search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "regional development officer"

    • வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராக பொறுப்பறே்றார்.
    • ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும்,

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 23 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ரமேஷ்குமார் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த பியூலா எப்சிபாய் குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராகவும், குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராக இருந்த சாதிக்பாட்சா, மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    உடுமலை ஒன்றிய ஆணையாளராக இருந்த சரவணன் ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராகவும், ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராக இருந்த சுரேஷ்குமார் குண்டடம் ஒன்றிய ஆணையாளராகவும், குண்டடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த பிரியா பல்லடம் ஒன்றிய ஆணையாளராகவும், பல்லடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த ரமேஷ் வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராகவும், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருந்த ஜோதி உடுமலை ஒன்றிய ஆணையாளராகவும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஸ்ரீதர் மூலனூர் ஒன்றிய ஆணையாளராகவும், மூலனூர் ஒன்றிய ஆணையாளராக இருந்த பாலசுப்பிரமணியன் மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த வெங்கடேசன் குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த கந்தசாமி பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மீனாட்சி ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சாந்திலட்சுமி ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    காங்கயம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ராகவேந்திரன் காங்கயம் ஒன்றிய ஆணையாளராகவும், காங்கயம் ஒன்றிய ஆணையாளராக இருந்த விமலாதேவி அவினாசி ஒன்றிய ஆணையாளராகவும், அவினாசி ஒன்றிய ஆணையாளராக இருந்த மனோகரன் பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மகேஸ்வரன் வெள்ளக்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், வெள்ளகோவில் வட்டாரவளர்ச்சி அதிகாரியாக இருந்த எத்திராஜ் மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராகவும், மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராக இருந்த செந்தில்கணேஷ்மலா குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சிவகுருநாதன் தாராபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரை தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலரை முற்றுக்கையிட்டனர்.

    ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரணம், பொன்பரப்பி, மருவத்தூர், வஞ்சனபுரம், ஆலத்தியூர் உள்ளிட பல்வேறு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திலும் இன்னும்  பல்வேறு  திட்டங்கள் செயல்படாமல் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேனை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதில் மாவட்ட தலைவர் பரமசிவம் ஒன்றிய தலைவர் சின்னபன், கந்தசாமி, பரணம் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செழியன், அண்ணாதுரை, அருணாசலம், சபரி, பாலு  உள்ளிட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
    ×