search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் மாயம்"

    • கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.
    • கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகு தியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுபற்றி அவரது மனைவி விமலா தார மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
    • செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள வெட்டிகோணம் பகுதியை சேர்ந்தவர் சாலினி. இவருக்கும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் அய்யப்பன், கடந்த 15-ந்தேதி தனது மனைவி சாலினியுடன் வெட்டி கோணத்தில் வந்து தங்கினார். மறுநாள் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற அய்யப்பன் இரவில் வீடு திரும்பவில்லை.

    அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை தேடி வரு கின்றனர்.

    ×