search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர்கள்-நர்சுகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
    X

    டாக்டர்கள்-நர்சுகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி

    • டாக்டர்கள்-நர்சுகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றர்.
    • உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவ மனைகள், கிராமப் பகுதிக ளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணிபுரியவில்லை.

    பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அரசு மருத்துவ மனைக்கு தினமும் குறைந்தது 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை. இது தவிர பெரும் பான்மையான மருத்துவ மனைகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

    இந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங் களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர் களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×