search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதி"

    • 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது
    • மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர் .

    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் கிராமத்தில் உள்ள இணைப்பு சாலை வழியாக பாண்டியன் கரடு , நல்லாறு, மயிலாடும்பாறை, முள்ளுப்பாடி உள்ளிட்ட இடங்களுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது .அதற்கு பிறகு புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சாலை பழுது அடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள தோட்டத்து சாலைகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர்.

    எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இங்குள்ள தடுப்பணையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 500-க்குமேற்ப்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
    • ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சுமார் 171மலை கிராமங்களில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கல்வராயன் மலையில் 8ஆயித்துக்கு மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் உயர்நிலை, மேல்நிலை, மற்றும் கல்லூரிக்கல்வி பயில சுமார் 500-க்குமேற்ப்பட்டோர் மலைவாழ் சாதி சான்றிதழ் கேட்டு கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் வருவாய் துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் உயர்கல்வி பயில முடியாமல் அரசு நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ -மாணவிகள் அவதிஅடைந்துள்ளனர்.

    முன்பெல்லாம் சாதி சான்று கேட்டு விண்ண ப்பித்தால் 3 மாதத்திற்கு ஒருமுறை வருவாய் துறையி னர் மலைவாழ் மக்களிடம் நேரடியாக விசாரணை செய்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவார்கள். ஆனால் தற்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் சாதி சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ண ப்பித்தும் இதுவரை நேரடி விசாரணைக்கு அல்லது ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது. ஆகையால் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் புழுதி பறக்கும் பழைய பஸ் நிலையத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
    • இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளி மாவட்டங்கள், உள் ளூர் பகுதிகளுக்கு தினமும் 300-க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகள் வந்து சென்றனர். தற்போது ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டா ண்ட் வாரச்சந்தை திடல் வரை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.

    ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணியால் தற்போது சந்தை திடல், பழைய பஸ் ஸ்டா ண்ட் ஆகிய இடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு குவிந்துள்ள மண லால் காற்றில் புழுதி பறந்து மூச்சுவிட முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்ற னர். இலவச கழிப்பறை, குடிநீர் வசதியின்றி பயணி கள் சிரமப்படுகின்றனர்.

    கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதாகவும் புகார் எழுந் துள்ளது. இதையடுத்து சந்தை திடல் வளாகம், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்விடங்களில் மண் அதி களவில் குவிந்துள்ளதால் காற்றில் புழுதி பறந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக் கிறது.

    இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் டூவீலர்களை கண்டபடி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் நிறுத்துவதால் பஸ்கள் வெளியே செல்வதில் சிக் கல் ஏற்படுகிறது.

    சந்தை திடல், பழை பஸ் ஸ்டாண்டில் புழுதி பறக்காத வகையில் தரைத்தளத்தை செப்பனிட வேண்டும். இலவச கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். பிற வாகனங்கள் உள்ளே வந்து செல்வதற்கு தடை விதிக்கவும் நகராட்சி, போலீ சார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.

    • பயன்பாட்டிற்கு வராத கழிப்பறைகளாகள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றனர்.

    கீழக்கரை

    ஏர்வாடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் 2020ம் ஆண்டிற்கான 4 சமுதாய கழிப்பறைகள் ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் யாத்ரீகர்கள் அவதிப்படு கின்றனர்.

    இதே போல் ஏர்வாடி பஸ் நிலையம் அருகே கழிப்பறை வாளாகம் பொது மக்களுக்கு பயன் பாடின்றி பூட்டி வைக்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து யாத்ரீகர்கள் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமுதாய கழிப்பறையை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கழிப்பறை களுக்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

    ஆட்களை நியமித்து பராமரித்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயன்பாடின்றி பூட்டியே வைத்திருப்பதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. கழிப்பறையின்றி திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றனர்.

    • மதுரையில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை.
    • மழையால் மின்தடை-மக்கள் அவதியடைந்தனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்தி–ரத்தை மிஞ்சும் அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதிக வெப்பம் காரணமாக பொது ––மக்கள் சாலைகளில் சென்று வர மிகவும் சிரமப் பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 3 மணி நேரம் மதுரையின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கொட்டி தீர்த்தது. பின்னர் மழை முடிந்தாலும் தூறல் நிற்காமல் நள்ளிரவு 11 மணி வரை சாரல் மழை போல மழை பெய்தது. இந்த கன மழை காரணமாக மதுரையின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    ஏ.ஏ. ரோடு பகுதியில் மரம் விழுந்ததில் ஆட்டோ சேதம் அடைந்தது. மணி நகரத்தில் உள்ள கர்டர் பாலம் முற்றிலுமாக மழை வெள்ளத்தால் நிரம்பின. தத்தனேரி சுரங்கப்பாதையும் மழை நீரால் நிரம்பியதால் போக்குவரத்து வேறு பாதை–யில் திருப்பி விடப்பட்டன.

    கனமழை காரணமாக பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளை–யம், தல்லாகுளம், பழங்கா–நத்தம், திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பகுதிக–ளில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி முடிந்து வீடு செல் லும் மாணவ, மாணவர்கள் நனைந்தவாறு சென்றனர்.

    மேல பொன்னகரம் பகு–தியில் மின்கம்பம் சரிந்து விழுந்தது இதனால் அந்த பகுதியில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. இதே–போல் தொடர் மழை கார–ணமாக பல்வேறு இடங்க–ளில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுரை–யில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணி–களுக்காக பல்வேறு வார்டு–களில் குழிகள் தோண்டப் பட்டு பணிகள் அரைகுறை–யாகவே நடைபெற்று வரு–கின்றன. இந்த மழை கார–ணமாக அந்த பகுதியில் அனைத்தும் சேறும், சகதி–யுமாக காட்சியளித்தது.

    இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். முக்கிய சாலை–களில் தேங்கிய மழை–நீரை வெளியேற்ற மாநக–ராட்சி பணியாளர்கள் நீண்ட நேரம் போராடினர். கர்டர் பாலம், தத்தனேரி சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் குளம் போல தேங்கிய நீரை அகற்ற மாந–கராட்சி ஊழியர்கள் தீவி–ரமாக ஈடுபட்டனர்.

    ஆரப்பாளையம், பெத்தா–னி–யாபுரம், புதுஜெயில் ரோடு, கண்மாய் கரை உள்ளிட்ட பகுதியில் மரங் கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் மீதும் மரக்கி–ளைகள் முறிந்து விழுந்ததில் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந் தன.

    நாகமலை புதுக்கோட்டை நான்குவழிச்சாலையில் தனியார் மண்டபம் முன்பு வயர் அறுந்து விழுந்தது. அப்பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் மரம் விழுந்ததில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது. 

    • 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது.
    • மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் 200 கேவிஏ மின் திறன் கொண்ட 2 மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட்டுகள் மூலம் விவசாய பயிர்களுக்கு மின்சாரம் செல்கின்றது. மேலும் யாதவர் வீதி, வாணியர் வீதி, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் மின்சாரம் செல்கின்றது.

    இந்த 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது. இன்று வரை இந்த மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யாத தால் விவசாயிகள், பொது மக்கள் மின்சாரம் பற்றாக் குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின் விளக்கு, மின்விசிறி, வீட்டு உப யோகப் பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மின்மாற்றி யை சரி செய்வ தற்கு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தார் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பழுதடைந்த தார் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேட்டமங்கலம், கோம்புப் பாளையம் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக தார் சாலையில் இருபுறமும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தார் சாலையில் இருபுறமும் சுமார் 3 அடி ஆழத்திற்கு சாலை விரிவாக்க பணிக்காக குழிகள் பறிக்கப்பட்டதால் தார் சாலையின் இருபுறமும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் குழாய்கள் நொறுங்கி சேதம் அடைந்து விட்டது. இதனால் குடியிருப்பு வீடுகளுக்கு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதையடுத்து அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் குடிநீர் குழாயை உடைத்த ஒப்பந்ததாரர் உடனடியாக தார் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் பதித்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையோரம் மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் சிரமைப்படுகின்றனர்.
    • தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருமங்கலம்

    திருமங்கலம் விமான நிலைய சாலை செல்லும் பகுதியில் நகராட்சி எல்லைக்கு அடுத்தபடியாக வடகரை ஊராட்சி அமைந்துள்ளது. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வீடுகள் கடைகள் இருந்து வெளி யேற்றப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது.

    குறிப்பாக உணவகங்களில் மீதமாகும் உணவு கழிவுகள் சிக்கன் கடைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கோழிக்கழிவு கள் மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டு கொட்டப்படு கிறது.

    குப்பைகளை நாய்கள் கிளறுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசப்படுகிறது. காற்று வீசும்போது பறக்கும் குப்பையால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே விமான நிலைய சாலை செல்லும் சாலையில் சாலையோரம் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பை மேடாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த குப்பைகளால் அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொட்டப் படும் கழிவுகளை உண்ப தற்காக வரும் நாய், பன்றி, மாடுகள் போன்றவை களுக்குள் ஏற்படும் சண்டையால் அவைகள் சாலைகளில் ஓடிவரு கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

    மேலும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அந்தப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

    எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதிக்கவும், குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பைகளை வாங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமங்கலம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது.

    திருமங்கலம்

    மதுரை-நெல்லை வழித்தடத்தில் திருமங்கலம் ரெயில் நிலையம் முக்கிய நிலையமாக அமைந்துள்ளது. மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பயணிகள் ரெயில்களும் நின்று செல்லும் இந்த ரெயில் நிலையங்களில் சென்னை, பெங்களூர், புனலூர் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றனர்.

    சமீபத்தில் மதுரையில் இருந்து நெல்லை வரையில் அமைக்கப்பட்ட இரட்டை வழிப்பாதையும் இங்கு அமைந்துள்ளது. இதனால் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை தென்னக ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. என்.எல்.சி. நிறுவனம் சார்பில் பயணிகள் வசதிக்காக திருமங்கலம் ரெயில் நிலையம் முன்புறம் நவீன கழிப்பறை கட்டப்பட்டது.

    கட்டிடபணிகள் நிறைவடைந்த 6 மாதங்கள் கடந்துவிட்ட பின்பு இந்த புதிய கழிப்பிடம் திறக்கப் படாமல் பூட்டியே காட்சியளிக்கிறது. இதே போல் ரெயில்வே நிலையத்திற்குள் பல ஆண்டுகளாக இருக்கும் பொது கழிவறையும் திறக்கப் படாமல் காணப்படுகிறது. ரெயில்கள் வரும் வரையில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சிமெண்டால் அமைக்கப்பட்ட நாற்காலிகளும் முதல்பிளாட்பாரத்தின் பராமரிப்பு பணிக்காக இடித்து அகற்றப்பட்டு விட்டது.

    இதனால் பயணிகள் ரெயில்கள் வரும் வரையில் நிற்கவேண்டியுள்ளது. பயணி களுக்கான ஓய்வறையில் உள்ள இரும்பு நாற்காலிகளும் உடைந்து சிதைந்து போய் காணப்படுகிறது. ரெயில் பயணிகளின் முக்கிய தேவை யான குடிநீர் வசதி திருமங்கலம் ரெயில்வே நிலையத்தில் இல்லை. இங்குள்ள 2 பிளாட்பாரங்களிலும் உள்ள குழாய்களை திறந்தால் தண்ணீ ருக்கு பதில் காற்றுதான் வருகிறது.

    ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டணம் கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கி வரும் நிலை உள்ளது. இது தவிர முதலாம் பிளாட்பாரத்தை உயர்த்தவும், அகலப்படுத்தும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் மிகவும் குறுகலாக காணப்படும் முதல்பிளாட்பாரத்தில் நிற்கும் ரெயிலில் ஏறி இறங்க பயணிகள் குறிப்பாக முதியோர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை. சென்னைக்கு செல்லும் முத்துநகர் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரண்டுமே இரவு 10.30 மணிக்கு மேல்தான் திருமங்கலம் வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இரவு வேளையில் நிலையத்தில் நடந்து செல்ல இயலாது. ஏனெனில் இங்கு தெருவிளக்கு எரிவதில்லை. வளாகம் இருளாக காணப்படுகிறது.

    முதல்பிளாட்பாரத்தில் ரெயில்கள் நிற்பதால் குறுகலான பிளாட்பாரத்தில் இரவு வேளையில் ரெயிலில் ஏற இயலவில்லை. இங்கு பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது. இதை திறப்பதற்கான வழிகள் எதுவும் தென்படவில்லை.

    தற்போது மெட்ரோ ரெயில் திருமங்கலத்தில் இருந்து தான் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி காணப்படும் திருமங்கலம் ரெயில் நிலையம் வசதிகளை ஏற்படுத்தி தரத்தினை உயர்த்த வேண்டும் என்பதே நகரமக்களின் கோரிக்கையாகும்.

    • காற்றின் வேகத்தின் காரணமாக மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது
    • சுசீந்திரம் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

    இந்த நிலையில் மாவ ட்டம் முழுவதும் இன்று காலையில் சூறைக்காற்று வீசியது. நாகர்கோவில் புத்தேரி பகுதியில் வீசிய சூறைக்காற்றினால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். புத்தேரி குளத்தின்கரை பகுதியில் செல்லும் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிபட்டனர்.

    இதையடுத்து சில வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். பலரும் தங்களது இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்தினர். காற்றின் வேகம் குறைந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    புத்தேரி குளத்தின்கரை பகுதியில் பழமை வாய்ந்த மரங்கள் உள்ளது. காற்றின் வேகத்தின் காரணமாக மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன்னதாக அந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து ள்ளனர்.

    இதேபோல் சுசீந்திரம் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் பறந்தன. சூறைக்காற்றின் காரணமாக மணல்களும் காற்றில் புழுதியாக பறந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மரக்கிளைகள் பல்வேறு இடங்களில் முறிந்து விழுந்தது.

    அகஸ்தீஸ்வரம் ராஜாக்க மங்கலம் ஒன்றியத்து க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்பு றங்களிலும் இன்று காலை யில் சூறைக்காற்று வீசியது. கன்னியாகுமரி பகுதியில் வீசிய சூறைக்காற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதேபோல் மேற்கு மாவட்ட பகுதிகளிலும் இன்று காலையில் சூறைக்காற்று வீசியது.

    • டாக்டர்கள்-நர்சுகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றர்.
    • உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவ மனைகள், கிராமப் பகுதிக ளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணிபுரியவில்லை.

    பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அரசு மருத்துவ மனைக்கு தினமும் குறைந்தது 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை. இது தவிர பெரும் பான்மையான மருத்துவ மனைகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

    இந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங் களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர் களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது.
    • திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது. கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் குளிர்பானங்கள், பழ வகைகள் பல்வேறு குளுமையான பொருட்களை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்தனர். இதனை தொடர்ந்து காலையில் கடும் வெயிலும், மாலையில் திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் அளவு இருந்து வந்ததால் பொதுமக்கள் மீண்டும் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்தனர்.

    நேற்று மாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்ததோடு குளிர்ந்த காற்று வீசி மழை பெய்து வந்தது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம், விருத்தாச்சலம், சிதம்பரம் ,லால்பேட்டை, ட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் திடீர் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருபுறம் கடும் வெயிலும் மற்றொருபுறம் திடீர் மழையும் இருந்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:- விருத்தாசலம் - 12.0, பரங்கிப்பேட்டை - 11.2 , மீ-மாத்தூர் - 8.0 4. லால்பேட்டை - 6.0 , ஸ்ரீமுஷ்ணம் -5.1 6, காட்டுமன்னார்கோயில் - 4.0 7. ,குப்பநத்தம் - 3.2 , கொத்தவாச்சேரி - 3.0 , பண்ருட்டி - 2.0 , குறிஞ்சிப்பாடி - 2.0 11. அண்ணாமலைநகர் - 2.0 , புவனகிரி - 2.0 , சேத்தியாதோப்பு - 2.0 .. பெல்லாந்துறை - 1.8 , சிதம்பரம் - 1.5 , கலெக்டர் அலுவலகம் - 1.4 , கடலூர் - 1.3 , வடக்குத்து - 1.௦ கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 69.50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    ×