search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிடமாற்றம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம்
    • சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் தனது பையிலிருந்த ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆசிரியரின் இச்செயலை பொறுத்துக்கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் புகாரளித்த நிலையில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கடந்த புதன்கிழமை (பிப் 21) பள்ளிக்கு வந்த ஆசிரியர் நீட்டூ குமாரி, தனது பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வரச் சொல்லி ஒரு மாணவருக்கு சொல்லியுள்ளார். பின்னர் அவர் தனது பையிலிருந்த 35 ரூபாய் காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார்.

    பின்னர் ஒவ்வொரு மாணவர்களிடமும் அவர் பணம் காணாமல் போனதை பற்றி விசாரித்துள்ளார். அதில் மாணவர்கள் சொன்ன பதிலால் திருப்தியடையாத ஆசிரியர், மாணவர்களை பக்கத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று பணம் திருடவில்லை என்று சத்தியம் செய்ய வைத்துள்ளார். சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
    • பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் உள்ள அலுவலர்கள், நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலாஜி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சதீஷ்பாபு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் சிவக்குமார், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) துரைசாமி, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவராகவும் (கி.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உமாசங்கர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேடியப்பன், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சையத் பயாஸ் அகமது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுப்பிரமணி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஹேமலதா, கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராகவும் (வளர்ச்சி), கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராக (வளர்ச்சி) இருந்த முகமது சிராஜிதீன், தளி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ), சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவப்பிரகாசம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மகேஸ்வரன், கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவல வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம்.
    • சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம்.

    தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐ.ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதகிாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

    இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக இருந்த கவுதம் கோயல் தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக இருந்த கவுதம் கோயல் தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த எஸ். பிருந்தா பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து சேலம் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று எஸ்.பிருந்தா சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் விஜயகுமாரி மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், போலீசாரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்டண்டாக பாஸ்கரன் ஐபிஎஸ் பணியிட மாற்றம்.
    • தாம்பரம் சட்டம் ஒழுங்கு டிசியாக கவுதம் கோயல் ஐபிஎஸ் பிணிட மாற்றம்.

    தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இதில், சென்னை ரெயில்வே காவல் எஸ்.பி.யாக சுகுணா சிங் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்டண்டாக பாஸ்கரன் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தாம்பரம் சட்டம் ஒழுங்கு டிசியாக கவுதம் கோயல் ஐபிஎஸ் பிணிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

    • கலெக்டர் உத்தரவு
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றப்பட்டு உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணி யிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு திருவண்ணாமலை மாவட்ட இலங்கை தமிழர்கள் நலன் தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ஜெ.சுகுணா கீழ்பென் னாத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

    கீழ்பென்னாத்தூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எம்.வெங்கடேசன் போளூர் தாசில்தாராகவும், செங்கம் தாசில்தார் கே.ராஜேந்திரன் திருவண் ணாமலை வட்ட வழங்கல் தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பி.முருகன் செங்கம் தாசில்தாராகவும் மாற்றப் பட்டு உள்ளனர்.

    • மோசமான செயலில் ஈடுபட்டு வந்ததால் நடவடிக்கை
    • கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊராட்சி ஒன் றிய வட்டார கல்வி அலுவல ராக பாபு என்பவர் பணி யாற்றி வந்தார். இவர் சாதி பாகுபாடு காட்டுதல், பெண் ஆசிரியர்களை கீழ்தரமாக பேசுவது உள்ளிட்ட மோச மான செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் மீது சட் டரீதியான நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணிமே கலை, மாநில பொருளாளர் மத்தேயு, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட செயலா ளர் அமர்நாத், மாவட்ட பொருளாளர் தனலட்சுமி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் பாபுவை திருவண்ணாமலை மாவட் டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

    • வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராக பொறுப்பறே்றார்.
    • ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும்,

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 23 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ரமேஷ்குமார் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த பியூலா எப்சிபாய் குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராகவும், குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராக இருந்த சாதிக்பாட்சா, மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    உடுமலை ஒன்றிய ஆணையாளராக இருந்த சரவணன் ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராகவும், ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராக இருந்த சுரேஷ்குமார் குண்டடம் ஒன்றிய ஆணையாளராகவும், குண்டடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த பிரியா பல்லடம் ஒன்றிய ஆணையாளராகவும், பல்லடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த ரமேஷ் வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராகவும், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருந்த ஜோதி உடுமலை ஒன்றிய ஆணையாளராகவும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஸ்ரீதர் மூலனூர் ஒன்றிய ஆணையாளராகவும், மூலனூர் ஒன்றிய ஆணையாளராக இருந்த பாலசுப்பிரமணியன் மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த வெங்கடேசன் குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த கந்தசாமி பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மீனாட்சி ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சாந்திலட்சுமி ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    காங்கயம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ராகவேந்திரன் காங்கயம் ஒன்றிய ஆணையாளராகவும், காங்கயம் ஒன்றிய ஆணையாளராக இருந்த விமலாதேவி அவினாசி ஒன்றிய ஆணையாளராகவும், அவினாசி ஒன்றிய ஆணையாளராக இருந்த மனோகரன் பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மகேஸ்வரன் வெள்ளக்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், வெள்ளகோவில் வட்டாரவளர்ச்சி அதிகாரியாக இருந்த எத்திராஜ் மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராகவும், மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராக இருந்த செந்தில்கணேஷ்மலா குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சிவகுருநாதன் தாராபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணியிடம் குறித்த விவரம் பின்வருமாறு, 

    ரவிச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கள்ளக்குறிச்சி, ரங்கராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ரிஷிவந்தியம், ஆனந்தன் கண்காணிப்பாளர் கள்ளக்குறிச்சி, துரைசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிப் பிரிவு அலுவலக மேலாளரார் கள்ளக்குறிச்சி, செல்வபோதகர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) திருநாவலூர், செல்வகணேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சங்கராபுரம், ஆறுமுகம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கள்ளக்குறிச்சி, நடராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருநாவலூர், கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உளுந்தூர்பேட்டை, ரவிசங்கர் கண்காணிப்பாளர் ( TANFINET) கள்ளக்குறிச்சி, செல்லதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சங்கராபுரம, ராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) உளுந்தூர்பேட்டை, சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தியாகதுருகம், பன்னீர்செல்வம் கண்காணிப்பாளர் உதவி இயக்குனர் அலுவலகம் கள்ளக்குறிச்சி. துரைமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரிஷிவந்தியம், செந்தில் முருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தியாகதுருகம், இந்திராணி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சின்னசேலம் ஆகிய இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
    • பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. இதையடுத்து முகம்மது சம்சுதீன் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் தொடக்கத்தில் இருந்தே அவரது செயல்பாடுகள் பொது மக்களுக்கும், நகராட்சி கவுன்சிலர்களுக்கும் திருப்தி இல்லாத நிலையில் இருந்தது. எனவே அவரை மாற்றவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், நகராட்சித்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு மனுவும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளர் முகம்மது சம்சுதீன் திடீரென தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம்பவானிநகராட்சி ஆணையாளராக உள்ள தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    • மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார்.
    • சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த விஜய்பாபு சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சேலம் ஆவின் பொது மேலாளராக பணிபுரிந்து வந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அரசா ணையில் கூறப்ப ட்டுள்ளது.

    ×