search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசாணை"

    • பீடி தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை
    • கலெக்டருக்கு மனு

    திருப்பத்தூர்:

    மாநில காங்கிரஸ் பீடி தொழி லாளர்கள் நல சம்மேளனத் தின் மாநில பொதுச்செயலா ளர் ஆர்.முனிராஜ் தமிழக முதல் - அமச்சர். மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார்.

    அதில் வேலூர், திருப்பத்தூர் ஒருங் கிணைந்த மாவட்டத்தில் 10 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நீண்டநாளுக்கு பிறகு 10.5.2022 அன்று நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்.கிரிலோஷ் குமார், முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் உ.லட்சுமிகாந்தன் முன்னி லையிலும், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராமசந்திரன், தொழிலாளர் துறை ஆணை யாளர்அப்துல் காதர், உதவி ஆணையாளர் இந்துமதி, வேலூர், திருநெல்வேலி மாவட்ட பீடி உற்பத்தியாளர் சங்கம், ஐ.என்.டி.யு.சி. பீடி தொழிலாளர் நல சங்கம் சார்பில் தமிழ்நாடு பீடி தொழிலாளர்கள் சம்மேளத்தின் மாநில தலைவர் சி.சுப்பிரமணி, மாநில பொதுச் செயலாளர் முனீராஜி ஆகியோரும் கலந்து கொண்டு கையொப் இடப்பட்டது.

    பம் இன்றைய தேதி வரையில் இந்த ஒப்பந்த அரசாணை வெளிவரவில்லை. ஆகையால் முன் தேதியிட்டு உடனடியாக தொழிலாளர்கள் நலன் கருதி அரசாணையை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

    • மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார்.
    • சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த விஜய்பாபு சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சேலம் ஆவின் பொது மேலாளராக பணிபுரிந்து வந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அரசா ணையில் கூறப்ப ட்டுள்ளது.

    • தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
    • ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு காரணங்களால் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்களும் ஏற்படுகின்றன.

    இதனால் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக தண்டனை மற்றும் அபராதத்தை கடுமையாக்க மத்திய அரசு 2019-ல் மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தது.

    இதை அடிப்படையாக கொண்டு தமிழக அரசும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. அதற்கேற்ப மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்டு அபராத தொகைகளையும் உயர்த்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு எந்தெந்த வகையில் அபராதம் விதிக்கப்படும் என்பதை விரிவாக பட்டியலிட்டு உள்ளார்.

    மொத்தம் 46 வகையான குற்ற விதிமீறல்களுக்கு அபராத தொகை எவ்வளவு என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் அரசாணையாகவும் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன் விபரம் வருமாறு:-

    மோட்டார் வாகனத்தை ஓட்டும் போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஓட்டினாலோ ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனம் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தாலோ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    சாலைகளில் அதிவேகமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000மும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களை ஓட்டுவதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதி இல்லாதவர்கள் வாகனத்தை ஓட்டினால் முதன்முறை ரூ.1000-ம், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    சாலைகளில் வாகனம் ஓட்டும்போது விதிகளை மதிக்காமல் அதிக ஒலி எழுப்பினாலோ, அதிக புகையுடன் வாகனங்களை ஓட்டி சென்றாலோ ஏற்கனவே ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத தொகை உயர்த்தப்படவில்லை.

    உரிய பதிவெண்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.2500 அபராதமும், 2-வது முறை ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.போக்குவரத்து வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகளின் உரிய அனுமதி (பெர்மிட்) இன்றி ஓட்டினால் வசூலிக்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் அபராத தொகையும் அதிகரிக்கப்படவில்லை. இனி வரும் காலங்களிலும் இதே தொகையே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் பயன்படுத்தும் கார் உள்ளிட்ட வாகனங்களையும் உரிய அனுமதியின்றி போக்குவரத்து விதிகளை மீறி இயக்கினால் முதன்முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும்.

    உரிய இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டி போலீசில் விதி மீறினால் முதல் முறை ஆயிரமும், 2-வது முறை 4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்சுக்கு வழி விடாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றி சென்றால் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். லாரிகளை நிறுத்த மறுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்க அதில் விதிமுறைகள் திருத்தப்பட்டு உள்ளன.

    லாரிகளில் அதிக உயரத்தில் பாரம் ஏற்றி வந்தாலோ அல்லது அகலமாக பாரம் ஏற்றி வந்தாலோ ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கை அளவை விட அதிகமான பயணிகளை ஏற்றி சென்று ஒவ்வொரு பயணி வீதம் கணக்கீட்டு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

    மோட்டார் வாகனத்தை புதுப்பிக்க தவறினால் முதல் முறையாக ரூ.500 அபராதமும், இரண்டாவது முறையாக இத்தவறினை செய்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.

    பிற மாநிலத்தில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்களை 12 மாதங்களுக்குள் மீண்டும் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்காவிட்டால் முதல் முறையாக ரூ.500-ம், தொடர்ந்து அதே தவறு செய்தால் ரூ.1500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட மோட்டார் வாகனத்தை பெயர் மாற்றம் செய்யவில்லை என்றால் முதல் முறை ரூ.500-ம், 2-வது முறை இதே தவறினை செய்தால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.

    மோட்டார் விதி அடையாள குறிகளை அகற்றினால் முதல் முறையாக ரூ.500-ம், தொடர்ந்து இதே தவறுக்கு ரூ.1,500-ம், மோட்டார் விதிகளை மீறினால் ரூ.1,500, பொது இடத்தில் வாகனங்களை விபத்து ஏற்படும் நிலையில் நிறுத்தி இருந்தால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்.

    வாகனத்தில் முன்பகுதி அல்லது ஓடுகிற பகுதியில் நின்று பயணித்தாலோ அல்லது உட்கார்ந்து பயணித்தாலோ முதலில் ரூ.500-ம் அடுத்தடுத்து தவறு செய்தால் ரூ.1500-ம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகன சோதனையின் போது, லைசென்சு, கண்டக்டர் லைசன்சு, பதிவு, பெர்மிட், தகுதி சான்று, இன்சூரன்ஸ் ஆவணங்களை காட்டாவிட்டால் முதலில் ரூ.500-ம், தொடர்ந்து தவறு செய்தால் ரூ.1500-ம் அபராதம் விதிக்கப்படும்.

    டிரைவிங் லைசென்சு தொடர்பான குற்றங்களுக்கு முதல் முறையாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். டிரைவிங் லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் முதல் முறையாக ரூ.5000 அபராதமும், கண்டக்டர் லைசென்சு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகன தயாரிப்பாளர், இறக்குமதியாளர், டீலர், விற்பனையாளர், வாகனத்தை ஆல்டர் செய்வதில் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1 லட்சம் அபராதம் ஒரு வாகனத்திற்கு விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு மோட்டார் வாகன விதி மீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் போக்குவரத்து புதிய அபராத விபரங்கள் தொடர்பாக இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரும் அபராத விபரங்களை வெளியிட்டார். சென்னையில் மூடப்பட்டுள்ள சாலைகள் மற்றும் மாற்றுப்பாதைகள் குறித்த தகவல்களை கூகுல் மேப் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக புதிய செயலி ஒன்றை அவர் வெளியிட்டார்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
    • காந்தி ஜெயந்தி 02.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 09.10.2022

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர்மோகன் வெளி யிட்டு உள்ள செய்திக்குறி ப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற காந்தி ஜெயந்தி 02.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 09.10.2022 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு மேற்கண்ட தினம் டிரை டே ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள்மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, காந்தி ஜெயந்தி 02.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 09.10.2022 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மா க்மது பானக் கடைகள், டாஸ்மாக் மது பானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது. இவ்வாறு அதில் கூறிப்பிட்டு உள்ளார்.

    • சமூக நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு நல வாரியம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

    கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைத்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகளின் பிரச்னைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சமூக நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு நல வாரியம் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட தேங் காப்பட்டணம் துறைமுக கட்டுமானப் பணிகள்
    • இரையுமன் துறை மீனவர் கிராமத்தை கடலரிப்பிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்காக தொடர்தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்டம்

    நாகர்கோவில் :

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரை விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோருடன் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, திருவனந்த புரம் மறை மாவட்டம் தூத்தூர் மண்டல முதன்மை தந்தை பெபின்சன், கோட்டாறு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம் இயக்குனர் டன்ஸ்டன், தமிழ்நாடு மீனவர்காங்கிரஸ்தலைவர் ஜார்ஜ் ராபின்சன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், பாதிரியார்கள் கிளீட்டஸ், அம்புறோஸ் ஆகியோர் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    அப்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட தேங் காப்பட்டணம் துறைமுக கட்டுமானப் பணிகள் உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு தொடங்கப்படும் என உறுதி அளித்தார். அதேபோல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் மணல் திட்டுக்கள் உருவா கிக்கொண்டே இருக்கின் றது. அடிக்கடி மணல் திட்டுக்களை அகற்ற ஏது வாக மணல் அள்ளும் எந்திரம் ஒன்று நிரந்தரமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருக்கும்படி ஆவன செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு முதல்-அமைச்சர் மணல் அள்ளும் எந்திரம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும், இரையுமன் துறை மீனவர் கிராமத்தை கடலரிப்பிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்காக தொடர்தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டுக்கு அனுப்பப்பட் டுள்ளது. அதனை துரிதப்படுத்தி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என முதல்-அமைச்சர் உறுதி அளித்தார். மேலும் ஐ.ஆர். இ.எல். மீனவ கிராமங்களில் கனிம மணல் எடுப்பதற்கு வழங் கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    • அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தபாலில் பெறுவதற்கான ரூ.25 கட்டணத்தை செலுத்துமாறு குறுந்தகவல் அனுப்பபடும்.

    புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்து சென்னை, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பேரில் தபால் மூலம் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    குடும்ப அட்டையை அஞ்சல் வழியாக பெற விருப்பம் தெரிவிக்கும் வசதி இணையதளத்தில் செய்யப்படும் என்றும் புதிய குடும்ப அட்டையுடன் அதனை செயலாக்கம் செய்யும் முறை குறித்த விளக்க குறிப்பும் அனுப்பி வைக்கப்படும்.

    மேலும், தபாலில் பெறுவதற்கான கட்டணம் ரூ.25-ஐ இணையவழியில் செலுத்துமாறு, விண்ணப்பதாரருக்கு குறுந்தகவல் மூலமாகத் தெரிவிக்கப்படும். குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு, இணையவழியில் விண்ணப்பிக்கும் போதே, இணையவழி அட்டை கட்டணம் ரூ.20 மற்றும் தபால் கட்டணம் ரூ.25 என மொத்தம் ரூ.45-ஐ கட்டணமாக வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #TNGovt
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதி அளிக்க கோரிக்கை விடப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசாணை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பல்கலைக்கழக மானியக்குழு அமைத்த சம்பள மறுஆய்வு குழு, பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆளுகைக்கு உட்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான அதிகாரிகளுக்கு ஊதியத்தை உயர்த்த சிபாரிசு செய்தது. அதை ஏற்றுக்கொண்டு ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை இயக்குனர் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதன் அடிப்படையில், அந்த சிபாரிசை தமிழக அரசு ஆய்வு செய்து இந்த அரசாணையை பிறப்பிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது.

    இந்த சம்பள உயர்வு, 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியிட்டு அமல்படுத்தப்படும். கல்லூரி ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆகவும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 60 ஆகவும் நீடிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 2 வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.
    சென்னை:

    ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு ஐகோர்ட் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. 

    செவிலியர்கள் தரப்பில் தற்போது உள்ள ரூ.7 ஆயிரம் ஊதியத்தை ரூ.22 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

    இன்று இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் என தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. மற்ற கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலர் தலைமையிலான குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
    ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. மேலும், ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு, மக்கள் வலிமையின் இன்னுமோர் பேருதாரணம். அனைத்து அரசியல் கட்சிகளும் சிரம் தாழ்த்தி ஏற்க வேண்டிய பாடம். களத்தில் பலியான தியாகிகளை போற்றுவதோடு இல்லாமல் பாடமும் கற்கவேண்டும்

    தமிழக அரசியலின் புதிய பொழிப்புரையை தூத்துக்குடி எழுதிவிட்டது. தமிழகமே அதைப்பின்பற்றி இழந்த அரசியல்மாண்பை மீட்டெடுக்கவேண்டும். அரசியல்வாதிகளின் தேவைக்கான காரணத்தை, புதிய பாடமாக கற்றுத் தந்துள்ளது. இப்போராட்டம். இக்கல்வி கற்று, மக்கள் நீதி மய்யம் பள்ளியாய் மாறி வீதி தோறும் இச்செய்தியை பரப்பும்.

    தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். வெறும் சாட்சிகளாக , திணிக்கப்பட்ட செய்திகளின் கைதிகளாக இனி தமிழர் இயங்கமாட்டார்கள். நாம் விரும்பும் மாற்றமாக மாறத் துவங்கிவிட்டோம்

    சரியான நேரத்தில் மக்களின் போராட்டத்தைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட்டிருந்தால் தேவையற்ற உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை அரசு எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமான ஒன்று என ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #SterliteShut
    பெங்களூர்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. மேலும், ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமான முடிவு. 22 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையுடன் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நடத்தி வந்தோம். தமிழக அரசின் அரசாணையை படித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

    என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×