search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband missing"

    • கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.
    • கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகு தியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுபற்றி அவரது மனைவி விமலா தார மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு அருகே மாயமான கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் மனைவி புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு, நசியனூர் அருகே உள்ள செம்மாம் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது54). கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயர் செல்வி(51).

    இவர்களுக்கு விஜயா என்ற ஒரு மகள் உள்ளார். திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி கணவரும், மனைவியும் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். பிறகு மனைவியிடம் ‘நீ வீட்டுக்கு போ.நான் எனது அம்மா வீட்டுக்கு போய் வருகிறேன்’ என்று கூறி விட்டு ஆறுமுகம் போனார்.

    அன்று சைக்கிளில் போனவர்தான் இன்று வரை வரவில்லை. அவர் எங்கு சென்றார்?. என்ன ஆனார்?. இப்போது எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை.

    கடந்த 11 ஆண்டுகளாக மாயமான கணவரை பல இடங்களில் தேடி..தேடி பிறகு அப்படியே மறந்து விட்டார் செல்வி.

    இந்த நிலையில் திடீரென கணவர் நினைப்பு வந்த மனைவி செல்வி. ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீசில் “என் கணவரை காணவில்லை. கண்டுபிடித்து கொடுங்க” என்று கூறினார்.

    போலீசாரும் புகார் எழுதி கொடுங்கம்மா... தேடுகிறோம்...என்று கூறினர்.

    அதன்படி செல்வி எழுதி கொண்டு வந்த புகார் மனுவை போலீசாரிடம் கொடுக்க அதை படித்த போலீசாருக்கு தூக்கு வாரி போட்டது. 11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து கொடுங்கள்...என்று மனுவில் எழுதி இருப்பதை பார்த்து திடுக்கிட்டனர்.

    என்னம்மா உன் கணவர் காணாமல் போய் 11 ஆண்டுக்கு பிறகு இப்போது வந்து புகார் கொடுக்கிறியே..இது நாள் வரை ஏன் புகார் கொடுக்க வரவில்லை? என கேட்டனர்.

    அதற்கு செல்வி“ நான் உலக நடப்பு தெரியாதவள். வெளி உலகம் பத்தி எனக்கு அவ்வளவாக தெரியாது. யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். காணாமல் போன என் கணவர் வருவார்...வருவார்..என இத்தனை வரு‌ஷமா காத்திருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. எனக்கு சிலர் போலீசில் போய் புகார் கொடு என்று கூறினார்கள். அதனால் தான் இப்போது வந்து புகார் கொடுக்கிறேன் என கணவரை கண்டுபிடித்து தாருங்கள்” என்று கூறினார்.

    புகாரை பெற்ற போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். #tamilnews
    தேனி அருகே மனைவி, 2 குழந்தைகளை தவிக்க விட்டு மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள அரண்மனைபுதூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது34). இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் செல்வதாக கூறிசென்ற பொன்னுத்துரை மாயமானார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அபிராமி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார்.

    எங்கு தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பொன்னுத்துரையை தேடி வருகின்றனர்.

    மதுரை அருகே பணிக்கு சென்ற கணவர் திடீர் மாயமானது குறித்து போலீசில் மனைவி புகார் அளித்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லாணை பகுதியைச் சேர்ந்தவர் பட்டாபிராமன் (வயது32). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பணிக்கு சென்ற பட்டாபிராமன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சூரியகலா சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு சென்று விசாரித்தார்.

    அப்போது அங்கு பணிபுரிந்துவரும் பெண் ஊழியர் செல்வி என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் பட்டாபிராமன் மாயமானதாக தெரியவந்தது.

    இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீசில் சூரியகலா புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×