search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணிக்கு சென்ற கணவர் திடீர் மாயம்: போலீசில் மனைவி புகார்
    X

    பணிக்கு சென்ற கணவர் திடீர் மாயம்: போலீசில் மனைவி புகார்

    மதுரை அருகே பணிக்கு சென்ற கணவர் திடீர் மாயமானது குறித்து போலீசில் மனைவி புகார் அளித்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லாணை பகுதியைச் சேர்ந்தவர் பட்டாபிராமன் (வயது32). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பணிக்கு சென்ற பட்டாபிராமன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சூரியகலா சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு சென்று விசாரித்தார்.

    அப்போது அங்கு பணிபுரிந்துவரும் பெண் ஊழியர் செல்வி என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் பட்டாபிராமன் மாயமானதாக தெரியவந்தது.

    இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீசில் சூரியகலா புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×