search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்கள் பற்றாக்குறை"

    • டாக்டர்கள்-நர்சுகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றர்.
    • உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவ மனைகள், கிராமப் பகுதிக ளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணிபுரியவில்லை.

    பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அரசு மருத்துவ மனைக்கு தினமும் குறைந்தது 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை. இது தவிர பெரும் பான்மையான மருத்துவ மனைகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

    இந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங் களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர் களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • நோயாளிகள், பொதுமக்கள் அவதி
    • மாவட்ட நிா்வாகம் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

    நெமிலி:

    பாணாவரம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை 2006-ம் ஆண்டு 30 படுக்கைகளுடன் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்ய தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை என்ற பெருமை கொண்டது.

    மேலும் 2007-ம் ஆண்டு 30 யூனிட்வரை ரத்தம் சேமிப்பு வங்கியும் தொடங்கப்பட்டது. 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் சிறந்த பிரசவத்திற்கான தமிழக அரசின் விருதைப்பெற்றது. இங்குள்ள மருத்துவமனையால் இப்பகுதியை சுற்றியுள்ள சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களை சோ்ந்த ஏழை எளிய மக்கள் கர்பிணிகள், குழந்தைகள், விவசாயிகள் கூலி தொழிலாளா்கள் என பலரும் சிகிச்சை பெற்று பயனடைந்து வந்துள்ளனா்.

    ஆனால் இன்று போதிய டாக்டர்கள் இல்லாததாலும், கா்பிணிகள் அறுவை சிகிச்சை இங்கு செய்யாததாலும் முறையான சிகிச்சையின்றி கா்பிணி பெண்கள் அலைகழிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனா்.

    அதேபோல் இங்குள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவ பிரிவுகள் இருந்தும், மருத்துவ கருவிகள், மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அதற்கான மருத்துவா்கள், முறையான தொழில்நுட்புனா்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக நோயாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.

    அதேபோல் இப்பகுதியை சுற்றி விவசாயமே பிரதானமாக விளங்குவதால் விவசாயிகள் நிலங்களில் பணி செய்யும் தொழிலாளா்கள் எதிா்பாரத விதமாக பூச்சு, பாம்பு ,தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் கடிக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றனா். அப்படி வருபவா்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் சோளிங்கா் மற்றும் வாலாஜாபட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கின்றனா் அப்படி போகும் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சேர முடியாமல் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    எனவே சம்பந்தபட்ட துறையினரும், மாவட்ட நிா்வாகமும், உடனடியாக இந்த மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளை தேவைகளை நிறைவேற்றி பாதிக்கப்பட்டவா்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ சேவையை செய்திட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலர்களும் எதிா்பார்கின்றனா்.

    • அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் இருக்கும் மருத்துவரை மாற்று பணி இடத்திற்கு அனுப்புவதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இருதயம், மூளை நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. தலைமை மருத்துவமனைக்கு உண்டான எந்த ஒரு வசதிகளும், செயல்பா–டுகளும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டினர். இங்குள்ள ஸ்கேன் கருவி 2, 3 நாட்களாகவே பழுதடைந்து உள்ளது. இதனால் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் பிணவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மருத்துவமனையில் பல கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்து உள்ளது.

    தேசிய தர சான்றிதழ் பெற்ற இந்த அரசு தலைமை மருத்துவமனையின்

    அவலநிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ×