search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுநகர்ரெயில் நிலையத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு
    X

    கடலூர் முதுநகர் துறைமுகம் ரயில்வே நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார்.

    முதுநகர்ரெயில் நிலையத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு

    • கடலூர் முதுநகர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார்.
    • ெரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ெரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் துறைமுகம் ெரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ெரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் ஆய்வு செய்தார். ெரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ெரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்த பொது மக்களிடம் ெரயில் நிலையத்தில் உள்ள குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் கட்சியினர் மனிஷ் அகர்வாலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ெரயில் நிலையங்களில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×