search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிப்பறை"

    • காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அனுப்பப்பட்டு, போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
    • 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் தினசரி பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில், வி.வி.ஐ.பி.க்கள் வழி பாதுகாப்பு பணி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியிலிருக்கும் ஆண் மற்றும் பெண் காவலர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அனுப்பப்பட்டு, போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

    சென்னை பெருநகர காவல்துறையின் 4 மண்டலங்களுக்கும் தலா 2 கழிப்பறை வாகனங்கள் என 8 கழிப்பறை வாகனங்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு 2 கழிப்பறை வாகனங்கள் என 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் தினசரி பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கழிப்பறை வாகனங்களிலும் 2 இந்தியன் வகை கழிப்பறை, 2 மேற்கத்திய கழிப்பறைகள் என 4 கழிப்பறைகளும், உடை மாற்றுவதற்கு 1 சிறிய அறை, கை கழுவுவதற்கு 2 வாஷ் பேஷின்கள், தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள 1 தண்ணீர் தொட்டி, பெண் காவலர்கள் கழிப்பறை வாகனங்களில். 5 ரூபாய் நாணயம் செலுத்தினால் நாப்கின்கள் வழங்கும் எந்திரம், சிறிய குப்பை தொட்டி ஆகியவை பொருத்தப்பட்டு, நல்லமுறையில் இயங்கி வருகிறது. இவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கழிப்பறை வாகனம் தினசரி தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டு, அங்கு பணிபுரியும் பெண் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

    • பயன்பாட்டிற்கு வராத கழிப்பறைகளாகள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றனர்.

    கீழக்கரை

    ஏர்வாடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் 2020ம் ஆண்டிற்கான 4 சமுதாய கழிப்பறைகள் ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் யாத்ரீகர்கள் அவதிப்படு கின்றனர்.

    இதே போல் ஏர்வாடி பஸ் நிலையம் அருகே கழிப்பறை வாளாகம் பொது மக்களுக்கு பயன் பாடின்றி பூட்டி வைக்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து யாத்ரீகர்கள் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமுதாய கழிப்பறையை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கழிப்பறை களுக்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

    ஆட்களை நியமித்து பராமரித்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயன்பாடின்றி பூட்டியே வைத்திருப்பதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. கழிப்பறையின்றி திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றனர்.

    • திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    எண்ணூரில் 150 குடும்பத்தினர் பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடந்த கழிப்பறை மண்டல குழு தலைவர், அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பொதுக்கழிப்பறை கட்டிடம் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

    கழிவறை கட்டிடம் திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பயன்படுத்த முடியாமல் மூடியே கிடந்தன. இதற்கு கழிவறையில் இருந்து செல்லும் குழாயை அருகில் உள்ள கால்வாயில் இணைக்க முடியாததே முக்கிய காரணமாக கூறப்பட்டது. தாழங்குப்பம் அருகே உள்ள நெட்டுக்குப்பம் வழியாக கழிவறை கழிவு நீர் குழாயை கொண்டு சென்று அருகில் உள்ள கால்வாயில் இணைக்கும் சூழல் உள்ளது. ஆனால் இதற்கு நெட்டுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இயற்கையாகவே தாழங்குப்பம் பகுதி உயரமான இடம் ஆகும். இதனால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் நெட்டுக்குப்பம் வழியாக செல்லும்.

    தற்போது கழிவறை பகுதியில் இருந்து குழாயை நெட்டுக்குப்பம் வழியாக கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீட்டை ஒட்டி சுவர்கள் எழுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் கவுன்சி லர்கள் ஜெயராமன், சிவகுமார், தீண்டாமை வன்கொடுமைச் சட்ட அதிகாரிகள், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம், மாநகராட்சி செயற்பொறியாளர் தணிகை வேலன் மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் ஊர் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிலர் குழாய் அமைக்க எதிர்ப்புகள் தெரிவித்தனர். பின்னர் இருதரப்பினர் இடையே சுமுகமாக பேச்சு வார்த்தை நடந்ததை தொடர்ந்து 20 மீட்டர் தூரம் குழாய்கள் அமைப்பதற்கு இருதரப்பினர் சம்மதித்தனர். இதற்கான பணி இன்று காலை செயற்பொறியாளர் தணிகை வேலன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

    • தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 492 இடங்களில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் சாத்தியக்கூறுகள் ஆராயப் பட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொது கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளை பொது மக்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    பொது மக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பதற்காகவும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிப்பது, புதிய கழிப்பறைகளை கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 492 இடங்களில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 366 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 100 கழிப்பறைகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 26 கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் 2023-24ம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 352 இடங் களில் 1046 இருக்கைகளுடன் 215 புதிய கழிப்பறைகளும், 265 புதிய சிறுநீர் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் சாத்தியக்கூறுகள் ஆராயப் பட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • கடலூர் முதுநகர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார்.
    • ெரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ெரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் துறைமுகம் ெரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ெரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார்.    ெரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ெரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்த பொது மக்களிடம் ெரயில் நிலையத்தில் உள்ள குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் கட்சியினர் மனிஷ் அகர்வாலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ெரயில் நிலையங்களில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    • 20 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடக்கும் கட்டணக் கழிப்பறையை திறக்காததை கண்டித்தும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும்ஆர்ப்பாட்டம் நடந்தது,
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில், தினசரி காய்கறி மார்க்கெட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோட்டில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் 20 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடக்கும் கட்டணக் கழிப்பறையை திறக்காததை கண்டித்தும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், மார்க்கெட் அருகில் சாலை விரிவாக்கத்தின் போது தோண்டப்பட்டு இடத்தில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாயை சீரமைக்காததை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில், தினசரி காய்கறி மார்க்கெட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    • தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணியை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    கடந்த 21-ந் தேதி இப்பள்ளி மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது அந்த மாணவர் தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் கூறினார். மேலும் தங்களை தலைமை ஆசிரியை கீதா ராணி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாகவும் கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் ஈரோடு கலெக்டரிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்படி கடந்த 30-ந் தேதி பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளியில் படிக்கும் 6 பட்டியலின மாணவர்களை தலைமை ஆசிரியை கீதாராணி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்தது.

    மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது தலைமை ஆசிரியை கீதாராணி பணிக்கு வராமல் தலைமறைவானார்.

    இதற்கிடையே மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் கழிப்பறையை சுத்தம் செய்ததால் கொசு கடித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் பெருந்துறை போலீசார் தலைமை ஆசிரியை கீதா ராணி மீது குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தலைமை ஆசிரியை கீதாராணியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணியை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை தகுதியினை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாபநாசம் ஒன்றியம், கோபுராஜபுரம் ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஒருங்கி–ணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை தகுதியினை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.பின்னர், கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் சத்துணவு தரம் குறித்தும், பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பு குறித்தும், கழிப்பறை வசதி மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    கோபுராஜபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவேடு–களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு–வர சம்பந்தப்பட்ட அலுவல–ர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது உடன் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுஜாதா, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பாபநாசம் வட்டார குழந்தைகள் ஊட்டச்சத்து அலுவலர் லதா, ஒன்றிய பொறியாளர்கள் சுவாமிநாதன், சரவணன், கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனாளிகளில் 382 பயனாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினார்.
    • வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்தினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஒன்றிய த்தில் பாரத பிரதமர் ஊரக குடியிருப்பு திட்ட த்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்குநாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கள ஆய்வு அட்டை வழங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வேதார ண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமலிங்கம், பாஸ்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதிஆகியோர் கலந்துகொண்டு கத்ததிரி புலம், ஆதனூர், கருப்பம்புலம் ,குரவப்புலம், உள்ளிட்ட 36 ஊராட்சிகளில் 21- 22 ம் ஆண்டு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனளிகளில் 382 பயணாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினர். வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வை பெற எனவும், திட்டத்தில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் ஊரக வளர்ச்சி இயக்கம் குறைய தீர்ப்பு மைய தொடர்பு எண்கள் 8925422215, 8925422216 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதி தெரிவித்துள்ளார்.

    • மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், நடைபாதைகளை ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    திங்கள்நகர் பஸ் நிலையத்தில் குளறுபடியாக பஸ்களை நிறுத்துவது குறித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், திங்கள்நகர் பேரூராட்சிக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சசி உத்தரவின்பேரில் போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டுமென்றும் மினி பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை கூறினார். மேற்குநெய்யூர் வழியாக பெத்தேல்புரம் செல்லும் பஸ்கள் மற்றும் ஞாறோடு, வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, ஆசாரிப்பள்ளம், ராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

    விதி முறைகளை மீறும் அரசு பஸ்கள், மினி பஸ்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், நடைபாதைகளை ஆய்வு செய்தார். அப்போது மாற்றுதிறனாளிகளுக்கு நடை பாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது திங்கள்நகர் பணிமனை பொது மேலாளர், திங்கள்நகர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சுமன், செயல் அலுவலர் எட்வின்ஜோஸ், கவுன்சிலர் செல்வின்ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×