search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்காடு"

    • தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

    ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    மேலும் பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஏற்காட்டில் தற்போது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்தனர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலுசிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் உள்ளிட்டவைகளும் வாங்கினார்கள். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அங்குள்ள ஓட்டல்கள், விடுதிகள், கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தப்படி உள்ளது. இதனால் பெரும்பாலான தங்கும் விடுதி அறைகள் முழுவதும் நிரம்பின. இதனால முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். அவர்கள் தங்களது கார்களை சாலையோரமாக நிறுத்தி அதில் உறங்கியதை காண முடிந்தது.

    • மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
    • சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று இரவும் ஏற்காட்டில் கனமழை கொட்டி தீர்த்து. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மழையால் ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் பல முக்கிய சாலைகள் சேறும் சகதியுதாக காட்சியளிக்கிறது.

    இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பகல் நேரங்களிலும் குளிர் தாங்கும் ஆடைகளான சுவட்டர், ஜர்கின் உள்ளிட்டவற்றை அணிந்தே வெளியே வருகின்றனர்.

    மழை காரணமாக ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் மலைப் பாதையில் ஆங்காங்கே உள்ள நீர் வீழ்ச்சிகள், கிளியூர் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    பொதுவாக வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் முகாமிட்டு பொழுதை கழித்து செல்வர். ஆனால் நேற்று மழை பொழிவு காரணமாக குறைந்தளவே சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.

    சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஏற்காட்டில் பெய்துவரும் மழை மற்றும் குடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

    • ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • ஓமலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக பெத்த நாயக்கன் பாளையம், தலைவாசல், ஆனைமடுவு, ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளர்வதுடன் நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவு, 40 அடி பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. வெள்ளியை காய்ச்சி ஊற்றுவது போல இந்த தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை இந்த அருவிகள் வெகுவாக கவர்ந்துள்ளது.

    இதனால் மலைப்பாதையில் கொட்டும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். மேலும் செல்பி எடுத்தும் உற்சாகமாக நீரில் விளையாடியும் வருகிறார்கள். இதனால் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    ஓமலூர் அருகே உள்ள சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள பனிக்கரடு பகுதியில் கிழக்கு சரபங்கா நதி உற்பத்தியாகிறது. இந்த நதி சக்கர செட்டிப்பட்டி ஊராட்சி நாலுகால்பாலம் வழியாக காமலாபுரம் ஏரியை வந்து அடைகிறது.

    இந்த நிலையில் ஓமலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் கிழக்கு சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சக்கரசெட்டிப்பட்டி வனப்பகுதியில் விவசாயிகள் ஏற்படுத்திய ஏரி நிரம்பி, தற்போது காமலாபுரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    கனமழையின் காரணமாக ஒரே நாளில் ஏரி நிரம்பி உள்ளதால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்த நாயக்கன்பாளையத்தில் 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது . தலைவாசல் 19, ஆனைமடுவு 18, ஆத்தூர் 9.4, சங்ககிரி 7.4, தம்மம்பட்டி 4, ஏற்காடு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 78.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.
    • 8 நாட்கள் நடை பெற்ற இந்த விழா நேற்று நிறைவடைந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. 8 நாட்கள் நடை பெற்ற இந்த விழா நேற்று நிறைவடைந்தது. இதை யொட்டி பிரமாண்ட வாண வேடிக்கை நடத்தப்பட்டது. நிறைவு விழாவுக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

    விழாவில் புகைப்படப்போட்டி, இளை ஞர்கள் மற்றும் பெண்க ளுக்கான கைப்பந்து போட்டி, கால்பந்து போட்டி, கபாடிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கொழு கொழு குழந்தைப்போட்டி கள், சமையல் போட்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும், வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், காய்கறி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகை யில், 46-வது ஏற்காடு கோடை விழாவை சுமார் 1 லட்சம் சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்துள்ளனர். ஏற்காட்டை சுற்றி பார்க்க சூழலியல் சுற்றுலா பேருந்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது நாள்தோறும் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை புறப்பட்டு, ஏற்காட்டில் சேர்வராயன் மலை, ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதி களையும் பார்வையிட்டு திரும்பும் வகையில் இந்த ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஏற்காடு ஏரியில் வண்ண விளக்குகளுடன் கூடிய நீர் ஊற்று அடுத்த ஆண்டு கோடைவிழாவில் இடம் பெறும் என்றார். நிகழ்ச்சி யில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் வருவாய் கோட்டாட்சி யர் (பொ) மாறன், தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புராஜன், குணசேகரன் உட்பட சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.

    தற்போது பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏற்காட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன.

    குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

    கிட்டத்தட்ட 2 ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கையாக விடுத்தனர்.

    மேலும் இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் கோரிமேடு வழியாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையை சீரமைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3 வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 24-ந்தேதி தொடங்கின.

    இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதர இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அயோத்தி யாப்பட்டணம்-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலை வழியாக சென்றன.

    15 நாட்களுக்கும் மேலாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் . இதனிடையே சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

    இந்நிலையில் சாலை பணிகள் ஓரளவு முடிவுற்ற நிலையில் இன்று அதிகாலை முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் குப்பனூர் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. முன்பு போல சேலம்-ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனினும் கூடுதலாக காவலர்களை சோதனை சாவடியில் நிறுத்தி வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது.
    • சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. சேலம் உள்பட பல மாவட்டங்களில், 103 டிகிரி வரை வெயில் பதிவாகி உள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகரிப்பு மற்றும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் சொகுசு விடுதி, ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்து ரசிக்கின்றனர். ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட் போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சாலையோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்ததால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
    • ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிற்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். இதேபோல், பள்ளி விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

    நடப்பு ஆண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இதையொட்டி, ஏற்காட்டு சுற்றுலா தலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து படகு இல்லத்தில் உள்ள படகுகளுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இங்கு இதமான சூழல் நிலவுகிறது.

    எனவே இந்த இதமான சூழலை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் இங்குள்ள பூங்காக்களிலும் வண்ணமயமான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு, பூங்காக்களும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்காடு சுற்றுலா தலத்தில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மலர்க் கண்காட்சிக்காக முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் ஏராளமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் வகைகளும் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால் தற்போது, ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன. எனவே, கோடை விழா தொடங்கும்போது நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக்குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றனர்.

    • சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
    • சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக வளர்க்கப்படும் பூச்செடிகள் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. அங்குள்ள சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

    இந்த பூங்காக்களில் 650-க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டபுள் டிலைட், மார்கோ போலோ, மேஜிக் லேண்டர், பேமிலி, மூன் ஸ்டோன், சம்மர் ஸ்நோ, ரெட் பிரான், சம்மர் டைம், பர்புல் மூன், மில்கி வே, சில்வர் லிவிங், டேபிள் மவுண்டைன், புளோரி போன்ற ரகங்கள் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதழ்கள் விரிந்து பூத்து குலுங்குகிறது.

    அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா போன்ற இடங்களில், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    இனிவரும் காலங்களில், சூழல் பூங்கா மற்றும் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளை வருகை அதிகமாக இருக்கும் என்பதால், ரோஜா தோட்டத்தில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளது.

    • சேலத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
    • இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

    மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேலம் மாவட்டத்தை குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
    • ஏற்காட்டில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ஆரஞ்சு பழ தோட்டம், காபி தோட்டம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையின் அழகை கண்டு ரசித்தனர். இதில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே புகைப்படம் எடுத்தும், குடும்பத்துடன் போழுது போக்கியும் மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. பனிப்பொழிவும் நிலவியபடி உள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை தினமும் அதிகரித்தபடி உள்ளதால் ஏற்காட்டில் விளையும் காபி, வாசனை திரவியங்கள், ஏற்காடு மலையில் விளையும் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள், வீட்டில் வைத்து வளர்க்கக்கூடிய அழகு செடிகள், பழ வகை செடிகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை களை கட்டுகின்றன. இவற்றை நர்சரி கார்டன், கடைகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.
    • தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து வருகிற 9-ம் தேதி வரையும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் தேதி வரையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

    மேலும் நாளை (4-ந்தேதி) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, நாளை மறுநாள் 5-ந்தேதி விஜயதசமி, பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. ஆகவே நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.

    இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ஏற்காட்டுக்கு கார், சுற்றுலா வாகனங்கள், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இன்று காலை கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். லேசான சாரல் மழையும், பனியும், குளுமையான சீதோஷ்ண நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையை கண்டு ரசித்தனர்.

    ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் சூழல் ஏற்பட்டது.

    • ஏற்காடு சோதனைச்சாவடி வன ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • ஏற்காடு அடிவார பகுதியில் பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் தனியார் எஸ்டேட்களில் இருந்து பல வகை மரங்களை வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தது. மலைப் பாதை வழியே மர லோடு ஏற்றி வரும் லாரிகளை சோதனையிட அடிவாரப்பகுதியில் வனத்து றையின் சோதனைச்சாவடி இருக்கிறது.

    இங்கு பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக கூறப்படுகிறது.

    இது பற்றி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் ஏற்காடு அடிவார சோதனைசாவடியில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் புகழேந்தியை அஸ்தம்பட்டி சந்தன மர குடோனுக்கு அதிரடியாக இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். அேதபோல் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் அசோகனை ஏற்காடு சோதனைசாவடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    ×