search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே  2 மாதங்களாக செயல்படாத மின்மாற்றி: விவசாயிகள், பொதுமக்கள் அவதி
    X

    செயல்படாத மின்மாற்றி.

    திருவெண்ணைநல்லூர் அருகே 2 மாதங்களாக செயல்படாத மின்மாற்றி: விவசாயிகள், பொதுமக்கள் அவதி

    • 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது.
    • மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் 200 கேவிஏ மின் திறன் கொண்ட 2 மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட்டுகள் மூலம் விவசாய பயிர்களுக்கு மின்சாரம் செல்கின்றது. மேலும் யாதவர் வீதி, வாணியர் வீதி, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் மின்சாரம் செல்கின்றது.

    இந்த 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது. இன்று வரை இந்த மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யாத தால் விவசாயிகள், பொது மக்கள் மின்சாரம் பற்றாக் குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின் விளக்கு, மின்விசிறி, வீட்டு உப யோகப் பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மின்மாற்றி யை சரி செய்வ தற்கு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×