search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்காடு"

    • சேலத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
    • இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

    மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேலம் மாவட்டத்தை குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
    • ஏற்காட்டில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ஆரஞ்சு பழ தோட்டம், காபி தோட்டம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையின் அழகை கண்டு ரசித்தனர். இதில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே புகைப்படம் எடுத்தும், குடும்பத்துடன் போழுது போக்கியும் மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. பனிப்பொழிவும் நிலவியபடி உள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை தினமும் அதிகரித்தபடி உள்ளதால் ஏற்காட்டில் விளையும் காபி, வாசனை திரவியங்கள், ஏற்காடு மலையில் விளையும் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள், வீட்டில் வைத்து வளர்க்கக்கூடிய அழகு செடிகள், பழ வகை செடிகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை களை கட்டுகின்றன. இவற்றை நர்சரி கார்டன், கடைகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.
    • தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து வருகிற 9-ம் தேதி வரையும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் தேதி வரையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

    மேலும் நாளை (4-ந்தேதி) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, நாளை மறுநாள் 5-ந்தேதி விஜயதசமி, பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. ஆகவே நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.

    இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ஏற்காட்டுக்கு கார், சுற்றுலா வாகனங்கள், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இன்று காலை கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். லேசான சாரல் மழையும், பனியும், குளுமையான சீதோஷ்ண நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையை கண்டு ரசித்தனர்.

    ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் சூழல் ஏற்பட்டது.

    • ஏற்காடு சோதனைச்சாவடி வன ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • ஏற்காடு அடிவார பகுதியில் பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் தனியார் எஸ்டேட்களில் இருந்து பல வகை மரங்களை வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தது. மலைப் பாதை வழியே மர லோடு ஏற்றி வரும் லாரிகளை சோதனையிட அடிவாரப்பகுதியில் வனத்து றையின் சோதனைச்சாவடி இருக்கிறது.

    இங்கு பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக கூறப்படுகிறது.

    இது பற்றி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் ஏற்காடு அடிவார சோதனைசாவடியில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் புகழேந்தியை அஸ்தம்பட்டி சந்தன மர குடோனுக்கு அதிரடியாக இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். அேதபோல் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் அசோகனை ஏற்காடு சோதனைசாவடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    • ஏற்காடு பகுதியில் உள்ள அரங்கம் பகுதியில் சிலர் மரம் வெட்டியதாக கூறி கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சோதனை சாவடியை மூடி மலை கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • மரம் வெட்டியவர்கள் 5 பேர் மீது ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஏற்காடு:

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்காடு ஒன்றியம், அரங்கம் மலைகிராமத்தில் இருந்து குறுக்கு வழியாக குப்பனூர் செல்வதற்காக, கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 250 சில்வர்ஓக் மரங்கள் வெட்டி உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் வனத்துறை அலுவலர்கள் தொடர்பு இருந்ததை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் பணியில் இருந்த கார்ட் குமார் என்பவரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் பொதுமக்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் தலை மறைவாக இருந்த அரங்கம் கிராமத்தை சேர்ந்த புஷ்ப நாதன், மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கைது நடவ டிக்கையை கண்டித்து மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குப்பனூர் சோதனை சாவடியை மூடி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • ஒரு நாள் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.
    • அதன் பின்பு தற்காலிகமாக சாலை சீரமைப்பு செய்யப்பட்டு மலை பாதையில் போக்கு வரத்து தொடங்கப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலைப் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்றப்பட்டு ஒரு நாள் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்பு தற்காலிகமாக சாலை சீரமைப்பு செய்யப்பட்டு மலை பாதையில் போக்கு வரத்து தொடங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகளை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாதிப்படைந்த தடுப்புச்சுவர்களுக்கு திட்ட மதிப்பீடு செய்யவும், மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய சாலை பராமரிப்பு குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் துரை, ஏற்காடு உதவிக் கோட்டப் பொறியாளர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் ராஜேஷ்குமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் செல்வராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஏற்காட்டில் கன மழை-கடும் குளிரால் மக்கள் தவித்தனர்.
    • ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது . இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் மழையை தொடர்ந்து ஏற்காட்டில் இரவில் கடும் குளிர் நிலவியது. நேற்றிரவு ஏற்காடு முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் பொது மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 21.8 மி.மீ. மழை பெய்தது. மேட்டூர் 3.2, காடையாம்பட்டி 3, ஆனைமடுவு 2, கரியகோவில் 2, சங்ககிரி 1.1, சேலம் 0.9 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 34 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    சேலம் மத்திய ஜெயில் சார்பாக ஏற்காடு சாலையில் பெட்ரோல் பங்கை கைதிகள் நடத்துகின்றனர்.

    சேலம்:

    சேலம் மத்திய ெஜயில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தண்டனை கைதிகள் உள்பட 812 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஜெயில் வளாகத்தில் கட்டில், சேர் தயாரிக்கும் பட்டறை, பேக்கரி கடை செயல்படுகிறது. பெருமாள் மலை அடிவாரம் அருகே விவசாய பணிகளையும் கைதிகள் மேற்கொள்கின்றனர்.

    பெட்ரோல் பங்க் கைதிகளுக்கு மேலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ஏற்காடு பிரதான சாலை நீதிமன்றம் எதிரே ஜெயில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இப் பணியை 100 நாளில் முடித்து, வருகிற நவம்பர் மாதம் முதல் பங்க் செயல்படும். இதனால் ஜெயில் கைதிகள் 30 பேருக்கு வேலை கிடைக்கும் என ஜெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கூறுகையில், சென்னை, வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டையில் கைதிகளால் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. 2-ம் கட்டமாக சேலம் உள்பட சில இடங்களில் பங்க் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் விரைவில் முடிந்து விடும் என்றார்.

    சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஆத்தூர் பகுதுகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. மழை, இடிமின்னல்

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஏற்காட்டில் பெய்த மழையால் குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆத்தூர் 19, கெங்கவல்லி 14, பெத்தநாயக்கன்பாளையம் 11, சேலம் 10.6, தம்மம்பட்டி 7,சங்ககிரி 4, வீரகனூர், எடப்பாடி, கரியகோவில் பகுதிகளில் தலா 2, காடையாம்பட்டி, ஓமலூர், ஆனை–மடுவு ஆகிய பகுதிகளில் தலா 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 93.6 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    ×