என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏற்காடு, ஆத்தூரில் கனமழை
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் பெய்த மழையால் குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 20 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆத்தூர் 19, கெங்கவல்லி 14, பெத்தநாயக்கன்பாளையம் 11, சேலம் 10.6, தம்மம்பட்டி 7,சங்ககிரி 4, வீரகனூர், எடப்பாடி, கரியகோவில் பகுதிகளில் தலா 2, காடையாம்பட்டி, ஓமலூர், ஆனை–மடுவு ஆகிய பகுதிகளில் தலா 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 93.6 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்