search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதிரி தேர்வு"

    • குறு வினாக்கள் அடங்கிய மாதிரி தேர்வு நடத்தும்படி பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.
    • மாதிரி தேர்வு வழியே மாணவர்களின் கற்றல் திறனை எளிதில் அறிய முடியும்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள மாதம்தோறும் மண்டல ஆய்வு கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. இந்த கூட்டங்களில், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் பங்கேற்று பள்ளிகளின் மேம்பாட்டுக்கு திட்டமிடுகின்றனர்.

    இந்நிலையில் மண்டல அளவிலான ஆய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள், அதிகாரிகள் குழுவினர், மாணவர்களுக்கு அவர்களின் வகுப்புக்கு ஏற்ற பாடத் திட்டத்தில் இருந்து, குறு வினாக்கள் அடங்கிய மாதிரி தேர்வு நடத்தும்படி பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த மாதிரி தேர்வு வழியே மாணவர்களின் கற்றல் திறனை எளிதில் அறிய முடியும். மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல் முறைகளை வரையறுக்க முடியும் என திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேலத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
    • இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

    மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேலம் மாவட்டத்தை குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்வர்கள் குரூப்-4 இலவச மாதிரி தேர்வு எழுதி பயன்பெறலாம்.
    • ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 7,301 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 4) வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், மாநில அளவிலான இலவச குரூப்-4 மாதிரி தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    நாளை (23-ந் தேதி) வரை இணையதளம் வாயிலாக மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் தேர்வு மேற்கொள்ளலாம். இம்மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் (www.tncareerservices.tn.gov.in) என்ற இணையதளத்தில் நுழைந்து தேர்வு எழுதி பயன் பெறலாம். ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

    மேலும் இவ்வலைத ளத்தில் பல்வேறு தேர்வுக ளும் இடம் பெற்றுள்ளன. TNPSC குரூப்-4 தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறுமாறு கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தகவலுக்கு 04562-293613 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    ×