிகள் அறை, டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

    அப்போது ரெயில் நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    குறிப்பாக தருமபுரி ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்த ப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

    தருமபுரி ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதி க்காக மேற்கொள்ள ப்பட பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது ரெயில்வே துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்கள் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை குறித்தும் ஆய்வு செய்தார்.
    • புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை தினசரி மாணவிகளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு தொட ர்ந்து புகார்கள் வந்தன.

    இதன் அடிப்படையில் மொரப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மகளிர் விடுதிக்கு நேற்று திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மாவட்ட கலகெ்டர் சாந்தி விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா எனவும், விடுதியில் உள்ள உணவு இருப்பு வைப்பு, அறையில் இருப்பில் உள்ள பொருட்கள் குறித்தும் அவற்றின் கணக்கு வழக்குகள் குறித்தும், மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் செய்திதாள்கள் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை குறித்தும் ஆய்வு செய்தார்.

    அதன்பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் அவற்றின் விவரங்களை கேட்டறிந்தார்.

    புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை தினசரி மாணவிகளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகிலா, ரங்கநாதன், மற்றும் உதவி பொறியாளர் அன்பழகன், விடுதி காப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
    • கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜ்குமார் ஆலோசனையின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள்பிரபாகரன், இனிய குமார் சதீஷ் ஆகியோர் வாடிப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டல், டீக்கடை, உணவு விடுதிகள், கறிக்கடை, கோழிக்கடை, பலசரக்கு கடைகளில் பாலிதீன் பயன்பாடு பற்றியும், பெட்டிக் கடைகளில் தடை செய்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் உள்ளதா? என்றும் கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.

    • மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • வடிகாலில் தண்ணீர் தடையின்றி செல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் இன்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார்.

    வடிகாலில் தண்ணீர் தடையின்றி செல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கடைகளை தாண்டி மேற்கூரை போடக்கூடாது.

    கடைகளை ஆக்கிரமித்து அமைக்க கூடாது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விதி மீறல்களில் ஈடுபட கூடாது.

    மேலும் மாட்டு மேஸ்திரி சந்தில் இன்று முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நடைபாதைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும் மின்விளக்கு பொருத்த உத்தரவிட்டார்.முன்னதாக நேற்று மாலை தெற்கலங்கம் பகுதியில் தனியார் நகைக்கடை சார்பில் வாகனத்தில் விளம்பர ஸ்டிக்கர் பதாகை அமைத்து ஆடியோ மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.

    ஆனால் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் வாகனத்தில் ஸ்டிக்கர் பதாகை அமைத்து விளம்பரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கு ரூ .25 ஆயிரத்தை அபராதமாக விதித்து ஆணையர் சரவணகுமார் உத்தர விட்டார்.

    இந்த ஆய்வில் மாநகராட்சி இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் 38 பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • கள்ள சந்தையில் மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில் அரூர் கோட்டப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், பள்ளிப்பட்டி, கோபிநாதம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவல் துறை தலைவர் கே.ஜோஷி நிர்மல் குமார் , ஆய்வு மேற்கொண்டார்.

    போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் 38 பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், அரூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர பாபுவிடம் கேட்டறிந்தார்.

    அதன்பிறகு அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் வாதி, பிரதிவாதிகளிடம் புகார்களை பெற்றுக்கொண்டு சரியான முறையில் அவர்களுக்கு உரிய மரியாதைகள் கொடுத்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உடன் இருந்தனர்.

    ×